மேலும் அறிய

சமூக வலைதளங்களில் வந்த புகார்...! அதிகாரிகளுடன் களத்தில் இறங்கிய காஞ்சி எம்எல்ஏ...!

Kanchipuram MLA : " மழையும் பொருட்படுத்தாமல் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டார் "

பள்ளியில் குளம்போல் மழைநீர் தேங்கும் தகவலை சமூக வலைதளங்களின் மூலம் அறிந்த சட்டமன்ற உறுப்பினர் திடீரென அதிகாரிகளுடன் களமிறங்கி, கொட்டும் மழையிலும்  ஆய்வு மேற்கொண்டார்
 
 
காஞ்சிபுரத்தில் தொடர் கனமழை 
 
காஞ்சிபுரம் ( Kanchipuram Rain ) : காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு வார காலமாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, பேருந்து நிலையம், செவிலிமேடு, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியும், சாலையில் ஓரமாக மழை நீர் செல்லாமல் கழிவுநீருடன் ஆங்காங்கே நீர் தேங்கியும் வருகிறது.
 
பள்ளியில் குளம்போல் மழைநீர் தேங்குவதை அறிந்த சட்டமன்ற உறுப்பினர் திடீரென அதிகாரிகளுடன் களமிறங்கி கொட்டும் மழையிலும்  ஆய்வு மேற்கொண்டார்
பள்ளியில் குளம்போல் மழைநீர் தேங்குவதை அறிந்த சட்டமன்ற உறுப்பினர் திடீரென அதிகாரிகளுடன் களமிறங்கி கொட்டும் மழையிலும்  ஆய்வு மேற்கொண்டார்
 
 
சமூக வலைத்தளத்தில் எழுந்த புகார்
 
இந்நிலையில் தொடர்ந்த பெய்து வரும் கனமழையால் காஞ்சிபுரம் டாக்டர்.பி.எஸ். ஸ்ரீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மைதானத்தில் குளம் போல் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசி, கொசுக்கள் அதிகமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை டேக் செய்து பதிவுகள் செய்யப்பட்டு இருந்தன. குளம் போல் தேங்கி இருக்கும் மழை நீர் வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தனர்.
 
 காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் மேற்கொண்ட ஆய்வின்போது உடன் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர்
காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் மேற்கொண்ட ஆய்வின்போது உடன் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர்
 
 
 
களத்தில் இறங்கிய சட்டமன்ற உறுப்பினர்
 
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பள்ளியின் மைதானத்தில் அதிக மழை நீர் தேங்கி அசத்தும் ஏற்பட்டு வரும் செய்தி பரவி வருவதை அடுத்து, காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயரை தொடர்பு கொண்டு இதுகுறித்து விசாரித்தார். தொடர்ந்து அதிகாரிகளுடன் பள்ளிக்கு சென்று தேங்கி இருக்கும் கழிவு நீரை அப்புறப்படுத்தி சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். இதுபோன்று மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் சட்டமன்ற உறுப்பினர் சி.பி எம் பி எழிலரசன் கேட்டுக் கொண்டார். 
 
சட்டமன்ற உறுப்பினர் பள்ளிக்கு சென்று தேங்கி இருக்கும் கழிவு நீரை அப்புறப்படுத்தி சரி செய்யும் பணியை ஈடுபட்டனர்
சட்டமன்ற உறுப்பினர் பள்ளிக்கு சென்று தேங்கி இருக்கும் கழிவு நீரை அப்புறப்படுத்தி சரி செய்யும் பணியை ஈடுபட்டனர்
 
 
மழையும் பொருட்படுத்தாமல் ஆய்வு
 
சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டிருந்தபொழுது , திடீரென மழை பெய்தது. எனினும் கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல், சட்டமன்ற உறுப்பினர் அதிகாரிகளுக்கு பள்ளமாக இருக்கும் பகுதிகளில் மண்ணை கொட்டி நிரப்பி சமப்படுத்தி, இனி மழை தண்ணீர் தேங்காத அளவிற்கு இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மழையும் பொருட்படுத்தாமல் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டது, பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தலைப்பு செய்திகள்

TN Govt: 17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
"கூட்டணியில் இருந்தாலும் தவறை சுட்டிக்காட்டுவோம்" - நீட் விவகாரத்தில் தமிழக அரசை சாடிய விசிக விஜயரங்கன்!
Pa Ranjith: அமைச்சர் ராஜ்மோகன் மீது பா. ரஞ்சித்திற்கு ஏன் இவ்வளவு வன்மம்? சாதியை சொன்னது ஏன்? பழைய பகை?
அமைச்சர் ராஜ்மோகன் மீது பா. ரஞ்சித்திற்கு ஏன் இவ்வளவு வன்மம்? சாதியை சொன்னது ஏன்? பழைய பகை?

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
TN Govt: 17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
Best Anti-Theft Cars : ’திருடர்கள் கை வைக்க அஞ்சும் டாப் 10 கார்கள்’ உங்களிடம் இந்த கார்கள் இருக்கிறதா..?
’திருடர்கள் கை வைக்க அஞ்சும் டாப் 10 கார்கள்’ இதுதான் பயத்திற்கு காரணம்..!
Explained | ‘தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் நடந்தால் என்ன ஆகும்?’ விசாரணை எப்படி நடக்கும்?
’லாக்கப் மரண வழக்குகளில் விசாரணை’ நடைபெறும் முறை இதுதான்..!
Thoothukudi Lock-up Death : 'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
Embed widget