மேலும் அறிய

3 ஆண்டுகள் விட்டுக்கொடுத்தாச்சு... இனியும் சமரசமா? பார்த்துக்கலாம் - ஓபிஎஸ் திட்டவட்டம்!

அதிமுக கட்சியில் தொடரும் சர்ச்சை - ஓ.பன்னீர்செல்வம் செங்கொட்டையன் சந்திப்பு

அதிமுக கட்சியில் தலைமை யாருக்கு என்பது குறித்து சர்ச்சை தொடர்ந்து வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒற்றைத் தலைமை தொடர்பாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுக்குழுவை தற்காலிகமாக ஒத்திவைக்க சட்ட உதவியை நாட இருப்பதாக தம்பிதுரையிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களான மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 200-250 பேரிடம் கையெடுத்து வாங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. “இவ்வளவு காலம் நான் சமரசம் செய்துகொண்டேன். கடந்து 3 ஆண்டுகளாக சமரசம் செய்து கொண்டது போதும். இனியும் செய்துகொள்ள மாட்டேன். அதற்கு வாய்ப்பு இல்லை” என்று ஓ பன்னீர்செல்வம் கூறியதாக வெளிவரும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும், ஓ.பன்னீர்செல்வம் ஒற்றைத் தலைமைக்கு பதிலாக 14 உறுப்பினர்கள் கொண்ட உயர்நிலை செயல் திட்டக் குழு உருவாக்க வலியுறுத்த உள்ளதாகவும், இதுதொடர்பாக பேச ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு கே.ஏ.செங்கோட்டையன் வருகை தந்துள்ளார். 

அதிமுக தரப்பில் கடந்த சில நாட்களாக வெளிவந்த தகவலில்படி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கே அதிக ஆதரவு இருந்து வருகிறது. அதிமுகவில் உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 60க்கு மேற்பட்டோர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.  தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய தம்பிதுரை தற்போது ஓபிஎஸ் வீட்டிற்கு வருகை புரிந்து சமரச பேச்சில் ஈடுப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

அதேபோல், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு குறைவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. மேலும், ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டு வந்தால் கட்சியின் பெயர், சின்னம் முடக்கப்படும் என ஓபிஎஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இரட்டை தலைமை இருந்தால் அது என்றோ ஒருநாள் ஆபத்தாக முடியும் என அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் முடிவு செய்து விட்டனர். இதன் காரணமாக வருகிற ஜுன் 23 ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும், பொதுச்செயலாளர் பதவிக்கு தகுதியான ஒரு நபரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் வலுவான கோரிக்கை எழுந்து வருகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
Embed widget