மேலும் அறிய

Exclusive : 'கச்சத்தீவை திரும்ப பெறுவது சாத்தியமா?' - முன்னாள் துணைத் தூதர் நடராஜன் விளக்கம்

அரசியல் களத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ள கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இலங்கைக்கான இந்திய அரசின் முன்னாள் துணை தூதர் நடராஜன் ஏபிபி நாடுவிற்கு பேட்டியளித்தார்.

கேள்வி : கச்சத்தீவு தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையாக பார்க்க காரணம் என்ன?

பதில் : ”கச்சத்தீவு 285 ஏக்கர் அளவுள்ள சிறிய தீவு. இந்த தீவை கடந்த 1974 ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு கொடுத்தார். கச்சத்தீவு எப்போதும் ஒரு பிரச்சனையாகவே இருந்துள்ளது. 2009 ல் போர் முடிந்த பிறகு தமிழக மீனவர்கள் இலங்கைக்கு அருகே மீன் பிடிக்க சென்றதில் இருந்து இந்த பிரச்சனை அதிகமாகியது. பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் அனைத்து அரசியல் தலைவர்களும் கச்சத்தீவு பற்றி பேசுகிறார். பிரதமர் மோடி கூட இப்பிரச்சனை குறித்து பேசியுள்ளார். தேர்தல் சமயத்தில் கச்சத்தீவை பொருளாக எடுத்துக் கொண்டு திரும்ப பெற வேண்டுமென சொல்வது வாக்கு வாங்குவதற்காகவும் இருக்கலாம் என மக்கள் கருதுவார்கள்.

கச்சத்தீவை திரும்ப பெற முடியுமா? என்பது மிகப்பெரிய கேள்வி. என்னை பொருத்தவரை கச்சத்தீவை திரும்ப பெறுவது சாத்தியம் கிடையாது. நல்லிணக்க அடிப்படையில் கொடுக்கப்பட்ட தீவை, 50 ஆண்டுகள் கழித்து திரும்ப கேட்டால் இலங்கை அரசு ஒத்துக்கொள்ளாது. நாமும் அதை எடுக்க முடியாது. உச்ச நீதிமன்றம் கச்சத்தீவை பற்றி பேசக்கூடாது என ஒரு உத்தரவு கொடுத்துள்ளது. தமிழக மீனவர்கள் கடல் எல்லை தாண்டி மீன் பிடிக்க செல்வதால் கைது செய்யப்படுகிறார்கள். 2010 ம் ஆண்டில் இருந்து தற்போது வரை 7 ஆயிரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்திய அரசு இலங்கை அரசுடன் பேசி முந்தைய காலத்தில் இலங்கை எல்லைக்குள் இந்திய மீனவர்களும், இந்திய எல்லைக்குள் இலங்கை மீனவர்களும் மீன் பிடித்தது போல, எல்லை பார்க்காமல் மீன் பிடிக்க அனுமதித்தால் இப்பிரச்சனைக்கு தீர்வு வரும்”


Exclusive : 'கச்சத்தீவை திரும்ப பெறுவது சாத்தியமா?' - முன்னாள் துணைத் தூதர் நடராஜன் விளக்கம்

கேள்வி : கச்சத்தீவை அப்போதைய மாநில அரசுடன் கேட்டு தடுத்து தான் தந்ததாக பாஜக தலைவர் கூறுகிறார். ஒரு மாநில அரசு நினைத்து இருந்தால் அதனை தடுத்து இருக்க முடியுமா?

பதில் : ”கச்சத்தீவை பிரதமராக இருந்த இந்திரா காந்தி கொடுத்தார். இரண்டு நாடுகள் என வரும்போது, அது மத்திய அரசு சார்ந்த விஷயம். மாநிலம் சார்ந்த விஷயம் அல்ல. அதனால் மாநில அரசு கச்சத்தீவு விவகாரத்தில் எதுவும் செய்திருக்க முடியாது. மாநில அரசு போராட்டம் செய்து மத்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் வைக்க மட்டும் தான் முடியும். மற்றபடி முடிவு மத்திய அரசு தான் எடுக்க முடியும். 1974 ல் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி கச்சத்தீவை கொடுக்க வேண்டாம் என மத்திய அரசிடம் சொல்லியிருக்கத்தான் முடியும். வேறு எதுவும் செய்திருக்க முடியாது. இது முழுக்க முழுக்க மத்திய அரசின் முடிவு. இது நல்ல முடிவாக இருந்தாலும், இல்லையென்றாலும் அதற்கு மத்திய அரசு தான் பொறுப்பு”

கேள்வி : கச்சத்தீவை திரும்ப பெற வாய்ப்புகள் உள்ளதா?

பதில் : ”கச்சத்தீவை திரும்ப பெற வாய்ப்புகள் இல்லை. வலுக்கட்டாயமாக அதனை எடுக்கவும் முடியாது. அதற்காக சாத்தியமும் கிடையாது”

கேள்வி : கச்சத்தீவை திரும்ப பெற்றால் தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து விடுமா?

பதில் : ”ஒருவேளை கச்சத்தீவை திரும்ப பெற்றால் இந்திய மீனவர்கள் கஷ்டம் இருக்காது. அதேசமயம் யாழ்பாண மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அங்குள்ள மீனவர்கள் போருக்கு பின்னர் தற்போது தான் கடலுக்கு சென்று மீன் பிடிக்கிறார்கள். இரண்டு அரசுகள் ஒப்புக்கொண்டாலும், யாழ்ப்பாண மீனவர்கள் ஒப்புக் கொள்வார்களா என்பது கேள்விக்குறி தான்”

கேள்வி : தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?

பதில் : ”இந்திய கடல் பகுதியில் ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவித்தல், எல்லை தாண்டி இரண்டு நாட்டு மீனவர்களும் மீன் பிடிக்க அனுமதி வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் நிரந்தர தீர்வு காண வழிவகுக்கும்”

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Semester Exam Time Table: அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே நேரத்தில் செமஸ்டர் தேர்வுகள்; எப்போது?- ஆண்டு அட்டவணை வெளியீடு
Semester Exam Time Table: அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே நேரத்தில் செமஸ்டர் தேர்வுகள்; எப்போது?- ஆண்டு அட்டவணை வெளியீடு
"கேரளாவில் கணக்கை தொடங்கியாச்சு.. தமிழ்நாட்டில் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது" பிரதமர் மோடி பேச்சு!
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன் கடும் சாடல்
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன்
Embed widget