மேலும் அறிய

Ops: அடுத்தடுத்து 4 வீடுகள் மாறிய ஓபிஎஸ்.! இதுதான் காரணமா.? வெளியான ஷாக் தகவல்

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நந்தனத்தில் உள்ள புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் ஓபிஎஸ் 4 வீடுகளுக்கு மாறியுள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம், 2000 ஆம் ஆண்டு  டான்சி நிலப் பேரம் தொடர்பான வழக்குகளில் ஜெயலலிதாவுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் 2001 ஆம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலை அதிமுக வென்றாலும் அவரால் முதல்வராகப் பதவியேற்க முடியாத நிலை உருவானது.இதன் காரணமாக பல மூத்த தலைவர்கள் இருந்த போதும் யாரையும் நம்பாத ஜெயலலிதா 2001ஆம் ஆண்டு முதல் முறையாக எம்எல்ஏவான ஓ.பன்னீர் செல்வத்தை முதலமைச்சராக்கினார்.

இதனை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்தின் செல்வாக்கு அதிமுகவில் உயர தொடங்கியது. அதிமுக அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளிலும் ஓபிஎஸ் நீடித்து வந்தார்.  மீண்டும் 2016ஆம் ஆண்டு ஜெயலலிதாவிற்கு சொத்து குவிப்பு வழக்கில் சிக்கல் உருவான போது அப்போதும் நம்பிக்கைகுரியவராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கே முதலமைச்சர் பதவி சென்றது. ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த போதும், பொறுப்பு முதலமைச்சராகவும், ஜெயலலிதா மறைந்த பிறகு முதலமைச்சராகவும் ஓபிஎஸ் பொறுப்பு வகித்து வந்தார். இதனையடுத்து கட்சியில் நடைபெற்ற அடுத்தடுத்த மாற்றங்களால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனால் சட்டபோராட்டங்கள் தொடர்ந்த நிலையில் பின்னடைவே ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஏற்பட்டது. இதனையடுத்து மீண்டும் அதிமுகவில் இணைய எவ்வளவோ முயற்சி செய்தும் தற்போது பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளவே இல்லை. இதனால் தனி அணியாக ஓ.பன்னீர் செல்வம் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த 4 வருடங்களில் அடுத்தடுத்து 4 வீடுகளை காலி செய்து புதிய வீடுகளுக்கு குடிபெயர்ந்து உள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு வீட்டை காலி செய்ய அவகாசம் கேட்டார். அரசும் கூடுதல் அவகாசம் வழங்கியது.

இதனையடுத்து 2022ஆம் ஆண்டு ஆழ்வார்பேட்டை வீட்டிற்கு சென்ற நிலையில், அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதலால் தனித்து விடப்பட்டார். இதனால் அந்த வீடு ராசியில்லையென கூறி தியாகராய நகருக்கு சென்றார். அங்கு சில மாதங்கள் மட்டுமே தங்கியிருந்தார். இதனையடுத்து கடந்த 2024ஆம் ஆண்டு கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஒரு வீட்டிற்கு குடியேறினார். அங்கும் சில மாதங்களே இருந்த நிலையில் தற்போது அங்கிருந்து புதிய வீட்டிற்கு மாறியுள்ளார். நந்தனம் அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றில்  2வது தளத்தில் அவர் தங்குவதற்கான வீடும், அதே பிளாட்டில் முதல் தளத்தில்  அலுவலகம் செயல்பட உள்ளது. 

இதனையடுத்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பாதுகாப்பு வழங்கி வரும் காவலர்களும் நந்தனம் குடியிருப்பு மாறியுள்ளனர். ஆன்மிகத்தில் அதிக நம்பிக்கை கொண்ட ஓ.பன்னீர் செல்வம் எந்த காரியம் செய்தாலும் கோயில்களுக்கு சென்ற பிறகு முடிவெடுப்பார். இதே போல ஜோசியத்திலும் அதிக நம்பிக்கையின் காரணமாக ஜோசியர் கூறியதன் அடிப்படையிலேயே தற்போது வீடு மாறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே புது வீடாவது ஓ.பன்னீர் செல்வத்திற்கு அதிமுகவில் இணைய வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்குமா.? என்பதை காலம் தான் முடிவு செய்யும். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget