மேலும் அறிய

வாக்கு செலுத்திய ஜெய்சங்கர்.. சான்றிதழ் வழங்கி கெளரவித்த தேர்தல் ஆணையம்.. அப்படி என்ன ஸ்பெஷல்?

Jaishankar: வாக்கு செலுத்துவது என்பது அனைவரின் ஜனநாயக கடமை. இப்படியிருக்க, ஜெய்சங்கருக்கு மட்டும் இந்திய தேர்தல் ஆணையம் சான்றிதழ் வழங்கி கெளரவித்தது ஏன் என்பது கேள்வியாக எழுந்துள்ளது.

Jaishankar Certificate: இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கிய தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

6ஆம் கட்ட தேர்தல்: வரும் ஜூன் 1ஆம் தேதி, கடைசிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதுவரை நடந்த 5 கட்ட வாக்குப்பதிவில் நாடு முழுவதும் உள்ள 428 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ராஜஸ்தான், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், 6ஆம் கட்டமாக 58 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடந்து வருகிறது. தேசிய தலைநகரான டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உள்பட நாட்டின் முக்கிய தலைவர்கள் இன்று ஜனநாயக கடமையை ஆற்றினர். அந்த வகையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இன்று டெல்லியில் வாக்களித்தார். இதற்காக அவருக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ஜெய்சங்கருக்கு சான்றிதழ் வழங்கியது ஏன்? வாக்கு செலுத்துவது என்பது அனைவரின் ஜனநாயக கடமை. இப்படியிருக்க, ஜெய்சங்கருக்கு மட்டும் இந்திய தேர்தல் ஆணையம் சான்றிதழ் வழங்கி கெளரவித்தது ஏன் என்பது கேள்வியாக எழுந்துள்ளது. அதற்கான பதிலை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

ஜெய்சங்கர் வாக்கு செலுத்திய வாக்குப்பதிவு மையத்தில் அவரே முதல் ஆண் வாக்காளர் என்பதால் ஊக்கப்படுத்தும் விதமாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ஜெய்சங்கர், "இந்த வாக்குச் சாவடியில் நான்தான் முதல் ஆண் வாக்காளர்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "நாட்டுக்கு இது ஒரு தீர்க்கமான தருணம் என்பதால் மக்கள் வெளியே வந்து வாக்களிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று உறுதியாக நம்புகிறேன்" என்றார்.

தேர்தல் ஆணையம் கொடுத்த சான்றிதழுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் ஜெய்சங்கர் முன்னதாக பகிர்ந்தார். டெல்லியை பொறுத்தவரையில் பாஜக தனித்து களமிறங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

பீகார், மேற்குவங்கத்தில் தலா 8 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. டெல்லியில் 7 தொகுதிகளுக்கும் ஹரியானாவில் 10 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடந்து வருகிறது. ஜார்க்கண்டில் 4 தொகுதிகளுக்கும் உத்தர பிரதேசத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai Questions Stalin: யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
TVK in Trouble: ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும்  இத்தனை ஆயிரம் கோடியா ?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும் இத்தனை ஆயிரம் கோடியா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Prashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Questions Stalin: யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
TVK in Trouble: ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும்  இத்தனை ஆயிரம் கோடியா ?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும் இத்தனை ஆயிரம் கோடியா ?
IPL 2025: ஐபிஎல் போட்டிகளில் இதற்கு தடை! மத்திய அரசே நேரடியாக போட்ட உத்தரவு!
IPL 2025: ஐபிஎல் போட்டிகளில் இதற்கு தடை! மத்திய அரசே நேரடியாக போட்ட உத்தரவு!
Minister ponmudi: இந்தி மொழியை படிக்கலாம் தவறில்லை... ஆனால்! பொன்முடி பேசியது என்ன?
Minister ponmudi: இந்தி மொழியை படிக்கலாம் தவறில்லை... ஆனால்! பொன்முடி பேசியது என்ன?
TCS New Campus : ஒரே நேரத்தில் 25,000 பேர்... சென்னையில் மாஸ் காட்டும் TCS.. காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்...
TCS New Campus : ஒரே நேரத்தில் 25,000 பேர்... சென்னையில் மாஸ் காட்டும் TCS.. காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்...
Rohit Sharma:
Rohit Sharma: "இன்னும் ஒன்னு மட்டும் பாக்கி இருக்கு.." ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா ஓய்வு பெற மறுத்தது ஏன்?
Embed widget