மேலும் அறிய

சொத்து வரி உயர்வு வாக்களித்த மக்களுக்கு திமுக அளித்துள்ள பரிசு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது சொத்து வரியா, மக்களின் சொத்துகளை பறிக்கும் வரியா என பேசினார்.

தமிழக அரசு அறிவித்துள்ள சொத்து வரி உயர்வு கண்டிக்கத்தக்கது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் கோடைகாலத்தில் பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தலைவாசல், ஆத்தூர் மற்றும் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி பழங்களையும் அவர் வழங்கினார்.

சொத்து வரி உயர்வு வாக்களித்த மக்களுக்கு திமுக அளித்துள்ள பரிசு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

இதனை தொடர்ந்து தலைவாசலில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், நகர்ப்புற தேர்தல் முடிந்த உடன் திட்டமிட்டு சொத்து வரி 150 சதவீதம்  உயர்த்தி உள்ளனர். சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது வாக்களித்த மக்களுக்கு திமுக அளித்துள்ள பரிசு என்று கூறினார். கொரோனா பாதிப்பு காலத்தில் இந்த அளவிற்கு வரி உயர்வு கண்டிக்கத்தக்கது. ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது சொத்து வரியா, மக்களின் சொத்துகளை பறிக்கும் வரியா என பேசினார். தற்போது இது அவருக்கு பொருத்தமாக இருக்கும்.

சொத்து வரி உயர்வு வாக்களித்த மக்களுக்கு திமுக அளித்துள்ள பரிசு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

தமிழகத்தில் போதை பொருட்கள் சர்வசாதாரணமாக இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் கிடைக்கிறது. அவர்களின் எதிர்காலம் பாழாகும் என பெற்றோர் அஞ்சுகின்றனர். திமுக ஆட்சியில் கடந்த 2 மாதமாக கூட்டு பாலியல் பலாத்காரம், சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர். இது ஆபத்தானது. திமுக அரசு திறமையான அரசு இல்லை என்பதை உணர்த்துகிறது. பிரதமரை இழிவுபடுத்தும் அளவுக்கு அரசியல் நாகரீகம் தெரியாதவர் ஸ்டாலின். கோ பேக் மோடி என்று முழக்கமிட்ட நிலையில் தற்போது இரண்டு முறை பிரதமரை சந்தித்து வந்துள்ளார் என்று கூறினார். மத்தியில் நல்ல வரவேற்பு தந்ததாக கூறுபவர்கள் எதற்கு மத்திய அரசை வசைபாடவேண்டும். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் ஏராளமான திட்டங்கள் தமிழகத்திற்கு கொண்டு வரமுடியும். அப்படிதான் அதிமுக ஆட்சியில் திட்டங்கள் தந்தோம். அதிமுகவை மத்திய அரசுக்கு காவடி தூக்குவதாக பேசியவர்கள் இப்போது என்ன தூக்கி செல்கின்றனர் என மக்கள் கேட்கின்றனர்.

நான் முதல்வராக இருந்தபோது எனது குடும்பத்தினரை வெளிநாட்டிற்கு அழைத்து சென்றதாக கூறிய நெறியாளர் மீது வழக்கு தொடுப்போம். திமுக ஆட்சியில் நில அபகரிப்பு வந்துவிடும். இதனை தடுக்க அதிமுக ஆட்சியில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு கொண்டுவரப்பட்டது. தற்போது மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சியில் உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் திமுகவினர் மீது நில அபகரிப்பு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.