மேலும் அறிய

“தூத்துக்குடி சூழலை ஏற்படுத்த துடிக்கிறது காவிக்கூட்டம்” - டிஆர்பி.ராஜா ஆவேசம்..

தமிழகத்தில் மேலும் ஒரு தூத்துக்குடி சூழலை ஏற்படுத்த காவிக்கூட்டம் துடிக்கிறது என்று திமுக ஐடிவிங் செயலாளரும் எம்எல்ஏவுமான டிஆர்பி.ராஜா கூறியுள்ளார்.

தமிழகத்தில் மேலும் ஒரு தூத்துக்குடி சூழலை ஏற்படுத்த காவிக்கூட்டம் துடிக்கிறது என்று திமுக ஐடிவிங் செயலாளரும் எம்எல்ஏவுமான டிஆர்பி.ராஜா கூறியுள்ளார்.

கலவரமான போராட்டம்:

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இச்சம்பவத்திற்கு நியாயம் கேட்கிறேன் என்ற பெயரில் நேற்று தொடங்கிய போராட்டம் கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தில் தனியார் பள்ளி முற்றிலும் சூறையாடப்பட்டதோடு பள்ளிப் பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. காவல்துறையினரின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த கலவரத்தில் பல்வேறு காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டது.

அதிமுகவினர் கைது:

இந்த கலவரம் தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் இரண்டு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், கலவரத்தில் ஈடுபட்டவர்களை கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆசிரியர்கள் கைது செய்யப்படவில்லை, பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சரமாரியாக புகார்கள் எழுந்தன.

ராஜா ட்வீட்:

இந்நிலையில், இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள எம்எல்ஏவும் திமுக ஐடி விங் செயலாளருமான டி.ஆர்.பி.ராஜா, “குற்றம் சாட்டப்பட்டுள்ள பள்ளி நிர்வாகிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சிபிசிஐடி-க்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது . இந்த துயரமான சம்பவத்தில் கூட கேவலமான அரசியல் ஆதாயம் தேடியிருக்கும் கயவர்கள் மீதும் "நடவடிக்கைகள்" தேவை ! அனைத்து குற்றவாளிகளும் நிச்சயம் சட்டபடி தண்டிக்கப்படுவார்கள்.” என்று கூறியுள்ளார்.

”மேலும் ஒரு தூத்துக்குடி சூழல்”

மேலும், “சம்பவம் நடந்த அன்றே காவல் துறையினர் அவர்களது பணியை துவங்கியுள்ளனர். அமைச்சர் கணேசன் அவர்களும் உயர் அதிகாரிகளும் நேரில் சென்று விசாரித்தனர். இதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக இந்த சம்பவத்தை பயன்படுத்தி தமிழகத்தில் மேலும் ஒரு தூத்துக்குடி சூழலை ஏற்படுத்த காவிக்கூட்டம் துடிக்கிறது.” என்று குற்றம்சாட்டியுள்ளார். ”பள்ளி நிர்வாகம், சம்பவத்தை சமூக வலைதளங்களில் தூண்டிவிட்டு கலவரச் சூழலை உருவாக்கியவர்கள், இதை காரணமாக சொல்லி தமிழகம் எங்கும் பள்ளிகள் இயங்காமல் இருக்கும் சூழலை உருவாக்க முயன்ற தற்குறிகள் என்று அனைவருமே சங்கி மந்திகள் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதற்கு பல சாட்சிகள் இருக்கின்றன.”

”மாணவிக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்:”

“இப்படிப்பட்ட அசாதாரண சூழலில் எதையும் தீர விசாரிக்காமல் பதிவிடுவதை தவிர்க்குமாறு விங்கிற்கு  அறிவுறுத்தப்பட்டது. இச்சம்பவம் குறித்து அவசரகதியில் பதிவிடக்கூடாது என உடன்பிறப்புகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எதிரி எதிர்பார்த்தது "இரண்டாம் தூத்துக்குடி" இதில் யாருக்கும் சந்தேகமில்லை..” என்று டிஆர்பிராஜா கூறியுள்ளார்.

இறுதியாக “நியாயமான விசாரணை நடைபெறும். மாணவியின் குடும்பத்துக்கு நிச்சயம் நீதி கிடைக்கும். இந்த சம்பவத்தில் அரசியல் லாபத்திற்காக கீழ்தரமான செயல்களை செய்திருக்கும் அரசியல் சாக்கடைகளுக்கு மக்கள் பாடம் கற்பிப்பது உறுதி. நிலைமையை தடம் பிறழாமல் மிக ஜாக்கிரதையாக கையாண்ட முதல்வருக்கு நன்றிகள்" என்று கூறியுள்ள டி.ஆர்.பி.ராஜா, "சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் வகையில் போடப்பட்ட அனைத்து பதிவுகளையும் திமுக ஐடி விங் தொடர்ந்து பதிவிறக்கி வருகிறது. அனைத்தும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படும். கலவரத்தை தூண்டிய அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை தொடரும்” என்று டி.ஆர்.பி.ராஜா தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
Gold and silver rate today : சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Embed widget