மேலும் அறிய

'தனது பதவியை ராஜினாமா செய்து முதல்வர் ஸ்டாலினுக்கு திமுக எம்.எல்.ஏ கடிதம்?’ ABP நாடுவிற்கு MLA Exclusive தகவல்..!

’அமைச்சர் கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான புகார்களை சொல்லி பக்கம் பக்கமாக கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது’

லால்குடி திமுக எம்.எல்.ஏ சவுந்தரபாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்து, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சவுந்திரபாண்டியன் எம்.எல்.ஏ
சவுந்திரபாண்டியன் எம்.எல்.ஏ

கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான புகார்..?

திமுக முதன்மை செயலாளரும் நகர்புற நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவராலேயே தான் செயல்பட முடியாத நிலையில் இருப்பதாகவும் அதனால் தனக்கு எம்.எல்.ஏ பதவியே வேண்டாம் என்று கூறி 10 பக்கங்களுக்கு குறையாமல் எம்.எல்.ஏ சவுந்தரபாண்டியன் கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படும் தகவல் திருச்சியில் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்று கேன்.என்.நேரு தரப்பே ஆர்டர் போடுவதாகவும், டெண்டர் உள்ளிட்ட விவகாரங்களில் அமைச்சர் நேருவின் உறவினர்கள் தலையிட்டு எம்.எல்.ஏக்களுக்கு குடைச்சல் கொடுப்பதாவும் கூறி துறையூர், முசிறி, லால்குடி, மண்ணாச்சநல்லூர், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் திருச்சி அரசியலில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால், வெளிப்படையாக அதனை யாருமே இதுவரை காட்டிக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

கே.என்.நேரு
கே.என்.நேரு

நேரு நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணித்த எம்.எல்.ஏ

இந்நிலையில்தான், சுதந்திர தினத்தையொட்டி  கடந்த 14ஆம் தேதி லால்குடி தொகுதியில் அரசு நலத்திட்டங்கள், காணகிளியநல்லூரில் புதிய ஊராட்சி மன்ற கட்டடம், புதிய அங்கன் வாடி மையம் உள்ளிட்டவற்றை நேரு தொடங்கி வைத்தார். ஆனால், அந்த நிகழ்ச்சி குறித்த கல்வெட்டில் லால்குடி திமுக எம்.எல்.ஏ சவுந்தரபாண்டியன் பெயர் போடப்பட்டும் அவர் அதில் பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. உள்ளூரில் இருந்துகொண்டே அவர் கே.என். நேரு நிகழ்ச்சியை புறக்கணித்ததால் அவருக்கு நேரு மீது அதிருப்தி இருப்பதாக தெரியவந்தது. இந்த  சூழலில்தான், அவர் முதல்வருக்கு பக்கம் பக்கமாக கடிதம் எழுதி தன்னுடைய மன குமுறல்களை கொட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

சவுந்தரபாண்டியன்
சவுந்தரபாண்டியன்

கே.என்.நேரு வெற்றி பெற்ற தொகுதி - கே.என்.நேருவால் வெற்றி பெற்றவர் சவுந்தரபாண்டியன்

கேன்.என்.நேரு முதன் முதலாக எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றது  இதே லால்குடி தொகுதியில்தான். அந்த தொகுதிக்கு உட்பட்டுதான் அவரது சொந்த கிராமமான கானக்கிளியநல்லூரும் இருக்கிறது. தான் திருச்சியில் போட்டியிட லால்குடியில் இருந்து நகர்ந்தபோது, அந்த தொகுதிக்கு நேருவின் சாய்ஸ்சாக இருந்தது தற்போதைய எம்.எல்.ஏ சவுந்தரபாண்டியதான்.  அவர் நான்கு முறை லால்குடி தொகுதியில் வெற்றி பெற வைத்தவரும் கே.என்.நேருதான். ஆனால், எப்போதும் தான் சொல்வதைதான் கேட்க வேண்டும் என்பது, வார்த்தைகளில் கடினம் காட்டுவது மாதிரியான தோரணையில் நேரு செயல்படுவது போன்ற காரணங்களால் 4 முறை அதே தொகுதியில் வெற்றி பெற்றுள்ள சவுந்தரபாண்டியனுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது என அந்த தொகுதிக்குள் பேசிக்கொள்ளப்படுகிறது.

கல்வெட்டில் பெயர் போட்டும் கலந்துகொள்ளாத எம்.எல்.ஏ
கல்வெட்டில் பெயர் போட்டும் கலந்துகொள்ளாத எம்.எல்.ஏ

’பஞ்சாயத்து’ நேரு

திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளிடையே ஏற்படும் பிரச்னையை சரி செய்து வைக்க ‘பஞ்சாயத்து’ பேசும் நபராக அறியப்படும் கே.என். நேரு மாவட்டத்திலேயே இப்போது பஞ்சாயத்துகளுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. அதுவும் ,அவர் மீதே குற்றச்சாட்டுகளும் புகார்களும் எழுந்திருப்பதாக கூறப்படும் தகவலால் அறிவாலய வட்டாரமே பரபரப்பாக காணப்படுகிறது.

கடிதமும் எழுதவில்லை. நேரு மீது அதிருப்தியும் இல்லை - விளக்கம் அளித்த திமுக எம்.எல்.ஏ

இப்படியான சூழலில் லால்குடி திமுக எம்.எல்.ஏ சவுந்திரபாண்டியன் உண்மையிலேயே அமைச்சர் கேன்.என்.நேரு மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி, தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன் என கூறி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருக்கிறாரா என்பதை நாம் அவரிடமே நேரடியாக தொடர்புகொண்டு கேட்டோம், அதற்கு அவர் ‘அப்படி எந்த ஒரு கடிதத்தையும் தான் முதல்வருக்கு எழுதவில்லை என்றும், கேன்.என்.நேரு மீது தனக்கு அதிருப்தியும் இல்லை எனவும் தெரிவித்தார். அதோடு, இப்படியான தகவலை யாரோ திட்டமிட்டே பரப்பிவிடுகிறார்கள் என்றும் கூறினார்.’

 

 

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார் - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார் - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Lok Sabha Election 2024 LIVE:ஆந்திராவில் ஆங்காங்கே மோதல், கல்வீச்சு! வாக்காளர்கள் மத்தியில் பரபரப்பு!
Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் ஆங்காங்கே மோதல், கல்வீச்சு! வாக்காளர்கள் மத்தியில் பரபரப்பு!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala : Red Pix Felix Wife : ”FELIX உயிருக்கு ஆபத்துஎன் கணவர் எங்கே?” பெலிக்ஸ் மனைவி கேள்விEV Velu Son Car Accident : கார் விபத்தில் சிக்கிய மகன் கலக்கத்தில் எ.வ.வேலு பதற வைக்கும் CCTV காட்சிAsaduddin Owaisi plays cricket : கிரிக்கெட் ஆடிய ஓவைசி! குதூகலமான சிறுவர்கள்! பிரச்சார சுவாரஸ்யம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார் - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார் - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Lok Sabha Election 2024 LIVE:ஆந்திராவில் ஆங்காங்கே மோதல், கல்வீச்சு! வாக்காளர்கள் மத்தியில் பரபரப்பு!
Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் ஆங்காங்கே மோதல், கல்வீச்சு! வாக்காளர்கள் மத்தியில் பரபரப்பு!
TN Weather Update: சுட்டெரிக்கும் சூரியன் ஒருபக்கம்.. அடித்து வெளுக்கும் மழை ஒருபக்கம்.. வானிலை எப்படி இருக்கும்?
சுட்டெரிக்கும் சூரியன் ஒருபக்கம்.. அடித்து வெளுக்கும் மழை ஒருபக்கம்.. வானிலை எப்படி இருக்கும்?
Metro Train: சிறுசேரி- கிளாம்பாக்கம் கிடையாதாம்! திருப்போரூர் - கேளம்பாக்கம் மாற்றுப்பாதையில் மெட்ரோ சேவை?
சிறுசேரி- கிளாம்பாக்கம் கிடையாதாம்! திருப்போரூர் - கேளம்பாக்கம் மாற்றுப்பாதையில் மெட்ரோ சேவை?
CBSE Board Result 2024: சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - காண்பது எப்படி?
CBSE Board Result 2024: சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - காண்பது எப்படி?
பள்ளி வாகனத்திற்கு விபத்து ஏற்பட்டால்  ஓட்டுநர் உரிமம் ரத்து - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
பள்ளி வாகனத்திற்கு விபத்து ஏற்பட்டால் ஓட்டுநர் உரிமம் ரத்து - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
Embed widget