மேலும் அறிய

"தற்போதைய ஏஜி திமுகவின் தீவிர ஆதரவாளர்", நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் சென்ற குருமூர்த்தி!

ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) கடுமையாக விமர்சிப்பவர் என்பதால் பழிவாங்குகிறார்கள் என்றும் குருமூர்த்தி குற்றம் சாட்டினார்.

துக்ளக் இதழின் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி, செப்டம்பர் 27, 2021 அன்று அட்வகேட் ஜெனரல் (ஏஜி) ஆர். சண்முகசுந்தரம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

2021 ஜனவரி 14 அன்று துக்ளக் இதழின் வாசகர்களுடனான வருடாந்திர சந்திப்பின் போது நீதித்துறை பற்றி குருமூர்த்தி கருத்து தெரிவித்ததற்காக மனுதாரர் மீது கிரிமினல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்திருந்தார் முன்னாள் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண். அதற்கு பின் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்ட ஆர். சண்முகசுந்தரம் மார்ச் 31, 2021 அன்று பிறப்பித்த உத்தரவை திரும்பப்பெற்றார்.

துக்ளக் பத்திரிகையை நிறுவி, அதன் ஆசிரியராக இருந்த சோ அனைவரும் மதிக்கப்படும் அரசியல் விமர்சகராக இருந்தார். அனைத்துக் கட்சிகளிலும் அவருக்கு நண்பர்கள் இருந்தனர். ஆண்டுதோறும் பொங்கல் தினத்தன்று துக்ளக் ஆண்டு விழா நடக்கும். அப்போது துக்ளக் வாசகர்களுடன் உரையாடுவதையும், அவர்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பதையும் அவர் வாடிக்கையாக வைத்திருந்தார். அப்போது அவர் கூறும் கருத்துகள் நகைச்சுவையுடனும், ஏற்கும்படியாகவும் இருக்கும் என அனைவரும் அவரது பேச்சைக் கூர்ந்து கவனிப்பார்கள். சோவின் மறைவுக்குப் பின் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் ஆடிட்டர் குருமூர்த்தி. அவர் சோ பாணியில் 2021 பொங்கல் அன்று அரசியல் பேசினார். சாக்கடையை எடுத்து அவசரத்திற்குத் தீயை அணைக்கப் பயன்படுத்தலாம் என அதிமுக கூட்டணியையும், சசிகலா அதிமுகவில் இணைந்தாலும் பயன்படுத்தலாம் என்கிற ரீதியில் குருமூர்த்தி பேசியதால் சசிகலா தரப்பிலும் கண்டனம் எழுந்தது.

அதே கூட்டத்தில் நீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்தும் குருமூர்த்தி பேசியது சர்ச்சையை எழுப்பியது. நீதிபதிகள் நியமனம் குறித்தும், நேர்மை குறித்தும், தீர்ப்புகள் குறித்தும் விமர்சிப்பதா என அவருக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி, குருமூர்த்தியின் விமர்சனம் குறித்துத் தெரிவித்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அதற்கு அப்போதைய ஏஜி விஜய் நாராயண் ஒப்புதல் அளிக்க மறுத்து ஆட்சி மாறியதும் அதனை திரும்பப்பெற்ற வழக்கில் குருமூர்த்தி ஏஜி நியமனங்கள் மீதே குற்றம் சாட்டி ரிட் மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்த ரிட் மனு நீதிபதி அனிதா சுமந்த் முன் கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ். துரைசாமியின் விருப்பப்படி, தற்போதைய ஏ-ஜி மறுபரிசீலனை மனு மீதான உத்தரவை பிறப்பித்ததால், மனுதாரர் தனது வழக்கில் வழக்கறிஞரை மட்டும் எதிர்மனுதாரராக இணைத்திருந்தார். அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு அப்போதைய ஏ-ஜியின் ஒப்புதலைக் கோரி கடந்த ஆண்டு ஜனவரியில் வழக்கறிஞர் தாக்கல் செய்த விண்ணப்பம், நாராயண் அத்தகைய ஒப்புதலை வழங்க மறுத்ததன் மூலம் ஒரு தர்க்கரீதியான முடிவை எட்டியதாக அவர் வாதிட்டார்.

இவை இப்படி இருக்க, மே 2021 -இல் ஆட்சிமாற்றத்திற்கு பிறகு ஏ-ஜி அலுவலகத்தில் மாற்றம் ஏற்பட்டபோது, துரைசாமி ஒரு மறுபரிசீலனை மனுவைத் தாக்கல் செய்ததும் அது உடனடியாக அனுமதிக்கவும் பட்டது. இது போன்ற ஒரு நடவடிக்கை முன்னெப்போதும் இல்லாதது என்று குருமூர்த்தி கூறினார். நீதிமன்ற அவமதிப்புச் சட்டம், 1971 இன் விதிகளுக்கு முரணானது என்றும் கூறினார். பிறப்பித்த உத்தரவை திரும்பப்பெறும் நடவடிக்கைக்கு பின்னால் ஒரு "நோக்கம்" இருப்பதாகவும், ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) கடுமையாக விமர்சிப்பவர் என்பதால் பழிவாங்குகிறார்கள் என்றும் குருமூர்த்தி குற்றம் சாட்டினார். "நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு ஒப்புதல் கோரிய வழக்கறிஞர், இப்போது ஆட்சியில் இருக்கும் திமுகவின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார், மேலும் தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஏஜி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் நியமனம் செய்யப்பட்டவர்,” என்று மனுதாரரின் பிரமாணப் பத்திரத்தை வாசித்து 'அனைத்து நீதித்துறை நடவடிக்கைகளும், சந்தேகத்திற்கு இடமில்லாத நபர்களால் கையாளப்பட வேண்டும்' என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வலியுறுத்தினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget