மேலும் அறிய

Watch Video: ‛புலியெல்லாம் எனக்கு எலி மாதிரி...’ பாயும் புலி முன் ரிலாக்ஸ் வீடியோ எடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

பார்த்தாலே பயம் வரவழைக்கும் புலியோடு , சாதாரணமாக சகஜமாக பழகிக் கொண்டு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள இந்த வீடியோ, அவரது தைரியத்தை மேலும் காட்டுவதாகவே உள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிரடி கருத்துக்களை கூறுபவர். அதிமுக தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை அடுத்தடுத்து சலிக்காமல் தெரிவிப்பவர். அமைச்சராக இருந்த போதும், முன்னாள் அமைச்சராக மாறி பிறகும், தான் கொண்ட கருத்தில் உறுதியாக நிற்பவர்.

இரட்டைத் தலைமையாக இருந்த அதிமுக, ஒற்றைத் தலைமையாக மாற முக்கிய காரணமாக இருந்தவர். இப்படி பல்வேறு புகழுக்கும் பெருமைகளுக்கும் சொந்தக்காரர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஓட்டுப் பதிவின் போது , திமுக தொண்டர் ஒருவரை அரை நிர்வாணப்படுத்தி அழைத்துச் சென்றதாக அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் நிபந்தனை ஜாமினில் வந்து, அதையும் கொண்டாட்டமாகவே கடந்து, பலரையும் வியப்பில் ஆழ்த்தியவர்.


Watch Video: ‛புலியெல்லாம் எனக்கு எலி மாதிரி...’ பாயும் புலி முன் ரிலாக்ஸ் வீடியோ எடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

அவரது சமூக வலைதள பக்கம் கொஞ்சம் கலகலப்பானது. அவரும் கலகலப்பானவர் என்பதால், அவரது பதிவும் பெரும்பாலும் கவனிக்கப்படும். அந்த வகையில் இன்று சற்று முன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த பலருக்கும் ஒரே பயம் கலந்த அதிர்ச்சி.

இன்று சர்வதேச புலிகள் தினமாம். அதற்காக, அவர் புலியோடு இருக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்து, அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளார். உயிரோடு நிற்கும் ஆளுயர புலியின் அருகில் நின்று கொண்டும், தடவிக் கொண்டும், அமர்ந்து கொண்டும், விதவிதமான வீடியோக்களை எடுத்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 

‛‛சர்வதேச புலிகள் தினம்..

வனத்தின் ஆதாரமே புலிகள் தான்

புலிகளை காப்பது நம் கடமை

அவை நமது பொக்கிஷம்

வனம் காப்போம்

புலிகளை காப்போம்

மழை பெறுவோம்!

என்று வாசகத்தையும் வெளியிட்டுள்ளார். 

பார்த்தாலே பயம் வரவழைக்கும் புலியோடு , சாதாரணமாக சகஜமாக பழகிக் கொண்டு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள இந்த வீடியோ, அவரது தைரியத்தை மேலும் காட்டுவதாகவே உள்ளது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த பதிவை, அவரது ஆதரவாளர்கள், ‛ஆஹா... ஓஹோ...’ என புகழ்ந்தும் பதிவிட்டு வருகின்றனர். 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Embed widget