மேலும் அறிய

OPS: தலைவர்களுக்கு முன்பே தொண்டர்கள் இணைந்தனர்..மக்களின் நிலைப்பாடு இதுதான்.. ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

அனைவரும் ஓண்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் நிலைப்பாடு என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை உசிலம்பட்டி எம்.எல்.ஏ. ஐயப்பன் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

எம்.எல்.ஏ. ஐயப்பன் சந்திப்பு:

சென்னையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. ஐயப்பன் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதனை தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் ஐயப்பன் ஆகிய இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஓபிஎஸ், அதிமுக ஒன்றாக இருக்கும் வேண்டும் என்பதே தொண்டர்களின் நிலைப்பாடு என தெரிவித்தார்.

மேலும் பேசிய ஓபிஎஸ், எங்களின் எண்ணம், செயல் எல்லாம் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே. இதுவே அதிமுக தொண்டர்களின் நிலைப்பாடாக உள்ளது. பொதுக்குழு என்ற பெயரில் நடத்தப்பட்ட நாடகத்தால், தொண்டர்கள் அனைவரும் தற்போது ஒன்றாக இணைய வேண்டும் என்று, ஆதரவு தெரிவித்து வருகின்றனர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின், கட்சி இரண்டாக பிளவுப்பட்டது. அப்போது தேர்தலை சந்தித்து தோல்வியுற்றோம். அதனை தொடர்ந்து கட்சி நிலையை கருத்தில் கொண்டு தலைவர்கள் இணைவதற்கு முன்பே தொண்டர்கள் இணைந்தனர்.

தொண்டர்கள் இணைய வேண்டும்

அதேபோன்றுதான், தற்போதும் தொண்டர்கள் இணைய வேண்டும் என தெரிவித்து இணைந்து வருகின்றனர். மேலும், அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தி, மாவட்டந்தோறும் பேரணிகள் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.  

பொதுக்குழு செல்லாது என நீதிமன்றம் தெரிவித்ததை தொடர்ந்து, முன்பிருந்த நிலை தொடரும் என உத்தரவு தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, பேசிய ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமிக்கும் எனக்கும் இருந்த பிரச்சனையால் அதிமுகவின் 1.30 கோடி தொண்டர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது. அதிமுக தொண்டர்கள் அனைவரும் நாங்கள் ஒன்றாக இணைய வேண்டும் என்ற ஒருமித்த கருத்தோடு இருக்கிறார்கள். பல பகுதிகளில் இருந்து அந்த செய்திகள் எங்களுக்கு வந்து கொண்டு இருக்கின்றனர். அதன் காரணமாக இதற்கு முன்னாள் ஏற்பட்ட அனைத்து கசப்பான விஷயங்களை மறந்து மீண்டும் இணைய வேண்டும் என்று ஓபிஎஸ் தெரிவித்தார். 

ஆனால், ஒன்றிணைய வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும் பொதுக்குழு செல்லாது என தீர்ப்பையும் எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் பலரும் ஓபிஎஸ்-ஐ சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நேற்று இயக்குநர் பாக்யராஜ் , ஓபிஎஸ்-ஐ சந்தித்து ஆதரவு தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Nadu (@abpnadu)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு- 108 பேர் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு- 108 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Biggboss Tamil Season 8 LIVE: ஆண்கள் Vs பெண்கள்.. பிக்பாஸில் இது புதுசு.. விஜய் சேதுபதியின் ட்விஸ்ட்
Biggboss Tamil Season 8 LIVE: ஆண்கள் Vs பெண்கள்.. பிக்பாஸில் இது புதுசு.. விஜய் சேதுபதியின் ட்விஸ்ட்
வான் சாகசத்தில் கூட்ட நெரிசல், பலி; திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடே காரணம்- ஈபிஎஸ் கண்டனம்
வான் சாகசத்தில் கூட்ட நெரிசல், பலி; திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடே காரணம்- ஈபிஎஸ் கண்டனம்
Quarterly Exam Holiday: 9 நாட்கள் காலாண்டு விடுமுறை முடிந்தது; நாளை பள்ளிகள் திறப்பு - ஆசிரியர்களுக்கு என்ன உத்தரவு தெரியுமா?
Quarterly Exam Holiday: 9 நாட்கள் காலாண்டு விடுமுறை முடிந்தது; நாளை பள்ளிகள் திறப்பு - ஆசிரியர்களுக்கு என்ன உத்தரவு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chennai Councillor Stalin | லஞ்சம் கேட்டாரா கவுன்சிலர்? திமுக தலைமை அதிரடி ஆக்‌ஷன்! நடந்தது என்ன?Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு- 108 பேர் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு- 108 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Biggboss Tamil Season 8 LIVE: ஆண்கள் Vs பெண்கள்.. பிக்பாஸில் இது புதுசு.. விஜய் சேதுபதியின் ட்விஸ்ட்
Biggboss Tamil Season 8 LIVE: ஆண்கள் Vs பெண்கள்.. பிக்பாஸில் இது புதுசு.. விஜய் சேதுபதியின் ட்விஸ்ட்
வான் சாகசத்தில் கூட்ட நெரிசல், பலி; திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடே காரணம்- ஈபிஎஸ் கண்டனம்
வான் சாகசத்தில் கூட்ட நெரிசல், பலி; திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடே காரணம்- ஈபிஎஸ் கண்டனம்
Quarterly Exam Holiday: 9 நாட்கள் காலாண்டு விடுமுறை முடிந்தது; நாளை பள்ளிகள் திறப்பு - ஆசிரியர்களுக்கு என்ன உத்தரவு தெரியுமா?
Quarterly Exam Holiday: 9 நாட்கள் காலாண்டு விடுமுறை முடிந்தது; நாளை பள்ளிகள் திறப்பு - ஆசிரியர்களுக்கு என்ன உத்தரவு தெரியுமா?
முதல் இரு தரப்பு பயணம்.. டெல்லி வந்த மாலத்தீவு அதிபர் முய்சு.. சீனாவுக்கு செக்?
முதல் இரு தரப்பு பயணம்.. டெல்லி வந்த மாலத்தீவு அதிபர் முய்சு.. சீனாவுக்கு செக்?
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
2 ஆயிரம் கோடி ரூபாய் போதைப்பொருள்.. இந்தியாவை அதிரவிட்ட கடத்தல்.. நடந்தது என்ன?
2 ஆயிரம் கோடி ரூபாய் போதைப்பொருள்.. இந்தியாவை அதிரவிட்ட கடத்தல்.. நடந்தது என்ன?
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
Embed widget