மேலும் அறிய

ADMK Case : அ.தி.மு.க. கலவர வழக்கு : ஆவணங்கள் அனைத்தும் மீட்பு..! ஓ.பி.எஸ். உள்பட 60 பேர் மீது வழக்குப்பதிவு

அ.தி.மு.க. அலுவலக கலவர வழக்கில் அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளடன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி. அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை 11-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெற்ற தினத்தன்று, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தை கைப்பற்றினர். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் நடந்தது. இந்த மோதல் கலவரமாக மாறியது. அப்போது, அ.தி.மு.க. அலுவலகம் சூறையாடப்பட்டதுடன், அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் மாயமானது.

இந்த கலவரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில்,  அ.தி.மு.க. அலுவலகத்தில் கொள்ளை போனதாக கூறப்பட்ட அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டதாக சி.பி.சி.ஐ.டி. அறிவித்துள்ளது.


ADMK Case : அ.தி.மு.க. கலவர வழக்கு : ஆவணங்கள் அனைத்தும் மீட்பு..! ஓ.பி.எஸ். உள்பட 60 பேர் மீது வழக்குப்பதிவு

அ.தி.மு.க. தலைமை அலுவலக பத்திரம், ஜானகி அம்மாள் எழுதி கொடுத்த ஆவணம், அண்ணா டிரஸ்ட் ஆவணம், புதுச்சேரி, திருச்சி மற்றும் மதுரையில் உள்ள கட்சி அலுவலக சொத்து பத்திரம் உள்ளிட்ட 113 ஆவணங்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவித்துள்ளனர். இந்த ஆவணங்கள் அனைத்தும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக சி.பி.சி.ஐ.டி. அறிவித்துள்ளது. இதன்மூலம், அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்து மாயமாகிய அனைத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து மீட்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க : அடுத்த முதலமைச்சர் யார்? ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்... ராஜஸ்தான் அரசியலில் நெருக்கடி

மேலும், அ.தி.மு.க. அலுவலக கலவர வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 60 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக, அ.தி.மு.க. பொதுக்குழுவிற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான செயல்பாடுகள் அமைந்ததால், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.


ADMK Case : அ.தி.மு.க. கலவர வழக்கு : ஆவணங்கள் அனைத்தும் மீட்பு..! ஓ.பி.எஸ். உள்பட 60 பேர் மீது வழக்குப்பதிவு

இந்த சூழலில், கடந்த ஜூலை 11-ந் தேதி பொதுக்குழுவை ஓ.பன்னீர்செல்வம் புறக்கணித்தார். அப்போது, அவருடைய ஆதரவாளர்களுடன் சென்று அ.தி.மு.க. அலுவலகத்தை கைப்பற்றினார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, அ.தி.மு.க. பொதுக்குழு பற்றிய தனிநீதிபதி வழங்கிய தீர்ப்பு செல்லாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதும், தற்போது அ.தி.மு.க.  இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க : தமிழ்நாடு அரசுக்கு எதிராக பரிந்துரையா? ஆளுநர் ரவியின் டெல்லி விஜயம் குறித்து பரபரப்பு தகவல்!

மேலும் படிக்க : தமிழகத்தில் பாஜக இதைத்தான் செய்கிறது; அதிமுகவுக்கு புரிகிறதா? - திருமாவளவன் சரவெடி பேச்சு

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!
சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு.! 485 கோடியில் 3.2 கி.மீ பறக்கும் இரும்பு மேம்பாலம்- சாதித்த நெடுஞ்சாலைத்துறை
சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு.! 485 கோடியில் 3.2 கி.மீ பறக்கும் இரும்பு மேம்பாலம்- சாதித்த நெடுஞ்சாலைத்துறை
RAC டிக்கெட் ரத்து செய்தால் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? - ரயில் பயணிகள் கவனத்திற்கு
RAC டிக்கெட் ரத்து செய்தால் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? - ரயில் பயணிகள் கவனத்திற்கு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Embed widget