மேலும் அறிய

“சும்மா இல்ல... கருணாநிதியின் சூழ்ச்சிகளை 2 பெண்கள் முறியடித்தோம்” - சிவி சண்முகம் ஏரியாவில் கெத்து காட்டிய சசிகலா!

அதிமுகவின் பொதுச்செயலாளராக இன்று ஒன்றை மட்டும் சொல்கிறேன். கட்சிக்கொடியை பயன்படுத்தக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை

2 பெண்கள் தான் கருணாநிதியின் சூழ்ச்சிகளை முறியடித்து அதிமுகவை நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவாக்கிக் காட்டினோம் என சசிகலா தெரிவித்துள்ளார். 

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை காலம் முடிவடைந்து கடந்தாண்டு விடுதலை செய்யப்பட்ட சசிகலா 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தீவிர அரசியலில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலுக்கு முன் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக அவர் அறிவித்திருந்தார். சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் அதிமுக படுதோல்வியடையவே மீண்டும் அரசியல் பிரவேசம் எப்போது இருக்கும் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அதற்கேற்ப சமீப காலமாக அவர் தீவிர அரசியல் ஈடுபடுவதற்கான செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அதேசமயம் தொண்டர்களை சந்திப்பதும், அவர்கள் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதுமாக அவர் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அதிமுகவின் சிவி சண்முகம் தீவிர விசுவாசியாக இருந்த முகமது ஷெரீப் மகள் திருமண விழாவில் சசிகலா கலந்து கொண்டார். 

இந்நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, திமுகவை கடுமையாக விமர்சித்தார். அவர் தனது பேட்டியில் தமிழகம் முழுவதும் ரவுடிகள் சாலையோரம் உள்ள கடைகளில் கட்டாயம் பணம் வசூல் செய்து வருகிறார்கள். ஊழல் குற்றச்சாட்டு உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தனர். ஆனால் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கும் திமுக அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வருகிறது.

திமுகவினர் திராவிட மாடல் என கூறி வருகின்றனர். ஆனால் தற்பொழுது வரை எனக்கு திராவிட மாடல் என்றால் எனக்கு ஒன்றும் புரிய வில்லை எனவும், மேலும் 400க்கும் மேற்பட்ட திட்டங்களை திமுகவினர் செயல்படுவதாக கூறி வருகின்றனர். ஆனால் இவையெல்லாம் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மேலும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபின் திமுகவினர் அராஜகங்கள் அதிகரித்து வருகின்றன.

அதிமுகவின் பொதுச்செயலாளராக இன்று ஒன்றை மட்டும் சொல்கிறேன். கட்சிக்கொடியை பயன்படுத்தக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அப்படி சொல்பவர்கள் திமுகவை சேர்ந்தவர்களாகவோ அல்லது திமுகவினருக்கு மறைமுகமாக உதவி செய்பவர்களாக இருக்கக்கூடியவர்களாக இருக்கக்கூடும். அதிமுக ரத்தம் உடம்பில் ஓடினால் கட்சியை காப்பது பற்றி சிந்திக்க வேண்டுமே தவிர இருப்பவர்களை விரட்டியடித்து கட்சியை பலவீனப்படுத்த மாட்டார்கள். இதுபோன்ற ஒருசிலரை பார்க்கையில், கட்சிக்கு எதிரான திட்டங்களை மனிதில் வைத்து செயல்படுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அவர்களின் எண்ணம் என்றைக்கும் ஈடேறாது என்பதை இந்த கட்சியில் 38 ஆண்டுகளாக இருந்து வரும் ஒரு தமிழச்சியாக உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன். எம்.ஜி.ஆர். மறைந்தபோது ஏற்பட்ட அதே சோதனைகள் தான் மீண்டும் ஏற்பட்டு இருக்கிறது. அன்று இரண்டே பெண்கள் கருணாநிதியின் சூழ்ச்சிகளை முறியடித்து நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவாக்கிக் காட்டினோம். எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை புறம்தள்ளிவிட்டு உங்கள் நேரத்தை கட்சி வளர்ச்சிக்காக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இனி வரும் காலம் நம்முடையதே. நாளை நமதே" என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
ABP Premium

வீடியோ

LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Embed widget