மேலும் அறிய

’நாட்டு நலன் கருதி ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’- முத்தரசன் கோரிக்கை

’’உலகத்தில் யாருமே நினைக்க முடியாத அளவுக்கு பொய் பேசும் தலைவர்களாக பாஜகவினர் உள்ளனர்’’

தருமபுரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன், தமிழக அரசின் மக்களை நாடி மருத்துவம் என்ற திட்டம் வரவேற்க கூடியது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு புதியதாக பணியாளர்களை பணி அமர்த்துவதை தவிர்த்துவிட்டு, ஏற்கனவே குறைந்த ஊதியத்தில் அர்ப்பணிப்பு உணர்வோடு  பணியாற்றும் பணியாளர்களை பணியமர்த்தி நிரந்தரமாக்க வேண்டும்.  இதனை உரிய காலத்தில் தமிழக முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 
 

’நாட்டு நலன் கருதி ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’- முத்தரசன் கோரிக்கை
 
கொரோனா காலத்தில் தற்காலிக செவிலியர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் அர்ப்பணிப்பு மகத்தானது இவர்கள் குறைந்த ஊதியத்தில், தங்குவதற்கான இடம் உணவு ஆகியவற்றை அரசு ஏற்படுத்திக் கொடுத்தது. தற்போதைய உணவு, தங்குவதற்கான இடம் இல்லாமல் பணி வழங்கப்பட்டுள்ளது. எனவே இவர்களுக்கு தங்குவதற்கு இடம், உணவு ஆகியவற்றை ஏற்படுத்தி தந்து, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டக் களத்திற்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் நேரில் சென்று, சங்க நிர்வாகிகளை சந்தித்து பேசி கோரிக்கையை நிறைவேற்றுவதாக நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளார். தமிழக அரசு மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரின் அணுகுமுறை வரவேற்கத்தக்கது. இதில் சுமூக முடிவை எட்ட வேண்டும். வேளாண் துறையில் விவசாயத் தொழிலாளர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில், வேலைவாய்ப்பு இல்லாத நிலையில், ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் 200 நாட்கள் வேலை என்பதையும், ஆறுநூறு ரூபாய் கூலி என்பதை உயர்த்த கொடுக்க ஒன்றிய அரசை, மாநில அரசு வலியுறுத்த வேண்டும். இதன் மூலம் தமிழகத்தில் ஒரு கோடி விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஒரு புதிய வாழ்வை அளிக்க முடியும்.
 
 
ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து அதிகரித்து வருவது. இது உழைக்கும் மக்களை வஞ்சி கக்கூடிய மிகவும் மோசமான செயல். இன்று பெட்ரோல், டீசல் மீது 25 பைசா உயர்த்தி இருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் கோயில் நிலங்களில் உள்ள குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதனை அறநிலை துறை ஊழியர்கள் நோட்டீஸ் கொடுத்து நெருக்கடி கொடுக்க கூடிய சூழல் இருக்கிறது. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு, முதல்வர் தலைமையில் இதற்கு குழுவை அமைத்து, விரைவாக சுமுகத் தீர்வு எட்ட வேண்டும். 
 
 
ஒரு நாட்டின் பிரதமர் என்பவர் அனைத்து மக்களுக்கும் பொதுவான. மக்களின் வரி பணத்திலிருந்து தான், அலுவலகம், வீடு, வாகன போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பிரதமர் பெயரால் குழு அமைக்கப்பட்டு நிதி வசூல் செய்யப்பட்டு வருகிறது. இது அரசின் கணக்குக்கு வராது, தணிக்கைக்கு உட்பட்டது அல்ல என்று அறிவித்திருப்பது ஒரு தனிப்பட்ட நபர், எப்படி மோசடி செய்வாரோ, அதைவிட மோசமான மோசடியாக இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. இந்தப் பணம் இதுவரை பல்லாயிரம் கோடி வந்திருக்கிறது. யாரிடம் இருந்து வருகிறது, எப்படி வருகிறது என்று யாருக்கும் தெரியாது. இதுவரையில் மொத்த தொகை எவ்வளவு என்பதும் தெரியாது. இது எப்படி செலவழிக்கப்படுகிறது என்பதும் ஒரு புரியாத புதிராகவே இருந்து வருகிறது. ஆகவே சேர்ந்து இருக்கின்ற பணம் அனைத்தும் அரசின் கஜானாவில் சேர்க்கப்படவேண்டும். சட்டபூர்வமாக இது தணிக்கை செய்யப்பட வேண்டும். எவ்வளவு பணம் வந்தது, எவ்வளவு செலவானது, மீதம் எவ்வளவு இருக்கிறது என்பது குறித்து வெளிப்படையாக பகிரங்கமாக அறிக்கை வெளியிட வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது என தெரிவித்தார்.
 
 
 
தொடர்ந்து ஹெச் ராஜா குறித்த கேள்விக்கு, ஹெச் ராஜா பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, அரசியல் தலைவர்களைப் பற்றியும் அவதூறாக பேசி வருகிறார். அவர் பெரியார் இருக்கும் போது நான் இருந்திருந்தால், அவரை செருப்பால் அடிப்பேன் என்று பேசியவர், அதைவிட மோசமான வார்த்தை எதுவும் இருக்காது. ஆனால் அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பொழுதும் அப்படித்தான் பேசிக்கொண்டிருக்கிறார். பத்திரிக்கையாளர்களை சகட்டுமேனிக்கு பேசுகிறார். அரசியல் தலைவர்களை பற்றி பேசுகிறார். சட்டம் என்பது அனைவருக்கும் சமம். அத்து மீறுபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் ஹெச்.ராஜா பிரச்சினையில் காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது என்பது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. இதில் பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே அவர் நீதிமன்றத்தை அவதூறாக பேசியதாகவும், காவல்துறை அதிகாரிகளை அவதூராக பேசினார் என்று ஒரே ஒரு வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கம் இன்னும் முடிந்தபாடில்லை. ஆகவே நாட்டு நலன் கருதி ஹெச்.ராஜா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக தலைவர்கள் கீழிருந்து மேல் இருப்பவர்கள் வரை பொய் தான் பேசுவார்கள். உலகத்தில் யாருமே நினைக்க முடியாத அளவுக்கு பொய் பேசும் தலைவர்கள். அவர்களுக்கு பொய் தான் மூலதனம். பொய் பேசியே தங்களையும் காப்பாற்றிக் கொள்வார்கள்,  ஆட்சியைக் காப்பாற்றிக்  கொள்ளலாம் என கருதுகிறார்கள். அது நிச்சயம் எடுபடாது, ஒரு நாளைக்கு அது முடிவுக்கு வரும் என முத்தரசன் தெரிவித்தார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
TATA Sierra Dealership: டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
Embed widget