மேலும் அறிய

மயிலாடுதுறை: மதுவிலக்கு, கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்! அரசுக்கு கிடைத்த லாபம் எவ்வளவு தெரியுமா?

மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் கஞ்சா கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட்டன. இந்த ஏலத்தின் மூலம் அரசுக்கு 12.68 இலட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் கஞ்சா கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 57 வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட்டன. இந்த ஏலத்தின் மூலம் அரசுக்கு 12.68 இலட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

வழக்குகளின் பின்னணி

கடந்த 2025-ம் ஆண்டில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பல்வேறு தாலுக்கா காவல் நிலையங்கள், மயிலாடுதுறை மற்றும் சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவு ஆகியவற்றில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் அடிப்படையில் மொத்தம் 5,414 மதுவிலக்கு வழக்குகளும், 423 கஞ்சா தொடர்பான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இந்தச் சட்டவிரோத செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட 11 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 46 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 57 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஏல நடைமுறைகள்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) ஸ்டாலின் உத்தரவின்படி, இந்த வாகனங்களை அரசுக்கு ஆதாயம் செய்யும் வகையில் ஏலம் விட முடிவு செய்யப்பட்டது. இதற்காகத் தஞ்சாவூர் அரசுப் பணிமனை தானியங்கி பொறியாளர் சதீஷ்குமாரால் வாகனங்களின் அடிப்படை விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

முன்னதாக அறிவிக்கப்பட்டபடி, (21.01.2026) காலை 11.00 மணிக்கு மயிலாடுதுறை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலக வளாகத்தில் ஏலம் தொடங்கியது. இந்த ஏலத்தில் கலந்துகொள்ள மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 235 பொதுமக்கள் ஆர்வத்துடன் வருகை தந்திருந்தனர்.

முக்கிய அதிகாரிகள் முன்னிலை

இந்த ஏல நிகழ்வானது மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. ஸ்டாலின், தலைமையில் நடைபெற்றது. அவருடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராஜ், மயிலாடுதுறை கோட்ட கலால் அலுவலர் விஜயராணி, தஞ்சாவூர் வட்டார தடய அறிவியல் துணை இயக்குநர் ராஜ்மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் ஏலத்தில் முன்னிலை வகித்தனர்.

ஏலத் தொகை மற்றும் அரசு வருவாய்

ஏலத்திற்குக் கொண்டு வரப்பட்ட 57 வாகனங்களும் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டன. இதன் மூலம் மொத்தமாக ரூ.12,68,736/- (பன்னிரெண்டு லட்சத்து அறுபத்தெட்டாயிரத்து எழுநூற்று முப்பத்தாறு ரூபாய்) நிதி திரட்டப்பட்டது. இந்தத் தொகை முழுவதையும் அரசு கணக்கில் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன.

காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. ஸ்டாலின், மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். மேலும், கடந்த ஆண்டில் மட்டும் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 50 நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். சட்டவிரோத கடத்தலில் ஈடுபடும் வாகனங்கள் இனி வரும் காலங்களிலும் இதுபோன்று பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

வாகன ஏலம்: பொதுவான நடைமுறைகள்

காவல்துறையால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சட்டப்பூர்வமான ஏல நடைமுறைக்கு உட்படுத்தப்படுகின்றன. இதன் முக்கிய நோக்கங்கள்.

அரசு வருவாய்: பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் அரசுக்கு நிதி திரட்டுதல்.  

பராமரிப்பு சுமை குறைப்பு: காவல் நிலைய வளாகங்களில் வாகனங்கள் தேங்குவதைத் தவிர்த்து, இடவசதியை முறைப்படுத்துதல்.

சட்டப்பூர்வ தீர்வு: குற்ற வழக்குகளில் தொடர்புடைய சொத்துக்களை நீதிமன்ற வழிகாட்டுதலின்படி முறையாக விடுவித்தல். 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Dmdk Premalatha : மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள் என்ன.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள்.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
Madras University Convocation: ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை; சென்னைப் பல்கலை. விழாவைப் புறக்கணித்த அமைச்சர் செழியன்!
Madras University Convocation: ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை; சென்னைப் பல்கலை. விழாவைப் புறக்கணித்த அமைச்சர் செழியன்!
இபிஎஸ் வீட்டில் பாஜகவினருக்கு தயாரான சுவையான விருந்து.! யார் யாருக்கு எத்தனை தொகுதி- இன்று இறுதி முடிவு
இபிஎஸ் வீட்டில் பாஜகவினருக்கு தயாரான சுவையான விருந்து.! யார் யாருக்கு எத்தனை தொகுதி- இன்று இறுதி முடிவு
Coporate Scam: தாராள பிரபுக்களே..! மொட்டையடிக்கும் கார்ப்ரேட், உணவு To ஆடை வரை - கோமாளிகளாக்கும் ஸ்கேம்
Coporate Scam: தாராள பிரபுக்களே..! மொட்டையடிக்கும் கார்ப்ரேட், உணவு To ஆடை வரை - கோமாளிகளாக்கும் ஸ்கேம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிமுகவில் காளியம்மாள்? நாகை MLA சீட் டிக் அடித்த EPS
”MUSLIM மட்டுமா ஹிஜாப் போடுறோம்?வடமாநில பெண்களும் போடுறாங்க”பெண் கவுன்சிலர் பதிலடி
14 நாட்கள் ஜெயில்! ARREST ஆன ஷிம்ஜிதா! போராட்டத்தில் குதித்த ஆண்கள்
4000 குழந்தைகள்... ARUN ICECREAM கின்னஸ் சாதனை சென்னையை மிரளவைத்த சம்பவம்
கோவையில் கொலைவெறி தாக்குதல்!போதை கும்பலிடம் சிக்கிய இளைஞர்பகீர் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dmdk Premalatha : மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள் என்ன.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள்.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
Madras University Convocation: ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை; சென்னைப் பல்கலை. விழாவைப் புறக்கணித்த அமைச்சர் செழியன்!
Madras University Convocation: ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை; சென்னைப் பல்கலை. விழாவைப் புறக்கணித்த அமைச்சர் செழியன்!
இபிஎஸ் வீட்டில் பாஜகவினருக்கு தயாரான சுவையான விருந்து.! யார் யாருக்கு எத்தனை தொகுதி- இன்று இறுதி முடிவு
இபிஎஸ் வீட்டில் பாஜகவினருக்கு தயாரான சுவையான விருந்து.! யார் யாருக்கு எத்தனை தொகுதி- இன்று இறுதி முடிவு
Coporate Scam: தாராள பிரபுக்களே..! மொட்டையடிக்கும் கார்ப்ரேட், உணவு To ஆடை வரை - கோமாளிகளாக்கும் ஸ்கேம்
Coporate Scam: தாராள பிரபுக்களே..! மொட்டையடிக்கும் கார்ப்ரேட், உணவு To ஆடை வரை - கோமாளிகளாக்கும் ஸ்கேம்
Top 10 News Headlines: அடிக்கல் நாட்டிய ஸ்டாலின், ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா ஒப்பந்தம், தங்கம் விலை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: அடிக்கல் நாட்டிய ஸ்டாலின், ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா ஒப்பந்தம், தங்கம் விலை - 11 மணி வரை இன்று
Ration Card: சக்கரை ரேஷன் கார்டை அரிசி அட்டையாக மாற்றனுமா.? சட்டசபையில் அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்
சக்கரை ரேஷன் கார்டை அரிசி அட்டையாக மாற்றனுமா.? சட்டசபையில் அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்
இந்தியாவிற்கு க்ரீன் சிக்னல்.. க்ரீன்லாந்தால் ஐரோப்பிய நாடுகள் ரெட் சிக்னல் - அடங்காத ட்ரம்ப் கொடுத்த வார்னிங்
இந்தியாவிற்கு க்ரீன் சிக்னல்.. க்ரீன்லாந்தால் ஐரோப்பிய நாடுகள் ரெட் சிக்னல் - அடங்காத ட்ரம்ப் கொடுத்த வார்னிங்
ICC Ban: ஐசிசி கொடுத்த வார்னிங்.. இந்தியா வருமா? ”அதிசயம் நிகழும் என எதிர்பார்ப்பு” வங்கதேசத்தின் முடிவு என்ன?
ICC Ban: ஐசிசி கொடுத்த வார்னிங்.. இந்தியா வருமா? ”அதிசயம் நிகழும் என எதிர்பார்ப்பு” வங்கதேசத்தின் முடிவு என்ன?
Embed widget