மேலும் அறிய

மயிலாடுதுறையில் யாகம் வளர்த்து, கடலில் பால் ஊற்றி அனுசரிக்கப்பட்ட சுனாமி நினைவு தினம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 மீனவ கிராமங்களில் அனுசரிக்கப்பட்ட சுனாமி தின நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 மீனவ கிராமங்களில் அனுசரிக்கப்பட்ட சுனாமி தின நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாட்டில் கடந்த 2004 -ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஆழிப்பேரலை என்கின்ற சுனாமியால் மயிலாடுதுறை மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அவ்வாறு உயிரிழந்தவர்கள் நினைவாக டிசம்பர் 26 -ஆம் தேதி சுனாமி தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மட்டும் 6 ஆயிரத்து 66 பேர் ஆழிப்பேரலையில் சிக்கி உயிரிழந்தனர். இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 மீனவர் கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பலியாயினர்.


மயிலாடுதுறையில் யாகம் வளர்த்து, கடலில் பால் ஊற்றி அனுசரிக்கப்பட்ட சுனாமி நினைவு தினம்

சுனாமி ஏற்பட்டு 19 ஆண்டுகளைக் கடந்தும் அதனுடைய பாதிப்புகளை மீனவர்கள் இதுவரை மறக்க முடியாமல் இருந்து வருகின்றனர். பலரது வாழ்க்கை நொடிபொழுதில் மாறிபோனது, இத்தகைய சுனாமி நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இன்று 19 -ம் ஆண்டு சுனாமி தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை கடற்கரை கிராமங்களில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அவர்களின் உறவினர்கள் திதி கொடுத்து இந்த கருப்பு தினத்தை அனுசரித்தனர். அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் மீனவ கிராம மீனவர்கள் திருமுல்லைவாசல் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து சுனாமி நினைவுத் தூண் வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் 500 -க்கும் மேற்பட்ட மீனவர்கள் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தலைமையில் ஊர்வலமாக சென்று,


மயிலாடுதுறையில் யாகம் வளர்த்து, கடலில் பால் ஊற்றி அனுசரிக்கப்பட்ட சுனாமி நினைவு தினம்

திருமுல்லைவாசல் கடற்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு ஸ்தூபிக்கு மலர்வளையங்கள் வைத்து மலர்கள் தூவினர். அதைத்தொடர்ந்து நினைவுத் தூண் அருகில் இறந்தவர்கள் நினைவாக வைக்கப்பட்டிருந்த செங்கற்களுக்கு மலர்களைத் தூவினர், மேலும் அங்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதேபோன்று தரங்கம்பாடியில் மட்டும் 315 பேர் உயிரிழந்தனர். சுனாமியால் உயிரிழந்த அனைவருக்கும் அவர்களது குடும்பத்தினரும் கிராம மக்களும் ஆண்டுதோறும் நினைவஞ்சலி செலுத்தி வழிபாடு செய்வது வழக்கம். இந்நிலையில் 19 -ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று தரங்கம்பாடியில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அவர்களது குடும்பத்தினர் கடற்கரை மீன் விற்பனை கூடத்தில் யாகம் வளர்த்து தர்ப்பணம் கொடுத்து, கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தி வழிபாடு செய்தனர். 


மயிலாடுதுறையில் யாகம் வளர்த்து, கடலில் பால் ஊற்றி அனுசரிக்கப்பட்ட சுனாமி நினைவு தினம்

தொடர்ந்து கிராம மக்கள் கருப்பு பேச் அணிந்து 700-க்கும்‌ மேற்பட்டோர் மவுன ஊர்வலமாக தரங்கம்பாடி கடை வீதியில் உள்ள நினைவு ஸ்தூபிக்கு சென்று மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். பின்னர், தரங்கம்பாடி பழைய ரயில் நிலையம் அருகே சுனாமியால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்த இடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்‌. இதுபோல மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சந்திரபாடி, சின்னூர்பேட்டை, சின்னங்குடி, குட்டியாண்டியூர், வெள்ளகோயில், மாணிக்கபங்கு, வானகிரி, பழையார், கூழையார், தொடுவாய், பூம்புகார் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Tsunami Day: அழியாத வடுவாக மாறிய “டிசம்பர் 26” : சுனாமி தாக்கியதன் 19-ஆம் ஆண்டு நினைவு இன்று..

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.முருகன், பாஜக மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்துகொண்டு சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Train Timing Change: ஜன.1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - எந்தெந்த ட்ரெயின்?
Train Timing Change: ஜன.1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - எந்தெந்த ட்ரெயின்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
January holidays: ஜனவரியில் இவ்வளவு நாள் தொடர் விடுமுறையா.? சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள், அரசு ஊழியர்கள்
ஜனவரியில் இவ்வளவு நாள் தொடர் விடுமுறையா.? சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள், அரசு ஊழியர்கள்
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: கல்யாண வரம் வேண்டி குவிந்த பக்தர்கள்!
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: கல்யாண வரம் வேண்டி குவிந்த பக்தர்கள்!
ABP Premium

வீடியோ

Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Timing Change: ஜன.1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - எந்தெந்த ட்ரெயின்?
Train Timing Change: ஜன.1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - எந்தெந்த ட்ரெயின்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
January holidays: ஜனவரியில் இவ்வளவு நாள் தொடர் விடுமுறையா.? சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள், அரசு ஊழியர்கள்
ஜனவரியில் இவ்வளவு நாள் தொடர் விடுமுறையா.? சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள், அரசு ஊழியர்கள்
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: கல்யாண வரம் வேண்டி குவிந்த பக்தர்கள்!
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: கல்யாண வரம் வேண்டி குவிந்த பக்தர்கள்!
100க்கும் மேற்பட்ட புற்று நோய் அறுவை சிகிச்சைகள் செய்து ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவர்கள் சாதனை
100க்கும் மேற்பட்ட புற்று நோய் அறுவை சிகிச்சைகள் செய்து ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவர்கள் சாதனை
Tamilnadu Roundup: பாமக பொதுக்குழு.. திமுக மகளிரணி மாநாடு - பரபரக்கும் தமிழ்நாடு
Tamilnadu Roundup: பாமக பொதுக்குழு.. திமுக மகளிரணி மாநாடு - பரபரக்கும் தமிழ்நாடு
Trump Russia Ukraine: என்னய்யா சொல்றீங்க.?! “உக்ரைன் வெற்றிபெற ரஷ்யா விரும்பியது“: ஜெலன்ஸ்கியை சந்தித்தபின் ட்ரம்ப்
என்னய்யா சொல்றீங்க.?! “உக்ரைன் வெற்றிபெற ரஷ்யா விரும்பியது“: ஜெலன்ஸ்கியை சந்தித்தபின் ட்ரம்ப்
Swift-ஆ? Baleno-ஆ? புத்தாண்டுக்கு வாங்க பெஸ்ட் கார் இதுதான்! முழு கம்பேரிசன்!
Swift-ஆ? Baleno-ஆ? புத்தாண்டுக்கு வாங்க பெஸ்ட் கார் இதுதான்! முழு கம்பேரிசன்!
Embed widget