மயிலாடுதுறை: மின் நுகர்வோர் கவனத்திற்கு! உங்கள் குறைகளுக்கு நாளை முற்றுப்புள்ளி..!
மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நாளை மே 13 -ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நாளை மறுதினம் நடைபெற்ற உள்ள மின் நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர் கலந்துக்கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என மயிலாடுதுறை இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற் பொறியாளர் (பொறுப்பு ) ரேணுகா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மாதாந்திர கூட்ட அறிவிப்பு
தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்த நிலையில் அதன் காரணமாக மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து மயிலாடுதுறை கோட்ட மின் நுகர்வோர்களுக்கு வசதியாக, இனிவரும் காலங்களில் நிலையான ஒரு நடைமுறையை மின் வாரியம் அறிவித்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு மாதமும் 2-வது புதன்கிழமை அன்று மயிலாடுதுறை கோட்ட அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் இந்தக் குறை தீர்க்கும் கூட்டம் முறையாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் மாதந்தோறும் உரிய அதிகாரியைச் சந்தித்துத் தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அரசின் நடவடிக்கை
தமிழ்நாடு அரசு மின்சார வாரிய துறையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. மக்கள் எளிதில் அரசு திட்டங்களை அடைய வேண்டும் மற்றும் அரசு சார்ந்த திட்டங்கள் மட்டும் பணிகளை அதிகாரிகள் எவ்வித இடையரும் இன்றி மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. அதன் ஒன்றாக மின்சார வாரியத் துறையில் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களையும் பிரச்சனைகளையும் எளிதில் தீர்த்துக் கொள்வதற்காக ஒவ்வொரு பகுதிகளிலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் மக்கள் குறைதீர் கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட்டுகிறது. மேலும் அந்தக் கூட்டத்தின் மூலம் மின் துறையில் ஏற்படும் இடையூறுகளை களைய வழிவகை செய்து தருகிறது.
நாளை குறைதீர் கூட்டம்
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் நாளைய தினம் 13.05.2026 புதன்கிழமை அன்று மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்தில் நாகை மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த மயிலாடுதுறை கோட்ட மேற்பார்வை பொறியாளர் காளிதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது.
மனுவாக குறைகள்
இக்கூட்டத்தில் பொதுமக்களாகிய மின் நுகர்வோர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக அளித்து மின்வாரியம் தொடர்பான குறைகளை சரி செய்துகொள்ளுமாறு மயிலாடுதுறை தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகம், இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற் பொறியாளர் (பொறுப்பு ) ரேணுகா தெரிவித்துள்ளார். இந்த கூட்டமானது ஒவ்வொரு மாதமும் இரண்டாவது புதன் கிழமைகளில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் கவனத்திற்கு
இக்கூட்டத்தில் மயிலாடுதுறை கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர் அனைவரும் நேரில் கலந்துகொள்ளலாம்.
* புதிய மின் இணைப்பு கோருதல்.
* மின் அழுத்தக் குறைபாடுகள் குறித்த புகார்கள்.
* பழுதடைந்த மின் கம்பங்கள் அல்லது மின் மாற்றிகளை (Transformer) மாற்றுதல்.
* மின் கட்டணத்தில் உள்ள குளறுபடிகள்.
* பெயர் மாற்றம் மற்றும் இதர மின் வாரியம் சார்ந்த குறைகளைத் தெரிவித்தல்.
மேற்கண்ட பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் தங்கள் மனுக்களை மேற்பார்வை பொறியாளரிடம் நேரடியாகச் சமர்ப்பித்து, அதற்குரிய பயனைப் பெற்றுக்கொள்ளுமாறு மின் வாரியச் செயற்பொறியாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















