மேலும் அறிய

பகுதிநேர ஆசிரியர்கள் டூ நிரந்தர ஆசிரியர்கள்: 'கொள்கை முடிவு' எடுப்பாரா விஜய்? சட்டமன்றத்தில் எழும் புதிய எதிர்பார்ப்பு!

சிறப்பு மசோதா தாக்கல் செய்து 11,773 பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

மயிலாடுதுறை: தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த 16 கல்வியாண்டுகளாக தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் 11,773 பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், இதற்காக நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே சிறப்பு மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் விடுத்துள்ள விரிவான அறிக்கை மற்றும் கோரிக்கைகளின் விவரம் பின்வருமாறு;

16 ஆண்டுகாலக் காத்திருப்பு

கடந்த 26-08-2011 அன்று தமிழக சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் பன்முகத் திறனை வளர்க்கும் நோக்கில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதன்படி, உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை மற்றும் வாழ்க்கைக்கல்வி ஆகிய பாடங்களுக்காக ஒட்டுமொத்தமாக 16,549 பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

இந்த அறிவிப்பின்படி, தகுதியான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு பள்ளிகளில் நியமிக்கப்பட்டனர். 110 விதியின் கீழ் பணியிடங்கள் ஏற்படுத்தி நியமிக்கப்பட்ட இந்த ஆசிரியர்களை, அவர்கள் பணியாற்றும் அதே பாடங்களிலேயே தமிழக அரசு காலப்போக்கில் பணிநிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக கடந்த 16 கல்வியாண்டுகளாக இந்த ஆசிரியர்களின் வாழ்வாதாரம் தற்காலிகப் பணியாகவே முடக்கப்பட்டுள்ளது.

ரூ. 5,000 தொகுப்பூதியத்தில் தொடங்கி முடக்கப்பட்ட வாழ்வாதாரம்

தொடக்கத்தில் இந்த ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஆரம்ப சம்பளமாக வெறும் ரூ. 5,000 மட்டுமே தொகுப்பூதியமாக வழங்கப்பட்டது. ஆண்டுகள் பல கடந்த நிலையில், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இந்த ஊதியம் படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது ரூ. 15,000 ஆக வழங்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், தற்போதைய விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதாரச் சூழலுக்கு இந்தத் தொகை எவ்வகையிலும் போதுமானதாக இல்லை. தற்போதுள்ள 11,773 ஆசிரியர்களும் தங்களின் எதிர்காலம் குறித்த எவ்விதப் பாதுகாப்பும் இன்றி, பகுதிநேர ஆசிரியர்கள் என்ற முத்திரையுடனேயே தொடர்ந்து முடக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்று கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

ஒரே கல்வித்தகுதி; இரட்டை நிலைப் பாரபட்சம்

அரசுப் பள்ளிகளில் நிலவும் ஊதியப் பாரபட்சம் குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதாவது:

"அரசுப் பள்ளிகளில் இதே உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை உள்ளிட்ட பாடங்களில் 'சிறப்பாசிரியர்களாக' காலமுறை சம்பளத்தில் நியமிக்கப்பட்டவர்கள் பலர் உள்ளனர். அவர்களின் பணிக்காலத்திற்கு ஏற்ப தற்போது மாதம் ரூ. 60,000, ரூ. 70,000 மற்றும் ரூ. 80,000 வரை சம்பளம் பெற்று வருகின்றனர். ஆனால், அதே கல்வித்தகுதியைக் கொண்டு, அதே பாடங்களை, அதே அரசுப் பள்ளிகளில் கற்பிக்கும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மட்டும் வெறும் ரூ. 15,000 மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த இரட்டை நிலைப் பாரபட்சம் உடனடியாகக் களையப்பட வேண்டும்."

உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் 'சமவேலைக்கு சமஊதியம்' கொள்கையும் தற்காலிகப் பணியாளர்களாக இருந்தாலும், அவர்கள் நிரந்தரப் பணியாளர்கள் செய்யும் அதே பணியைச் செய்யும்போது, அவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது.

"சமவேலைக்கு சமஊதியம்" என்ற இந்த உன்னதக் கொள்கையை, தமிழக அரசு தங்களின் விஷயத்தில் உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும், 16 ஆண்டுகளாகப் பணியாற்றிய தங்களுக்குக் காலமுறை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தவெக-வின் தேர்தல் வாக்குறுதியும் பகுதிநேர ஆசிரியர்களின் எதிர்பார்ப்பும்

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது தேர்தல் அறிக்கையில், "தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிகமாகப் பணியாற்றும் ஆசிரியர்களில், 5 ஆண்டுகளை நிறைவு செய்தவர்கள் அனைவரும் நிரந்தர ஆசிரியர்களாக மாற்றப்படுவார்கள்" என்ற மிக முக்கியமான வாக்குறுதியை அளித்திருந்தது.

தவெக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட 5 ஆண்டுகள் என்ற காலக்கெடுவையும் கடந்து, தற்போதைய பகுதிநேர ஆசிரியர்கள் 16 கல்வியாண்டுகளாகத் தங்களின் உழைப்பைத் தற்காலிகமாகவே வழங்கிவிட்டனர். எனவே, முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, தங்களின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் உடனடியாகச் செயல்பட வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கூட்டமைப்பின் முக்கியக் கோரிக்கைகள்

சிறப்பு மசோதா: பகுதிநேர ஆசிரியர்களைப் பணிநிரந்தரம் செய்வதற்காக நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே அரசு தனி சிறப்பு மசோதாவைத் தாக்கல் செய்ய வேண்டும்.

கொள்கை முடிவு: 11,773 பகுதிநேர ஆசிரியர்களையும் பணிநிரந்தரம் செய்வது தவெக அரசின் 'கொள்கை முடிவு' (Policy Decision) என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும்.

முதலாவது கூட்டத்தொடர் அறிவிப்பு: முதல்வர் விஜய், இம்மாநிலத்தின் முதலாவது சட்டசபை கூட்டத்தொடரிலேயே இதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க பணிநிரந்தர அறிவிப்பை வெளியிட வேண்டும்.

பல ஆண்டுகளாகப் பள்ளிக் கல்வித்துறைக்காகவும், மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்காகவும் உழைத்த தங்களின் வாழ்வை ஒளிரச் செய்ய, புதிய அரசு இந்த கோரிக்கையை கனிவோடு பரிசீலித்து உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒட்டுமொத்தமாக வலியுறுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆட்சியர் தொடங்கி வைத்த மாரத்தான் ஓட்டம்; ஆம்புலன்ஸில் முடிந்த அவலம் - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
ஆட்சியர் தொடங்கி வைத்த மாரத்தான் ஓட்டம்; ஆம்புலன்ஸில் முடிந்த அவலம் - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
நிறைவேற போகும் ஆயிரக்கணக்கானோரின் பேராசிரியர்களின் கனவு..! 
நிறைவேற போகும் ஆயிரக்கணக்கானோரின் பேராசிரியர்களின் கனவு..! 
உங்கள் குழந்தை 5 வயதிற்குட்பட்டவரா? அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான் - ஜூன் 28 முக்கிய முகாம்!
உங்கள் குழந்தை 5 வயதிற்குட்பட்டவரா? அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான் - ஜூன் 28 முக்கிய முகாம்!
அமைச்சர்கள் சொன்ன 'அந்த' வார்த்தை.. குறைதீர் கூட்டத்தை மொத்தமாகப் புறக்கணித்த விவசாயிகள்.. பின்னணி என்ன?
அமைச்சர்கள் சொன்ன 'அந்த' வார்த்தை.. குறைதீர் கூட்டத்தை மொத்தமாகப் புறக்கணித்த விவசாயிகள்.. பின்னணி என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Sarathkumar: ‘Drug‘ பயன்படுத்தினேனா.? அவசரப்பட்டுட்டீங்களே.! சர்ச்சை வீடியோவிற்கு அமைச்சர் சரத்குமார் விளக்கம்
‘Drug‘ பயன்படுத்தினேனா.? அவசரப்பட்டுட்டீங்களே.! சர்ச்சை வீடியோவிற்கு அமைச்சர் சரத்குமார் விளக்கம்
Gold Rate June 26th: ஒரே நாளில் இரு முறை ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி; மாலையிலும் விலை உயர்வு; தற்போது விலை என்ன.?
ஒரே நாளில் இரு முறை ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி; மாலையிலும் விலை உயர்வு; தற்போது விலை என்ன.?
நியாயமா சிஎம் சார்? ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி!
நியாயமா சிஎம் சார்? ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி!
Strait of Hormuz: “எங்க அனுமதி இல்லாம நுழைய முடியாது“; எச்சரித்த ஈரான்; ரூட்டை மாற்றிய கப்பல்கள்; ஹார்முஸில் மீண்டும் சிக்கல்
“எங்க அனுமதி இல்லாம நுழைய முடியாது“; எச்சரித்த ஈரான்; ரூட்டை மாற்றிய கப்பல்கள்; ஹார்முஸில் மீண்டும் சிக்கல்
Annamalai: சிஎம் விஜய்யின் 'ரெய்டு' ஆக்ஷன், எ.வ.வேலுவோடு நிறுத்தாதீங்க - ஊழல் வேட்டைக்கு அண்ணாமலை கொடுத்த கிரீன் சிக்னல்
சிஎம் விஜய்யின் 'ரெய்டு' ஆக்ஷன், எ.வ.வேலுவோடு நிறுத்தாதீங்க - ஊழல் வேட்டைக்கு அண்ணாமலை கொடுத்த கிரீன் சிக்னல்
Upcoming Honda Cars: ஹூண்டாய், கியாவுக்கு தலைவலி.! க்ரெட்டா, செல்டோஸ்-க்கு போட்டியாக 3 கார்களை களமிறக்கும் ஹோண்டா
ஹூண்டாய், கியாவுக்கு தலைவலி.! க்ரெட்டா, செல்டோஸ்-க்கு போட்டியாக 3 கார்களை களமிறக்கும் ஹோண்டா
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ் தரும் BGauss இ ஸ்கூட்டர்கள்! விலை, சிறப்புகள் என்னென்ன?
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ் தரும் BGauss இ ஸ்கூட்டர்கள்! விலை, சிறப்புகள் என்னென்ன?
Kim Jong Un: தென் கொரியாவை பீதியிலேயே வைத்திருக்கும் வட கொரியா; அதிநவீன ஆயுத சோதனை; பார்வையிட்ட கிம் ஜாங் உன்
தென் கொரியாவை பீதியிலேயே வைத்திருக்கும் வட கொரியா; அதிநவீன ஆயுத சோதனை; பார்வையிட்ட கிம் ஜாங் உன்
Embed widget