மேலும் அறிய

பைக்கில் வந்தவரை நிறுத்தி ஃப்ளவர் பொக்கே கொடுத்து பாராட்டிய எஸ்.பி! ஏன் தெரியுமா?

மயிலாடுதுறையில் நடைபெற்ற தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவில் தலைகவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிக்கு பொக்கே கொடுத்து எஸ்பி பாராட்டு தெரிவித்தார்.

தேசிய சாலை பாதுகாப்பு வாரம்

ஒவ்வொரு ஆண்டும் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் அதிகரித்து வரும் சாலை விபத்துகளுக்கு மத்தியில், அனைவருக்கும் பாதுகாப்பான சாலைகள் என்பதை நோக்கமாக கொண்டு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் இந்த வாரம் அனுசரிக்கப்படுகிறது. 1989-ஆம் ஆண்டு முதல் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்பட்டது. மக்கள் மத்தியில் சாலை பாதுகாப்பை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிறது.


பைக்கில் வந்தவரை நிறுத்தி ஃப்ளவர் பொக்கே கொடுத்து பாராட்டிய எஸ்.பி! ஏன் தெரியுமா?

சாலை விபத்துகள்

அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் சாலைகளில் அதிவேகமாக செல்வது, வாகனங்களுக்கு இடையில் முறையான தொலைவு இடைவெளி இல்லாமல் செல்வது மற்றும் டிரைவிங்கின் போது உடல்நல கோளாறுகளால் ஏற்படும் அசவுகரியம் அல்லது கவனக்குறைவு, போதையில் வாகனம் ஓட்டுவது, செல்போனில் பேசி கொண்டே ஓட்டுவது, சோர்வு உள்ளிட்டவை சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. வாகன ஓட்டிகள் எதிர் பாதையில் நுழையும் போது, கார் சிக்னல்களை சரியாக பயன்படுத்தாமல் அல்லது வேறு வாகனத்தை முந்தி செல்ல முயற்சிக்கும் போது விபத்துகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் சாலை நிலைமைகளும் விபத்துக்களுக்கு காரணமாகின்றன.


பைக்கில் வந்தவரை நிறுத்தி ஃப்ளவர் பொக்கே கொடுத்து பாராட்டிய எஸ்.பி! ஏன் தெரியுமா?

தேசிய சாலை பாதுகாப்பு மாதம்

இந்நிலையில் நமது நாட்டில், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் பொருட்டு, இந்த ஆண்டு ஜனவரி 15 முதல் பிப்ரவரி 14 வரை தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்படுகிறது. சாலையைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் விபத்தில்லாப் பயணத்தை உறுதி செய்வது தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவின் முக்கிய நோக்கமாகும். தமிழ்நாடு அரசின் விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை அடையும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 2023-2024 ஆம் ஆண்டிற்கு, சாலைப் பாதுகாப்பிற்காக அரசு 135 கோடியே 84 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியானது, குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அடிக்கடி விபத்து நிகழும் பகுதிகளைக் கண்டறிந்து மேம்படுத்தவும், நவீன சமிக்ஞை விளக்குகள், சாலைக் கட்டமைப்புகள் மற்றும் சாலைத் தடுப்பான்களை நிறுவுவதற்காகவும் செலவிடப்பட்டு வருகிறது.


பைக்கில் வந்தவரை நிறுத்தி ஃப்ளவர் பொக்கே கொடுத்து பாராட்டிய எஸ்.பி! ஏன் தெரியுமா?

மயிலாடுதுறையில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் விழா

அதன் ஒரு நிகழ்வாக தேசிய சாலை பாதுகாப்பு மாதம் விழா மயிலாடுதுறையில் அனுசரிக்கப்பட்டது. விழாவையொட்டி மயிலாடுதுறை வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையில் நடைபெற்ற பேரணியில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா கலந்துகொண்டு ஹெல்மெட் பேரணியை தொடக்கி வைத்தார். இதில், வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள், காவல்துறையினர் மற்றும் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகத்தினர் கலந்துகொண்டு, வட்டார போக்குவரத்து அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். முன்னதாக, சாலையில் ஹெல்மெட் அணிந்து வந்த முதல் இருசக்கர வாகன ஓட்டியை நிறுத்தி, அவருக்கு ப்ளவர் பொக்கே கொடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா பாராட்டு தெரிவித்தார். இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேணுகோபால் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Kayalvizhi: ”நான் தான்.. சம்மனை கிழித்ததே படிக்க தான்” - சீமான் மனைவி கயல்விழி புது விளக்கம்
Seeman Kayalvizhi: ”நான் தான்.. சம்மனை கிழித்ததே படிக்க தான்” - சீமான் மனைவி கயல்விழி புது விளக்கம்
TN Governor: தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - ”இந்தி எதிர்ப்பு என்ற பெயரில்..”
TN Governor: தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - ”இந்தி எதிர்ப்பு என்ற பெயரில்..”
Health Ministry Warning: இயர்ஃபோன், ஹெட்ஃபோன்களால் ஆபத்து.. சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை என்ன.?
இயர்ஃபோன், ஹெட்ஃபோன்களால் ஆபத்து.. சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை என்ன.?
Kaliammal: என்னது..அதிமுகவில் காளியம்மாளா.? இன்னும் எத்தனை கட்சியிலதான் அவங்கள சேர்ப்பீங்க.?
என்னது..அதிமுகவில் காளியம்மாளா.? இன்னும் எத்தனை கட்சியிலதான் அவங்கள சேர்ப்பீங்க.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kaliammal in ADMK: அதிமுகவில் காளியம்மாள்? EPS கொடுத்த அதிரடி OFFER.. விஜயபாஸ்கர் பக்கா ஸ்கெட்ச்Vijayalakshmi Seeman Case: விஜயலட்சுமி பாலியல் வழக்கு! நேரில் ஆஜராகாத சீமான்! நெருக்கும் காவல்துறைSexual Harassment | வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம நபர் பாலியல் தொல்லை வாணியம்பாடியில் பகீர் சம்பவம்Jyotika on Hindi | ”என் மகனுக்கு இந்தியே பிடிக்காது” அடித்துக்கொள்ளும் DMK, BJP ஜோதிகா கொடுத்த பேட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Kayalvizhi: ”நான் தான்.. சம்மனை கிழித்ததே படிக்க தான்” - சீமான் மனைவி கயல்விழி புது விளக்கம்
Seeman Kayalvizhi: ”நான் தான்.. சம்மனை கிழித்ததே படிக்க தான்” - சீமான் மனைவி கயல்விழி புது விளக்கம்
TN Governor: தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - ”இந்தி எதிர்ப்பு என்ற பெயரில்..”
TN Governor: தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - ”இந்தி எதிர்ப்பு என்ற பெயரில்..”
Health Ministry Warning: இயர்ஃபோன், ஹெட்ஃபோன்களால் ஆபத்து.. சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை என்ன.?
இயர்ஃபோன், ஹெட்ஃபோன்களால் ஆபத்து.. சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை என்ன.?
Kaliammal: என்னது..அதிமுகவில் காளியம்மாளா.? இன்னும் எத்தனை கட்சியிலதான் அவங்கள சேர்ப்பீங்க.?
என்னது..அதிமுகவில் காளியம்மாளா.? இன்னும் எத்தனை கட்சியிலதான் அவங்கள சேர்ப்பீங்க.?
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
Chennai Corporation: ஆப்படித்த சென்னை மாநகராட்சி - கட்டணங்கள் கிடுகிடுவென உயர்வு, 300% ரொம்ப ஓவர் இல்லையா?
Chennai Corporation: ஆப்படித்த சென்னை மாநகராட்சி - கட்டணங்கள் கிடுகிடுவென உயர்வு, 300% ரொம்ப ஓவர் இல்லையா?
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
Embed widget