மேலும் அறிய

போலீஸ் என்றால் இப்படித்தான் இருக்கணும்...காவலர்களுக்கு மயிலாடுதுறை எஸ்பி வழங்கிய அறிவுரைகள்..!

மயிலாடுதுறையில் விறுவிறுப்பாக நடந்த கூட்டுத்திரள் கவாத்து பயிற்சி நிறைவு நிகழ்வில் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் காவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் விறுவிறுப்பாக நடந்த கூட்டுத்திரள் கவாத்து பயிற்சி நிறைவு நிகழ்வில் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் காவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

காவல்துறையின் மிக முக்கிய அங்கமாக விளங்கும் ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் துரித செயல்பாட்டை பறைசாற்றும் வகையில், மயிலாடுதுறை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த காவலர்களுக்கான வருடாந்திர கூட்டுத்திரள் கவாத்து பயிற்சி (Mob Parade)  மிகச் சிறப்பான முறையில் நிறைவடைந்தது.

பயிற்சியின் பின்னணி மற்றும் நோக்கம்

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் ஆயுதப்படை காவலர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை இத்தகைய சிறப்பு கூட்டுத்திரள் கவாத்து பயிற்சி வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.ஸ்டாலினின் நேரடி உத்தரவின் பேரில், மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் காவலர்களுக்காக இந்தப் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த ஜனவரி 19, 2026 அன்று தொடங்கிய இந்தப் பயிற்சி முகாம், சுமார் 20 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று சிறப்பாக நிறைவுற்றது.

பயிற்சியில் வழங்கப்பட்ட முக்கிய அம்சங்கள்

இந்த 20 நாள் பயிற்சியில் காவலர்களுக்குப் பல்வேறு கட்டங்களாகப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
*கவாத்து நினைவூட்டல்: காவலர்களின் நடை மற்றும் அணிவகுப்பு முறைகளை மெருகேற்றும் பயிற்சிகள்.
*படைக்கலன்கள் வகுப்பு: காவல்துறையினர் பயன்படுத்தும் நவீன ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களைக் கையாளும் முறைகள் குறித்த தொழில்நுட்ப வகுப்புகள்.
*கலவரக் கட்டுப்பாடு: அவசர காலங்களில் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் கலவரங்களை ஒடுக்குவது குறித்த நேரடி செயல்முறை பயிற்சிகள்.
ஒவ்வொரு நாளும் பயிற்சியினை மேற்பார்வையிட மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு துணைக்காவல் கண்காணிப்பாளர் (DSP) நேரில் கலந்து கொண்டு காவலர்களை ஊக்கப்படுத்தினர்.

கம்பீரமான அணிவகுப்பு மரியாதையை ஏற்ற கண்காணிப்பாளர்

நிறைவு விழாவிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமை தாங்கினார். மைதானத்தில் திரண்டிருந்த காவலர்களின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, காவலர்கள் பயன்படுத்தும் படைக்கலன்கள், சீருடை மற்றும் பிற உபகரணங்களை அவர் தனித்தனியாக ஆய்வு செய்து, அவற்றின் பராமரிப்பு குறித்துக் கேட்டறிந்தார்.

காவலர்களுக்கு எஸ்பி வழங்கிய அதிரடி அறிவுரைகள்

நிகழ்வின் இறுதியில், காவலர்கள் மத்தியில் உரையாற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பணியின் போது கடைபிடிக்க வேண்டிய மிக முக்கியமான 7 கட்டளைகளை வழங்கினார்.
* ஒழுக்கம் மற்றும் கடமை: பணியில் எப்போதும் மிக உயர்ந்த ஒழுக்கத்தையும், கடமை தவறாத மனப்பான்மையையும் கொண்டிருக்க வேண்டும்.
*மிடுக்கான சீருடை: குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு வரும்போது, சீருடையை மிகச் சுத்தமாகவும், மிடுக்காகவும் அணிந்து வர வேண்டும்.
* பாதுகாப்பு எச்சரிக்கை: முக்கியப் பிரமுகர்கள் அல்லது கைதிகளுக்கு வழிக்காவல் (Escort) செல்லும்போது மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
* ஆயுதக் கையாளுகை: பணியில் ஆயுதங்களைப் பயன்படுத்தும் காவலர்கள், அவற்றைப் பாதுகாப்பான முறையில் கையாள வேண்டும்.
*வாகனப் பராமரிப்பு: காவல் வாகனங்களை ஓட்டும் காவலர்கள் சாலை விதிகளை மதிப்பதோடு, வாகனங்களை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
* விழிப்புடன் இருத்தல்: பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும்போது சிறு கவனச்சிதறலும் இன்றி விழிப்புடன் செயல்பட வேண்டும்.
* அதிகாரிகளின் உத்தரவு: உயர் அதிகாரிகள் வழங்கும் கட்டளைகளைத் துல்லியமாக நிறைவேற்ற வேண்டும் என அறிவுத்தினார்.

இந்நிகழ்வின் போது மயிலாடுதுறை மாவட்ட ஆயுதப்படை துணைக்காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் உடனிருந்தார். இந்தப் பயிற்சியின் மூலம் மயிலாடுதுறை மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் புதிய உத்வேகத்துடன் தங்கள் பணியைத் தொடரத் தயாராகியுள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

காசிக்கு இணையான திருவெண்காடு சந்திர தீர்த்தத்தில் தெப்பத்தில் மிதந்து வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த சுவாமி - அம்பாள்!
காசிக்கு இணையான திருவெண்காடு சந்திர தீர்த்தத்தில் தெப்பத்தில் மிதந்து வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த சுவாமி - அம்பாள்!
வாக்காளர்களுக்கு நம்பிக்கையூட்டும் பாதுகாப்பு நடவடிக்கை: மயிலாடுதுறை அருகே துப்பாக்கி ஏந்திய வீரர்களின் அணிவகுப்பு...!
வாக்காளர்களுக்கு நம்பிக்கையூட்டும் பாதுகாப்பு நடவடிக்கை: மயிலாடுதுறை அருகே துப்பாக்கி ஏந்திய வீரர்களின் அணிவகுப்பு...!
8-வது மற்றும் 10-வது படித்த 16 மாவட்ட இளைஞர்களுக்கு இந்திய இராணுவத்தில் வேலைவாய்ப்பு...! முழு விபரம் இதோ...
8-வது மற்றும் 10-வது படித்த 16 மாவட்ட இளைஞர்களுக்கு இந்திய இராணுவத்தில் வேலைவாய்ப்பு...! முழு விபரம் இதோ...
ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது
ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது" என்பதே அரசின் முதன்மை நோக்கம் - அண்ணாதுரை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Petrol Diesel Issue India: பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
Embed widget