மேலும் அறிய

“சிகரெட் பிடிக்காதீர்கள் வாசனை அதிகமாக உள்ளது” - ஆய்வின்போது அட்வைஸ் செய்த எம்.பி சுதா

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்றுவரும் விரிவாக்கப் பணிகளை ஆய்வு செய்த எம்.பி. சுதா இரட்டை ரயில் வழித்தடம் ஏற்படுத்துவதற்கு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்துவேன் என தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்றுவரும் விரிவாக்கப் பணிகளை ஆய்வு செய்த எம்.பி. சுதா இரட்டை ரயில் வழித்தடம் ஏற்படுத்துவதற்கு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்துவேன் என தெரிவித்துள்ளார்.

அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்க பணிகள்

மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த விரிவாக்கப்பணிகள் மிகவும் மந்தகதியில் நடைபெற்று வருவதாக ரயில் பயணிகள் தொடர்ந்து குற்றச்சாட்டை தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் இப்பணிகளை மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா தீடீர் ஆய்வு மேற்கொண்டார். 


“சிகரெட் பிடிக்காதீர்கள் வாசனை அதிகமாக உள்ளது” - ஆய்வின்போது அட்வைஸ் செய்த எம்.பி சுதா

குறைகள் குறித்து அடுத்தடுத்து கேள்வி 

ஆய்வின்போது, நடைமேடையில் பதிக்கப்பட்ட டைல்ஸ் கற்கள் உடைந்து தரமற்ற முறையில் இருந்ததைக் கண்டு அவர் ஒப்பந்ததாரரிடம் பணிகளை சரியாக செய்யுங்கள், மீண்டும் மீண்டும் உடைப்பதற்காகவா டைல்ஸ் போடுகிறீர்கள்? இந்த பணிக்காக மீண்டும் நிதி ஒதுக்க முடியுமா? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார். தொடர்ந்து சமையல் கூடம், தங்கும் அறை கட்டுமான பணிகளை பார்வையிட்டார். பின்னர், பேட்டரி கார் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா? என்று ஓட்டுநரிடம் கேள்வி எழுப்பினார். அப்போது, ஓட்டுநரிடம் இருந்து சிகரெட் வாடை வந்ததால், பேட்டரி கார் ஓட்டும்போது சிகரெட் பிடிக்காதீர்கள், சிகரெட் வாசனை அதிகமாக உள்ளது, காரில் பெரியவர்கள், சிறுவர்கள் என அனைவரும் வருவார்கள் என்று அறிவுறுத்தினார். 


“சிகரெட் பிடிக்காதீர்கள் வாசனை அதிகமாக உள்ளது” - ஆய்வின்போது அட்வைஸ் செய்த எம்.பி சுதா

செய்தியாளர் சந்திப்பு 

தொடர்ந்து ஆய்வுக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது; மயிலாடுதுறை வழியாக 88 ரயில்களுக்குமேல் சென்னை செல்லும் நிலையில் ஒரு சில ரயில்கள் மட்டுமே மயிலாடுதுறையில் நின்று செல்கிறது. இதனால், பொதுமக்கள் கடுமையாக அவதியடைகின்றனர். சென்னையில் இருந்து மயிலாடுதுறை வரும் பயணிகள், மீண்டும் உடனடியாக சென்னைக்கு திரும்பிச் செல்லும் வகையில் இன்டர்சிட்டி ரயில் சேவை ஏற்படுத்தித் தர ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இன்டர்சிட்டி ரயிலை உடனடியாக இயக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.


“சிகரெட் பிடிக்காதீர்கள் வாசனை அதிகமாக உள்ளது” - ஆய்வின்போது அட்வைஸ் செய்த எம்.பி சுதா

மயிலாடுதுறை - தரங்கம்பாடி வழித்தடத்தில் மீண்டும் ரயில் சேவை

மயிலாடுதுறை பகுதியில் இரட்டைவழி பாதை இல்லாதது மிகப்பெரிய குறைபாடாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படவில்லை. ரயில்களில் பயணிக்கும் நான் அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து பலமுறை புகார் தெரிவித்துள்ளேன். இரட்டை ரயில் வழித்தடம் ஏற்படுத்துவதற்கு வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேச உள்ளேன். மயிலாடுதுறை - தரங்கம்பாடி வழித்தடத்தில் மீண்டும் ரயில் சேவையை துவக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து நான் தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் பேசியபோது என்னுடைய கவனத்திற்கு வரவில்லை என்றும், தரங்கம்பாடி ரயில் சேவை மீண்டும் துவங்குவது குறித்து ஒரு குழு அமைத்து அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக என்னிடம் தெரிவித்தார். 

ஆன்மீக சுற்றுலா தலமாக உள்ள மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு பயனளிக்கும் வகையில் தங்கும் விடுதி அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளேன். இடம் உள்ளது. ஆனால் விடுதி அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதுகுறித்து ஆவண செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் செல்வராஜ், ரயில்வே அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் உடன் இருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Donald Trump: எக்கச்சக்கமா வரி, இந்தியாட்டா தான் நிறைய பணம் இருக்கே..அப்புறம் என்ன? - அதிபர் ட்ரம்ப் அதிரடி
Donald Trump: எக்கச்சக்கமா வரி, இந்தியாட்டா தான் நிறைய பணம் இருக்கே..அப்புறம் என்ன? - அதிபர் ட்ரம்ப் அதிரடி
Champions Trophy 2025: கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து..! இன்று தொடங்குகிறது சாம்பியன்ஸ் ட்ராபி போட்டி - மொத்தமா தெரிஞ்சிக்கலாமா..
Champions Trophy 2025: கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து..! இன்று தொடங்குகிறது சாம்பியன்ஸ் ட்ராபி போட்டி - மொத்தமா தெரிஞ்சிக்கலாமா..
Champions Trophy 2025: சம்பவங்கள் லோடட்..! உடையப்போகும் சாதனைகள் - சாம்பியன்ஸ் ட்ராபி, காத்திருக்கும் கோலி, ரோகித்
Champions Trophy 2025: சம்பவங்கள் லோடட்..! உடையப்போகும் சாதனைகள் - சாம்பியன்ஸ் ட்ராபி, காத்திருக்கும் கோலி, ரோகித்
Rasipalan (19-02-2025 ): கன்னிக்கு மகிழ்ச்சி; தனுசுக்கு ஆதாயம் - இன்றைய ராசிபலன்!
Rasipalan (19-02-2025 ): கன்னிக்கு மகிழ்ச்சி; தனுசுக்கு ஆதாயம் - இன்றைய ராசிபலன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!Avadi Murder CCTV: பட்டப்பகலில் வெட்டிக்கொலை!பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!ஆவடியில் நடந்த பயங்கரம்Chengalpattu News: ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்புChengalpattu News | ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Donald Trump: எக்கச்சக்கமா வரி, இந்தியாட்டா தான் நிறைய பணம் இருக்கே..அப்புறம் என்ன? - அதிபர் ட்ரம்ப் அதிரடி
Donald Trump: எக்கச்சக்கமா வரி, இந்தியாட்டா தான் நிறைய பணம் இருக்கே..அப்புறம் என்ன? - அதிபர் ட்ரம்ப் அதிரடி
Champions Trophy 2025: கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து..! இன்று தொடங்குகிறது சாம்பியன்ஸ் ட்ராபி போட்டி - மொத்தமா தெரிஞ்சிக்கலாமா..
Champions Trophy 2025: கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து..! இன்று தொடங்குகிறது சாம்பியன்ஸ் ட்ராபி போட்டி - மொத்தமா தெரிஞ்சிக்கலாமா..
Champions Trophy 2025: சம்பவங்கள் லோடட்..! உடையப்போகும் சாதனைகள் - சாம்பியன்ஸ் ட்ராபி, காத்திருக்கும் கோலி, ரோகித்
Champions Trophy 2025: சம்பவங்கள் லோடட்..! உடையப்போகும் சாதனைகள் - சாம்பியன்ஸ் ட்ராபி, காத்திருக்கும் கோலி, ரோகித்
Rasipalan (19-02-2025 ): கன்னிக்கு மகிழ்ச்சி; தனுசுக்கு ஆதாயம் - இன்றைய ராசிபலன்!
Rasipalan (19-02-2025 ): கன்னிக்கு மகிழ்ச்சி; தனுசுக்கு ஆதாயம் - இன்றைய ராசிபலன்!
"உங்க அப்பன் வீட்டு காச கேட்கல" ஆர்ப்பாட்டத்தில் பொளந்து கட்டிய துணை முதல்வர் உதயநிதி!
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.