மேலும் அறிய

அக்னி, சூரியன், சந்திரன்... மூன்று தீர்த்தங்களிலும் தீர்த்தவாரி: திருவெண்காட்டில் நடந்த ஆன்மீக அதிசயம்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மும்மடி தீர்த்தவாரி நடைபெற்றது.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள ஆன்மீகப் புகழ்பெற்ற திருவெண்காடு கிராமத்தில், தேவாரப் பாடல் பெற்ற புகழ்பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. காவிரி வடகரைத் தலங்களில் ஒன்றாகத் திகழும் இக்கோயிலில், இன்று ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு  தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

மூர்த்தி, தலம், தீர்த்தச் சிறப்பு

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் பல்வேறு ஆன்மீகச் சிறப்புகளைத் தன்னுள் கொண்ட ஒரு உன்னதத் தலமாகும். சிவபெருமானின் உக்ர வடிவமும், சிவ அவதாரங்களில் மிக முக்கியமான ஒன்றுமான அகோர மூர்த்தி இங்கு தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

மேலும், நவகிரகங்களில் கல்வி, அறிவு, வியாபாரத்திற்கு அதிபதியான புதன் பகவான் இத்தலத்தில் தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இதனால் இது புதன் பரிகாரத் தலமாகவும் போற்றப்படுகிறது. இத்தலத்தின் மற்றொரு பெரும் சிறப்பு, இங்கு அமைந்துள்ள மூன்று புனித தீர்த்தங்களாகும்.

அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திரன் தீர்த்தம் என அழைக்கப்படும் இந்த மூன்று குளங்களும் பக்தர்களின் பாவங்களைப் போக்கும் புனித நீர்நிலைகளாகக் கருதப்படுகின்றன.

ஆடி மாதப் பிறப்பு: அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம்

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதங்களில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஆடி மாதப் பிறப்பன்று புண்ணிய நதிகளிலும், தீர்த்தங்களிலும் பக்தர்கள் நீராடுவது வழக்கம். அந்த வகையில், இன்று ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு திருவெண்காடு கோயிலில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் தொடங்கின. தொடர்ந்து முக்கிய நிகழ்வாக, கோயிலில் இருந்து அஸ்திர தேவர் புறப்பட்டு தீர்த்தக் கரைக்கு எழுந்தருளினார். அங்கு அஸ்திர தேவருக்கு மஞ்சள், திரவியப்பொடி, பால், தயிர், இளநீர், தேன், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தீப ஆராதனைகள் காட்டப்பட்டன.


அபிஷேக ஆராதனைகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, விழாவின் சிகர நிகழ்வான தீர்த்தவாரி நடைபெற்றது. அக்னி, சூரியன், சந்திரன் ஆகிய மூன்று புனித தீர்த்தக் குளங்களிலும் அஸ்திர தேவர் முறைப்படி எழுந்தருளச் செய்யப்பட்டு, மூன்று குளங்களிலும் அடுத்தடுத்து தீர்த்தம் அளிக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

அஸ்திர தேவர் புனித குளங்களில் நீராடிய அந்தப் புனிதமான தருணத்தில், குளக்கரைகளில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் "ஹர ஹர மகாதேவா", "தென்னாடுடைய சிவனே போற்றி" எனப் பக்தி முழக்கங்களை எழுப்பியவாறு, தீர்த்தக் குளங்களில் வழிபாடு செய்தனர். ஆடி மாதப் பிறப்பன்று இந்த மூன்று குளங்களிலும் நீராடினால் நினைத்த காரியம் கைகூடும் என்பதும், தோஷங்கள் நீங்கும் என்பதும் பக்தர்களின் பலத்த நம்பிக்கையாகும்.

முறையாக நடைபெற்ற வழிபாடுகள்

இந்தத் தீர்த்தவாரி மற்றும் சிறப்புப் பூசைகள் அனைத்தையும் கோயிலின் அர்ச்சகர் வினோத் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஆகம விதிப்படி மிகச் சிறப்பாகச் செய்து வைத்தனர். தீர்த்தவாரி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, சுவேதாரண்யேஸ்வரர், பிரம்ம வித்யாம்பிகை, அகோர மூர்த்தி மற்றும் புதன் பகவானுக்குப் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. புனித நீராடிய பக்தர்கள்  சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆடி மாத முதல் நாளை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் குடும்பம் குடும்பமாகத் திருவெண்காட்டிற்கு வருகை தந்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காகக் கோவில் நிர்வாகம் சார்பிலும், உள்ளாட்சி அமைப்புகள் சார்பிலும் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஆடி மாதத் தொடக்கமே திருவெண்காடு தலத்தில் இத்தகு ஆன்மீக எழுச்சியுடன் தொடங்கியிருப்பது அப்பகுதி மக்களிடையேயும், சிவபக்தர்களிடையேயும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

அக்னி, சூரியன், சந்திரன்... மூன்று தீர்த்தங்களிலும் தீர்த்தவாரி: திருவெண்காட்டில் நடந்த ஆன்மீக அதிசயம்!
அக்னி, சூரியன், சந்திரன்... மூன்று தீர்த்தங்களிலும் தீர்த்தவாரி: திருவெண்காட்டில் நடந்த ஆன்மீக அதிசயம்!
டெல்டா விவசாயிகளுக்கு நிம்மதி செய்தி! சிபில் ஸ்கோர் பார்க்காமல் கடன் வழங்கும் இந்தியன் வங்கி!
டெல்டா விவசாயிகளுக்கு நிம்மதி செய்தி! சிபில் ஸ்கோர் பார்க்காமல் கடன் வழங்கும் இந்தியன் வங்கி!
அதிகாரிகளின் ‘ அதிரடி ரைடு... ஆடிப்போன மயிலாடுதுறை வணிகர்கள்!
அதிகாரிகளின் ‘ அதிரடி ரைடு... ஆடிப்போன மயிலாடுதுறை வணிகர்கள்!
10 நாட்கள்... 35 மாற்றுத்திறனாளிகள்... மாற்றத்தை நோக்கிப் பாயும் மயிலாடுதுறை! முழு விபரம் உள்ளே!
10 நாட்கள்... 35 மாற்றுத்திறனாளிகள்...மாற்றத்தை நோக்கிப் பாயும் மயிலாடுதுறை! முழு விபரம் உள்ளே!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Meghalaya Project : ’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலாயா’ பெயருக்கான காரணம் என்ன?
’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலாயா’ பெயருக்கான காரணம் என்ன?
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
Cheapest Diesel SUV: நாட்டின் மலிவான டீசல் எஸ்யுவி, 24KM மைலேஜ், ப்ரீமியம் அம்சங்கள், 3 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான டீசல் எஸ்யுவி, 24KM மைலேஜ், ப்ரீமியம் அம்சங்கள், 3 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
The Odyssey Review: ”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
Embed widget