மேலும் அறிய

தனது நினைவு நாளில் வந்த சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் - எங்கே தெரியுமா..?

சீர்காழியில் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் மாணவர்கள் மத்தியில் சட்டமேதை அம்பேத்கராக மாறியுள்ளார் அரசு பள்ளி ஆசிரியர் தாமஸ் ஜெபர்சன்.

சீர்காழியில் அம்பேத்கர் நினைவு தினத்தில் மாணவர்கள் மத்தியில் டாக்டர் அம்பேத்கராக மாறியுள்ளார் அரசு பள்ளி ஆசிரியர் தாமஸ் ஜெபர்சனின் செயல் பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.

அளப்பரிய ஆசிரியர் பணி

சுயநலம் மிக்க இந்த உலகில் எந்த எதிர்பார்ப்புகளுமின்றி தாய், தந்தையை காட்டிலும் நமது வெற்றியை கண்டு உச்ச மகிழ்ச்சியை அடைபவர் யார் எனில் அது ஆசிரியர்களே. அம்மாவின் இடுப்பை விடுவித்து, அழுது, ஆர்ப்பாட்டம் செய்து பால்வாடிக்கு செல்லும் குழந்தையை, தாயை போல் கவனித்து அரவணைக்கும் டீச்சர் முதல், பட்ட படிப்பு வரை நம்மை செதுக்குவதில் நமது ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. 


தனது நினைவு நாளில் வந்த சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் - எங்கே தெரியுமா..?

வாழ்வின் வழிகாட்டி 

ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குபவர். ஒன்றுமே தெரியாமல் பள்ளியில் சேரும் குழந்தைகளை ஒரு பொக்கிஷ புத்தகமாக மாற்றுவதே ஆசிரியர்கள் தான். ஆசிரியர் என்பவர் ஒட்டுமொத்த உலக அறிவையும் ஒரே இடத்தில் இருந்து மாணவர்களுக்கு சொல்லி தருபவர்கள். நாம் படிக்கும் பள்ளியில் நமக்கு கிடைத்த ஒரு அறிய புதையல் தான் ஆசிரியர்கள்.ஏன் இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு உயிர்களும் ஆசிரியர் தான். சிறிய மண்புழு கூட மண்ணை எப்படி உரமாக்குவது என்பதை கற்று தருகிறது. “சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்” என்னும் பழமொழியை வைத்து, மனிதன் ஆறு அறிவுடன் பிறந்திருந்தாலும் அவனுடைய அறிவை பயன்படுத்துவதற்கு ஒரு வழிகாட்டி தேவை. அந்த வழிகாட்டி தான் ஆசிரியர்கள். 


தனது நினைவு நாளில் வந்த சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் - எங்கே தெரியுமா..?

“எழுத்தறிவித்தவன் இறைவனாவான்” என்ற பழமொழிக்கேற்ப ஒரு மனிதனுக்கு யாரெல்லாம் கல்வியறிவை கற்றுத் தருகிறார்களோ அவர்களெல்லாம் இறைவனுக்கு நிகரானவர்கள் என்று கூறப்படுகிறது. அதுபோல, ஆசிரியர்கள் இறைவனுக்கு நிகரானவர்கள். ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவனுக்கும் கிடைத்த நல்ல நண்பன். நாம் கற்கும் கல்வியை தவிர இந்த உலகிலுள்ள அனைத்தும் அழியக்கூடியவை. அழிவில்லா கல்வியை கற்று தரும் ஆசிரியர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். மற்ற செல்வங்கள் எல்லாம் அழிந்து விடும். ஆனால் கல்வி செல்வமானது அழிவில்லா செல்வமாகும். அந்த கல்வி செல்வத்தை அள்ளித் தரும் ஆசிரியர்கள் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும்.


தனது நினைவு நாளில் வந்த சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் - எங்கே தெரியுமா..?

அம்பேத்கர் நினைவு தினம் 

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அருகே சட்டநாதபுரத்தில் செயல்பட்டு வருகிறது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த ஏழை எளிய விவசாய கூலி தொழிலாளர்களின் குழந்தைகள் அதிகளவில் கல்வி பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக தாமஸ் ஜெபர்சன் என்பவர் பணியாற்றி வருகிறார். மாணவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட ஆசிரியர் தாமஸ் ஜெபர்சன் மாணவர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் வித்தியாசமாக ஏதாவது செய்து பாடம் நடத்தி வருகிறார். இதன் காரணமாக அப்பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் தாமஸ் ஜெபர்சன் மீது மிகுந்த பற்று. மேலும் அவர் தேசப்பற்றயும், தேச தலைவர்களையும் பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ள அவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில் அவர்களை போன்று பாரதியார், காமராஜர், காந்தியடிகள் என வேடம் அணிந்து பள்ளிக்கு வந்து அன்றையதினம் முழுவதும் அந்த தலைவர்கள் போலவே நடந்து கொள்கிறார். இதன் மூலம் தலைவர்கள் பற்றிய புரிதலை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தெரிந்துக்கொள்வது மட்டும் இன்றி அவர்களை பற்றி எளிதாக அறிய முடிகிறது என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சூழலில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம் டிசம்பர் 6-ம் தேதி அனுசரிக்கப்படுவதை அடுத்து ஆசிரியர் தாமஸ் ஜெபர்சன் டாக்டர் அம்பேத்கர் வேடம் அணிந்து பள்ளி வந்து மாணவர்கள் மத்தியில் டாக்டர் அம்பேத்கர் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து அன்றை தினம் அம்பேத்கராகவே மாணவர்கள் மத்தியில் நடந்துக்கொண்டார். அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது தற்போது எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தாலும், இதுபோன்ற அறப்பணி உடன் பல ஆசிரியர்கள் ஆசிரியர் பணியை அறப்பணியாக கருதி வருவது பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
Dindigul Leoni:
Dindigul Leoni: "அண்ணாமலையால் இதை செய்ய முடியுமா? 2026-ல் ஜீரோ தான்... " சவால்விட்ட லியோனி
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chariot falls in Bangalore | ”தள்ளுங்க.. தள்ளுங்க சாய்து” சரிந்த 150 அடி ராட்சத தேர் பெங்களூருரில் கோர சம்பவம்Kaaraikudi Rowdy Murder  ஓட ஓட விரட்டி ரவுடி கொலை தந்தைக்காக பழிதீர்த்த திகில் கிளப்பும் CCTV காட்சிஅதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
Dindigul Leoni:
Dindigul Leoni: "அண்ணாமலையால் இதை செய்ய முடியுமா? 2026-ல் ஜீரோ தான்... " சவால்விட்ட லியோனி
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
Embed widget