Mayiladuthurai Power Shutdown (07.07.2026) :நாளை உங்க ஊர்ல பவர் கட் இருக்கா? சீர்காழி மின்வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Mayiladuthurai Power Shutdown 07.07.2026: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட திருவெண்காடு பகுதியில் நாளை 07.07.2026 அன்று மாபெரும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பல முக்கிய கிராமங்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என்று மின்வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பொதுமக்கள் தங்களின் அன்றாட தேவைகளையும், மின்சாரம் சார்ந்த பணிகளையும் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளும் வகையில் இந்த முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
மின்நிறுத்தம் செய்யப்படும் நேரங்கள்
பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 3 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும்.
துணைமின் நிலைய பராமரிப்பு பணிகள்
சீர்காழி கோட்டத்தின் தெற்குப் பகுதிக்கு உட்பட்ட 110/11 கி.வோ. திருவெண்காடு துணைமின் நிலையத்தில் இந்த அவசர மற்றும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. மின் விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், வரவிருக்கும் காலங்களில் தடையற்ற மின்சாரத்தை வழங்கவும் இத்தகைய மாதாந்திர பராமரிப்பு பணிகள் அவசியமாகின்றன. மின் கம்பிகள் சீரமைப்பு, மரக்கிளைகள் அகற்றுதல், மின்மாற்றிகளில் (Transformers) எண்ணெய் பரிசோதனை மற்றும் பழுது நீக்குதல் போன்ற பணிகள் நாளை மேற்கொள்ளப்பட உள்ளன.
மின்தடை நேரம்
நாளை : 07-07-2026 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை. தொடர்ந்து 8 மணி நேரத்திற்கு மின் விநியோகம் முழுமையாக நிறுத்தப்படும். பராமரிப்பு பணிகள் திட்டமிட்டபடி விரைவாக முடிக்கப்பட்டால், மாலை 5 மணிக்கு முன்னதாகவே மின் விநியோகம் சீரமைக்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், பணிகள் முடியும் வரை பொதுமக்கள் பொறுமை காக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மின்தடை ஏற்படும் முக்கிய பகுதிகள்
திருவெண்காடு 110/11 கி.வோ. துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் கீழ்க்கண்ட 11 முக்கிய வருவாய் கிராமங்கள் மற்றும் அவற்றின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது.
1.திருவெண்காடு (துணைமின் நிலையம் அமைந்துள்ள தலைமைப் பகுதி)
2. மேலையூர்
3. மணிக்கிராமம்
4. பூம்புகார் (வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலம்)
5. பெருந்தோட்டம்
6. நாங்கூர்
7. திருநகரி
8. திருவாலி
9. மேலசாலை
10. மங்கைமடம்
11.அண்ணன்பெருமாள்கோவில்
இவை தவிர, மேற்கூறிய கிராமங்களைச் சுற்றியுள்ள அனைத்து சிறிய கிராமங்கள், விவசாயப் பகுதிகள் மற்றும் குடியிருப்புகளுக்கும் இந்த மின்தடை பொருந்தும்.
மின்வாரியத்தின் முக்கிய அறிவிப்பு மற்றும் வேண்டுகோள்
இது குறித்து சீர்காழி தெற்குப் பகுதியின் இயக்குதலும் & பராமரித்தலும் பிரிவின் உதவி செயற் பொறியாளர் பொறி. க.அனுராதா, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மின்கட்டமைப்பு சீரமைப்பு மற்றும் இதர தவிர்க்க முடியாத தொழில்நுட்ப காரணங்களைப் பொறுத்து, இந்த மின்தடை நேரத்தில் கடைசி நேர மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான குடிநீர் சேமிப்பு போன்ற அத்தியாவசிய தேவைகளை மின்தடை நேரத்திற்கு முன்பாகவே செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பராமரிப்புப் பணிகள் நடைபெறும் போது பொதுமக்கள் மின் கம்பிகள் அல்லது மின்சார சாதனங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்றும், பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் மின்வாரிய ஊழியர்கள் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தற்காலிக சிரமத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு சீர்காழி மின் பகிர்மான கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
Before You Go
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























