Mayiladuthurai Power Shutdown (07.02.2026) :மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பவர் கட் எங்கே தெரியுமா..?
Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் தடை செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி கோட்டங்களைச் சேர்ந்த பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, நாளை பிப்ரவரி 07 (சனிக்கிழமை) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அந்தந்தப் பகுதி உதவி செயற்பொறியாளர்கள் மூர்த்தி, ரேணுகா, விஜயபாரதி ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
பொதுமக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளும் பொருட்டு, மின்தடை ஏற்படும் இடங்கள் மற்றும் நேரங்கள் குறித்த விரிவான விவரங்கள் பின்வருமாறு:
மயிலாடுதுறை, பாலையூர், மேக்கிரிமங்கலம், மணக்குடி, அரசூர், ஆச்சாள்புரம் துணை மின் நிலையங்கள்
மயிலாடுதுறை மாவட்ட உதவி செயற்பொறியாளர்கள் (இயக்குதல் மற்றும் பராமரிப்பு) விடுத்துள்ள அறிக்கையில், மயிலாடுதுறை, பாலையூர், மணக்குடி, மேக்கிரிமங்கலம், அரசூர் , ஆச்சாள்புரம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், நாளை (07.02.2026) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்நிறுத்தம் மேற்கொள்ளும் இடங்கள்
அரசூர் மற்றும் ஆச்சாள்புரம் துணைமின்நிலையங்கள்
ஆச்சாள்புரம், மாங்கனம்பட்டு, தைக்கால், கொள்ளிடம், ஆணைக்காரன்சத்திரம், நல்லூர், நாதல்படுகை, மகேந்திரப்பள்ளி, சரஸ்வதிவிளாகம், அளக்குடி, புளியந்துறை, பழையார், புதுப்பட்டினம், மாதானம், பழையபாளையம், பச்சைபெருமாநல்லூர், சீயாளம், தாண்டவன்குளம், மடவாமேடு, புத்தூர், எருக்கூர், மாதிரிவேளூர், வடரங்கம், அகணி, குன்னம், அரசூர்
பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் துணை மின் நிலையங்கள்
பாலையூர், பருத்திக்குடி, காரனூர், நக்கம்பாடி, மாந்தை, கங்காதரபுரம், தேரழுந்தூர், கோமல், கள்ளிக்காடு, பெரட்டக்குடி, கந்தமங்கலம், வடமட்டம், காஞ்சிவாய், கோனோரிராஜபுரம், மேக்கரிமங்கலம், பழையகூடலூர், கொக்கூர், திருவாலங்காடு, திருவாடுதுறை, பேராவூர்
மயிலாடுதுறை மற்றும் மணக்குடி துணை மின் நிலையங்கள்
பழைய SBI தெரு, அரசு மருத்துவமனை சாலை, மகாதானத் தெரு, பெரிய கடைத் தெரு, பூம்புகார் ரோடு, தரங்கை சாலை, தருமபுரம் மெயின் ரோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மன்னன் பந்தல், ஏவிசி கல்லூரி, சேமங்கலம், ஆலவெலி, நத்தம், வேப்பங்குளம், சாவடி, உளுத்துக்குப்பை, மொழையூர், ஆனந்ததண்டவபுரம், மணக்குடி கீழிருப்பு, மாப்படுகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள்.
அதிகாரிகளின் முக்கிய அறிவிப்பு
இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், "மின்கட்டமைப்புகளைப் பலப்படுத்தவும், தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யவும் இந்த மாதாந்திர பராமரிப்புப் பணிகள் அவசியமானவை. பராமரிப்புப் பணிகள் முடிவடைந்தவுடன், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே மின் விநியோகம் மீண்டும் வழங்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், வானிலை மாற்றங்கள் அல்லது தொழில்நுட்பக் காரணங்களால் பராமரிப்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டால், மின்தடை நேரம் மாற்றத்திற்கு உட்பட்டது," எனத் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் இந்த மின்தடை அறிவிப்பைக் கருத்தில் கொண்டு, தங்களுக்குத் தேவையான குடிநீர் சேமிப்பு மற்றும் இதர மின்சாரப் பணிகளை முன்கூட்டியே முடித்துக்கொண்டு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
மின்நிறுத்த நேரம்
பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 3 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
























