Mayiladuthurai Power Shutdown (18.06.2026) : மயிலாடுதுறை மக்களே மகிழ்ச்சி செய்தி! இன்று அறிவிக்கப்பட்ட மின் தடை திடீரென ரத்து!
Mayiladuthurai Power Shutdown 18.06.2026: மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட இருந்த மின் தடை ரத்து செய்யப்பட்டுள்து.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை கோட்டத்திற்கு உட்பட்ட பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் ஆகிய முக்கிய துணைமின் நிலையங்களில் அவசர மற்றும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், இன்றைய தினம் ஜூன் 18, 2026 (வியாழக்கிழமை) இந்த துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பாலையூர் 110 கி.வோ தொகுப்பு துணைமின் நிலைய உதவி செயற் பொறியாளர் பொறிஞர். N. அருள்செல்வன், தெரிவித்திருந்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருந்த அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், பொதுமக்களின் பாதுகாப்பான மற்றும் தடையற்ற மின்சாரத் தேவையை உறுதி செய்யும் பொருட்டு, ஆண்டுதோறும் அல்லது மாதந்தோறும் மின் கம்பங்கள், மின் மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்கள்) மற்றும் உயர் அழுத்த மின் பாதைகளில் உள்ள பழுதுகளை நீக்கும் பணிகள் வழக்கமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் துணைமின் நிலையங்களில் இந்த மாதத்திற்கான அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
மின் நிறுத்தம் செய்யப்படும் நேர விவரம்
தேதி: 18.06.2026 (வியாழக்கிழமை)
நேரம்: காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை (சுமார் 8 மணி நேரம்)
பராமரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று, நிர்ணயிக்கப்பட்ட மாலை 5.00 மணிக்குள் பணிகள் அனைத்தும் நிறைவடைந்தவுடன் உடனடியாக மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என்றும், பணிகள் நீடிக்கும் பட்சத்தில் மின் விநியோகம் சீராக சற்று காலதாமதம் ஆகலாம் என்றும் மின் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மின் பாதிப்புக்குள்ளாகும் கிராமங்கள் மற்றும் பகுதிகள்
பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் துணைமின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பின்வரும் கிராமங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் அன்றைய தினம் மின்சார விநியோகம் இருக்காது.
முக்கிய நகரங்கள் மற்றும் கிராமங்கள்
* பாலையூர்
* பருத்திக்குடி
* காரனூர்
* நக்கம்பாடி
* மாந்தை
* கங்காதாரபுரம்
* தேரழந்தூர்
* கோமல்
* கள்ளிக்காடு
* பெரட்டக்குடி
* கந்தமங்கலம்
* வடமட்டம்
* காஞ்சிவாய்
* கோனேரிராஜபுரம்
* மேக்கிரிமங்கலம்
* பழையகூடலூர்
* கொக்கூர்
* திருவாலங்காடு
* திருவாவடுதுறை
* பேராவூர்
இதர பகுதிகள்: மேற்கண்ட கிராமங்களைச் சுற்றியுள்ள அனைத்து சிறிய கிராமங்கள், விவசாயப் பகுதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள்.
பொதுமக்களுக்கு மின் வாரியத்தின் முக்கிய வேண்டுகோள்
இந்த 8 மணி நேர மின் நிறுத்தத்தின் காரணமாக, அப்பகுதிகளில் உள்ள சிறு, குறு தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் அன்றாட பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
எனவே, பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தங்களுக்குத் தேவையான குடிநீர் தேவைகளை முன்னரே சேமித்து வைத்துக் கொள்ளுமாறும், மின்சார விநியோகம் இல்லாத நேரத்தில் மின் சாதனங்களை பாதுகாப்பாக கையாளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக, மின் வாரிய ஊழியர்கள் உயர் அழுத்த மின் பாதைகளில் நேரடியாக வேலை செய்வதால், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள இன்வெர்ட்டர் (Inverter) அல்லது ஜெனரேட்டர் (Generator) போன்ற சாதனங்களை மின்சார லைன்களுடன் மாற்றி இணைக்க வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.
மயிலாடுதுறை கோட்ட மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த மின் நிறுத்தத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு உதவி செயற் பொறியாளர் பொறிஞர். N. அருள்செல்வன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கனிவுடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மின் நிறுத்தம் வாபஸ்
இந்நிலையில் இன்று வியாழக்கிழமை (18.06.2026) திட்டமிடப்பட்டு இருந்த பாலையூர் & மேக்கிரிமங்கலம் துணை மின் நிலையம், மற்றும் சுற்று வட்டார பகுதி மாதாந்திர பராமரிப்பு பணி தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Before You Go
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























