மேலும் அறிய

"எல்லாம் காதலுக்காக.." எம்.எல்.ஏ-விடமே சினிமா பாணியில் கைவரிசை காட்டிய மேலாளர்: கிடுக்கிப்பிடி விசாரணையில் உடைந்த மயக்க நாடகம்!

பூம்புகார் MLA மேலாளர் காதலியுடன் சேர்ந்து ரூ.42.5 லட்சத்தை சுருட்டி நாடகமாடியது நிலையில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

சீர்காழி: பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகனின் நம்பிக்கைக்குரிய மேலாளராகப் பணியாற்றி வந்த நபர், தனது காதலியுடன் சேர்ந்து ரூ.42.5 லட்சத்தை நூதன முறையில் கொள்ளையடித்து, மயக்கம் வந்தது போல் நாடகமாடிய சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடித் திட்டத்தை உடைத்தெறிந்த சீர்காழி காவல்துறையினர், மேலாளர் மற்றும் அவரது காதலியை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பின்னணி என்ன?

மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் சேஷாத்தலை செட்டி தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 32). இவர் பூம்புகார் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகனிடம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மேலாளராகப் பணியாற்றி வந்தார். நீண்ட காலமாகப் பணியாற்றி வந்ததால், எம்.எல்.ஏ.வின் குடும்பத்தினரிடம் மிகுந்த நம்பிக்கையைப் பெற்றவராக சிவக்குமார் விளங்கியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி நிவேதா முருகன் எம்.எல்.ஏ.வின் மனைவி லெட்சுமி, சீர்காழியில் வசித்து வரும் தனது மகளிடம் கொடுப்பதற்காக ரூ.42 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணத்தை மேலாளர் சிவக்குமாரிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். வழக்கம்போல் நம்பிக்கையுடன் பணத்தைப் பெற்றுக்கொண்ட சிவக்குமார், தனது இருசக்கர வாகனத்தில் சீர்காழி நோக்கிப் புறப்பட்டுள்ளார்.

மயக்க நாடகமும் மர்மக் கதையும்

சீர்காழி செங்கமேடு புறவழிச்சாலை மேம்பாலம் பகுதியில் சிவக்குமார் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சிறிது நேரத்திற்குப் பிறகு மயக்கம் தெளிந்து பார்த்தபோது, தன்னிடம் இருந்த ரூ.42.5 லட்சம் அடங்கிய பணப்பை காணாமல் போயிருந்ததாக அவர் எம்.எல்.ஏ.வின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், பதற்றத்தில் தனக்கு மீண்டும் மயக்கம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி, சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகவும் அனுமதிக்கப்பட்டார். பணம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுவிட்டதாக சிவக்குமார் கூறிய கதையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த எம்.எல்.ஏ.வின் மகன் நிக்கேஷ் (26), உடனடியாக சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சிசிடிவி காட்சிகளால் உடைந்த திரைக்கதை

எதிர்கட்சி எம்.எல்.ஏ.வின் வீட்டில் லட்சக்கணக்கான ரூபாய் கொள்ளை போனதாகப் புகார் எழுந்ததால், காவல்துறை உடனடியாக களத்தில் குதித்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், சீர்காழி டி.எஸ்.பி. சரவணன், இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் சம்பவம் நடந்த செங்கமேடு புறவழிச்சாலை பகுதியில் தீவிர விசாரணையைத் தொடங்கினர்.

முதற்கட்டமாக, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் (CCTV) பதிவுகளைப் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, சிவக்குமார் குறிப்பிட்ட நேரத்தில் அந்தப் பகுதியில் மர்ம நபர்கள் எவரும் அவரைப் பின்தொடரவில்லை என்பதும், மாறாக ஒரு பெண் அங்கு வந்து சிவக்குமாரிடம் இருந்து ஒரு பையைப் பெற்றுச் செல்வதும் சிசிடிவி காட்சிகளில் தெளிவாகப் பதிவாகியிருந்தது.

கிடுக்கிப்பிடி விசாரணையில் வெளிவந்த உண்மை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவக்குமாரிடம் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறியதால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. தொடர்ந்து காவல்துறையினர் தங்களது பாணியில் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது, சிவக்குமார் குற்றத்தை ஒப்புக்கொண்டு, தான் ஆடிய பகீர் நாடகத்தை வாக்குமூலமாக அளித்தார். காவல்துறை விசாரணையில் சிவக்குமார் அளித்த வாக்குமூலத்தில் "எம்.எல்.ஏ.வின் வீட்டில் இவ்வளவு பெரிய தொகை கைக்கு வந்ததும் எனது பேராசை தூண்டியது.

இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டேன். இதற்காக பொறையார் பகுதியைச் சேர்ந்த எனது காதலி கவிதாவை செல்போன் மூலம் தொடர்புகொண்டு, சீர்காழி புறவழிச் சாலை பணமங்கலம் பகுதிக்கு வருமாறு கூறினேன்.

அவர் திட்டமிட்டபடி அங்கு வந்ததும், யாரிடமும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காகப் பணப்பையை அவரிடம் கொடுத்துவிட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தேன். பின்னர், பணம் கொள்ளை போனதாக நம்ப வைக்கவே, எனக்கு மயக்கம் வந்துவிட்டது போலச் சாலையில் விழுந்து நாடகமாடினேன். என சிவக்குமார் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

காதலி கைது: பணமும் மீட்பு

சிவக்குமார் கொடுத்த தகவலின் அடிப்படையில், பொறையார் பகுதியில் மறைந்திருந்த அவரது காதலி கவிதாவை போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். உடனடியாக போலீசார் கவிதா வீட்டில் புதைத்து வைத்திருந்த ரூபாய் 35 லட்சத்தை பணத்தை பறிமுதல் செய்து சிவக்குமார் மற்றும் கவிதா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் 44 லட்சத்தில் 35 லட்சம் மட்டுமே வீட்டி இருந்துள்ளது கவிதா பீரோ மற்றும் 5 சவரன் தங்க நகைகள் வாங்கியும் அதனை தொடர் பணத்தை வட்டிக்கு விடும் தொழிலை தொடங்கி தொழிலதிபராக தனது உல்லாச வாழ்கை தொடங்கிய நேரத்தில் போலீசாரிடம் சிக்கியுள்ளார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சீர்காழி போலீசார் 35 லட்சம் பணம், சிவக்குமார் மற்றும் கவிதா பயன்படுத்திய இரண்டு ஸ்கூட்டியை பறிமுதல் செய்தனர்.

நம்பிக்க துரோகம் மற்றும் மோசடி செய்த குற்றத்திற்காக மேலாளர் சிவக்குமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது காதலி ஆகிய இருவர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த சீர்காழி போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

10 ஆண்டுகள் நம்பிக்கையாக இருந்த மேலாளரே, காதலியுடன் சேர்ந்து எம்.எல்.ஏ.வின் பணத்தைச் சுருட்ட சினிமா பாணியில் மயக்க நாடகமாடிய சம்பவம் டெல்டா மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், புகாரளித்த சில மணி நேரங்களிலேயே துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்த சீர்காழி போலீசாரைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
Embed widget