மேலும் அறிய

தொடங்கிய இடத்திலேயே தடுத்து நிறுத்தம்; மீத்தேன் எதிர்ப்பு திட்ட குழுவினர் விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி மறுப்பு

காவிரி படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடங்கிய பரப்புரை நடைபயணத்தை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

காவிரி படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பூம்புகாரில் தொடங்கி தஞ்சாவூர் வரையிலான மீத்தேன் எதிர்ப்பு திட்ட குழுவினரின் பரப்புரை நடைபயணத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்துள்ளனர்.

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் பரப்புரை நடைபயணம்

காவிரி படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 24 -ம் தேதி முதல் 29-ம் தேதி வரை பூம்புகாரில் தொடங்கி தஞ்சாவூர் வரை பரப்புரை நடைபயணம் மேற்கொள்ளப்பட உள்ளதாக மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது.


தொடங்கிய இடத்திலேயே தடுத்து நிறுத்தம்; மீத்தேன் எதிர்ப்பு திட்ட குழுவினர் விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி மறுப்பு

பரப்புரை நடை பயணம் தொடக்கம்

அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 24-ம் தேதி தனது பரப்புரை நடை பயணத்தை தொடங்கியது. வேளாண் மண்டல பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும், எண்ணெய் எரிவாயு திட்டங்களால் காவிரிபடுகை கனிம கொள்ளையை தடுத்து நிறுத்தி பாதுகாக்க வலியுறுத்தி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு 24ம் தேதி முதல் 29ஆம் தேதி வரை பூம்புகாரில் இருந்து தஞ்சாவூர் வரை பரப்புரை நடைப்பயணம் பூம்புகாரில் தொடங்கியது. தொடங்கிய சிறிது நேரத்தில் காவல்துறையினர் நடைபயணத்தை தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்துறையினருக்கும் நடைபயணம் சென்றவர்களும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாகனத்தில் சென்று விழிப்புணர்வு செய்து கடைகள் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்க அனுமதி மறுத்த காவல்துறையினர் மாலை நேர பொதுக்கூட்டம் மட்டும் அனுமதி வழங்கினர்.  


தொடங்கிய இடத்திலேயே தடுத்து நிறுத்தம்; மீத்தேன் எதிர்ப்பு திட்ட குழுவினர் விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி மறுப்பு

கோரிக்கை விபரம்

காவிரிப்படுகை முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டல சட்டவரம்புக்குள் கொண்டு வர வேண்டும். 

கடலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களும் வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும்.

காவிரிப்படுகையில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்கள் மட்டுமே நடைபெற வேண்டும். வேளாண் மண்டலம் தொழில் மண்டலம் ஆகக்கூடாது.

விளைநிலங்கள் விளைநிலங்களாகவே தொடர பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

காவிரிப்படுகை வேளாண் மண்டலத்தில் பழைய எண்ணெய் - எரிவாயுக் கிணறுகளின் வயதை நிர்ணயித்து, கிணறுகளின் அடிப்படை ஆவணங்கள் மற்றும் செயல்படத் தேவையான அனுமதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, சட்டவிரோதக் கிணறுகள் உடனடியாக மூடப்பட வேண்டும்.


தொடங்கிய இடத்திலேயே தடுத்து நிறுத்தம்; மீத்தேன் எதிர்ப்பு திட்ட குழுவினர் விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி மறுப்பு

தொழிலக  அனுமதிகள், எண்ணெய் எரிவாயுத் திட்டங்கள் தொடர்பான மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாடுகள் நெறிப்படுத்தப்பட வேண்டும்.

எண்ணெய் எரிவாயுத் திட்டங்களால் காவிரிப்படுகை அடைந்த பாதிப்புகள் குறித்த பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் ஆய்வு அறிக்கை உடனடியாக வெளியிடப்பட வேண்டும்.

தமிழகக் கடற்பகுதியில் மீன்வளத்தையும், மீன் பிடித் தொழிலையும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களையும் காப்பதற்காக, கடற்பகுதியிலும் எண்ணெய் - எரிவாயுக் கிணறுகள் அமைப்பதைத் தடை செய்ய வேண்டும். விளைநிலங்களின் குறுக்கே எண்ணெய் - எரிவாயுக் குழாய்கள் அமைப்பதைத் தடை செய்ய வேண்டும்.

காவிரிப்படுகையில் உள்ள ஏரி, குளம், பாசனக் கால்வாய்கள் மற்றும் வடிகால் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, நீர்நிலைகள் மீட்கப்பட வேண்டும். காவிரிப்படுகை முழுவதும் நீர் பாசனக் கட்டமைப்பு, நீர் மேலாண்மை செயல்பாடுகள் மேம்படுத்தப்பட வேண்டும்.


தொடங்கிய இடத்திலேயே தடுத்து நிறுத்தம்; மீத்தேன் எதிர்ப்பு திட்ட குழுவினர் விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி மறுப்பு

கனிம வளங்கள் மீது வரி விதிக்க மாநில அரசுகளுக்கே உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்ற அரசமைப்பு அமர்வு 25.7.2024 அன்று தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டின் கனிமங்களின் மீதான வரி விதிப்புக் கொள்கையை தமிழ்நாடு அரசு வகுக்க வேண்டும். கனிமவளச் சூறையைத் தடுத்து நிறுத்தி, தமிழ்நாட்டின் இயற்கை வளம் மற்றும் கனிம வளத்தைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.


தொடங்கிய இடத்திலேயே தடுத்து நிறுத்தம்; மீத்தேன் எதிர்ப்பு திட்ட குழுவினர் விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி மறுப்பு

உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி மீத்தேன் எதிர்ப்பு குழுவினர் நடைபயண பேரணியை தொடங்கினர். இதில் தந்தை பெரியார் திராவிட கழகம், விவசாய சங்கத்தினர், தமிழக மக்கள் முன்னணி, மார்க்சிய பெரியார் பொதுவுடமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி மனிதநேய மக்கள் கட்சி ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், மக்கள் தமிழக கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றிருந்த நிலையில் மீத்தேன் எதிர்ப்பு திட்ட குழுவினரின் பரப்புரை நடைப்பயணத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்து மாலை நேர பொதுக்கூட்டம் மட்டும் அனுமதி வழங்கினர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Quarterly Exam Holidays: பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்னது என்ன?
Quarterly Exam Holidays: பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்னது என்ன?
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
Salem Leopard: 10 சிறுத்தை குட்டிகளை தமிழக எல்லையில் விட்டுச் சென்ற கர்நாடகா வனத்துறையினர்? சேலத்தில் பரபரப்பு
Salem Leopard: 10 சிறுத்தை குட்டிகளை தமிழக எல்லையில் விட்டுச் சென்ற கர்நாடகா வனத்துறையினர்? சேலத்தில் பரபரப்பு
இன்ப அதிர்ச்சி கொடுத்த கல்வித்துறை அமைச்சர்... உற்சாகமான பள்ளி மாணவ, மாணவிகள்
இன்ப அதிர்ச்சி கொடுத்த கல்வித்துறை அமைச்சர்... உற்சாகமான பள்ளி மாணவ, மாணவிகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Aarthi Issue | வீட்டுக்குள் விடாத ஆர்த்தி?ஜெயம் ரவி பரபரப்பு புகார்!”காரை மீட்டு கொடுங்க”Aadhav Arjuna on A Rasa : பொசுக்குன்னு கேட்ட ஆதவ்! கூட்டணியில் அடுத்த ஷாக் ஆ.ராசாவின் அடுத்த மூவ்?Durai Dayanidhi Discharge : '’துரையை PHOTO எடுக்காத’’கொந்தளித்த அழகிரி! செய்தியாளர்கள் மீது தாக்குதல்Ravikumar vs Aadhav arjuna : ”இப்படி பேசலாமா ஆதவ்” விசிகவில் வெடித்த கலகம்! ரவிக்குமார் போர்க்கொடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Quarterly Exam Holidays: பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்னது என்ன?
Quarterly Exam Holidays: பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்னது என்ன?
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
Salem Leopard: 10 சிறுத்தை குட்டிகளை தமிழக எல்லையில் விட்டுச் சென்ற கர்நாடகா வனத்துறையினர்? சேலத்தில் பரபரப்பு
Salem Leopard: 10 சிறுத்தை குட்டிகளை தமிழக எல்லையில் விட்டுச் சென்ற கர்நாடகா வனத்துறையினர்? சேலத்தில் பரபரப்பு
இன்ப அதிர்ச்சி கொடுத்த கல்வித்துறை அமைச்சர்... உற்சாகமான பள்ளி மாணவ, மாணவிகள்
இன்ப அதிர்ச்சி கொடுத்த கல்வித்துறை அமைச்சர்... உற்சாகமான பள்ளி மாணவ, மாணவிகள்
Accident : காலையிலேயே விபத்து: உளுந்தூர்பேட்டை அருகே 6 பேர் உயிரிழப்பு... கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்...
Accident : காலையிலேயே விபத்து: உளுந்தூர்பேட்டை அருகே 6 பேர் உயிரிழப்பு... கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்...
RBI Rules: வங்கி ஊழியர்கள் உதவவில்லையா? வேண்டுமென்றே அலைகழிக்கின்றனரா? அப்ப இதை செய்யுங்க..!
RBI Rules: வங்கி ஊழியர்கள் உதவவில்லையா? வேண்டுமென்றே அலைகழிக்கின்றனரா? அப்ப இதை செய்யுங்க..!
MK Stalin Letter : ”சகோதரர் திருமாவளவன்” கடிதம் வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
MK Stalin Letter : ”சகோதரர் திருமாவளவன்” கடிதம் வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
விமானத்தில் திடீரென வந்த புகை.. எரிபொருள் நிரப்புவதில் குளறுபடி ? சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..
விமானத்தில் திடீரென வந்த புகை.. எரிபொருள் நிரப்புவதில் குளறுபடி ? சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..
Embed widget