மேலும் அறிய

இந்தாண்டு பருவமழை தண்ணீர் எங்கே நிக்குதுன்னு பாக்குறேன் - ஆட்சியர் அதிரடி..!

மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் மாவட்டம் முழுவதும் உள்ள வடிகால் வாய்க்கால்களில் தீவிர ஆய்வு மேற்கொண்டார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால் வாய்க்கால்களில் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

வடகிழக்கு பருவமழை 

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15 -ம் தேதி தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து. அதனைத் தொடர்ந்து மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மழை நேரங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெடுத்து பணிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டத்திலும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் வடிகால் வாய்க்கால்கள் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை முறையாக தூர்வாரியும், மழை நேரங்களில் மழைநீர் சரியாக சென்று வடியும் வகையிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இந்தாண்டு பருவமழை தண்ணீர் எங்கே நிக்குதுன்னு பாக்குறேன் - ஆட்சியர் அதிரடி..!

மயிலாடுதுறை மாவட்டத்தில் தீவிரம் 

இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இப்பணிகள் குறித்து மாவட்ட முழுவதும் நேரில் சென்று ஆய்வு செய்யது வருகிறார். மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட வடிகால் வாய்க்கால்களில் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, கூறைநாடு பகுதியில் உள்ள பெரியக்குளம் வாய்க்காலில் மழைநீர் செல்வதற்கு ஏதுவாக பொக்லைன் இயந்திரம் மூலம் கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, பணிகளை விரைவாக செய்து முடிக்க அறிவுறுத்தினார்.


இந்தாண்டு பருவமழை தண்ணீர் எங்கே நிக்குதுன்னு பாக்குறேன் - ஆட்சியர் அதிரடி..!

மயிலாடுதுறை வாய்க்கால்கள்

அதேபோன்று திருமஞ்சன வீதி, பட்டமங்கலம் ஆராயத்தெருவில் உள்ள வடிகால் வாய்கால்களில் மழைநீர் செல்வதற்கு இடையூராக உள்ள கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். பின்னர் மயிலாடுதுறை காவிரி ஆற்றங்கரை, துலாகட்டம் படித்துறைகளை ஆய்வு செய்து, எதிர்வரும் துலா உற்சவம் நிகழ்ச்சியில் பக்தர்கள் சிரமமின்றி நீராடுவதற்கு ஏற்றவாறு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும் ஊரக, நகர பகுதிகளில் மழைநீர் வடிவதற்குரிய வாய்க்கால்களை உடனடியாக ஆய்வு செய்து, வடிகால் வாய்க்கால்களில் மழைநீர், செல்வதற்கு இடையூராக உள்ள கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்திட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


இந்தாண்டு பருவமழை தண்ணீர் எங்கே நிக்குதுன்னு பாக்குறேன் - ஆட்சியர் அதிரடி..!

வார்டு வாரியாக பணி

காச்சேரி சாலையில் உள்ள பழங்காவேரி வாய்க்கால், 34 வது வார்டு, பட்டமங்கலம் ஆராயத்தெருவில் சீத வாய்க்கால், 31 வது வார்டு பட்டமங்கலம் ஆராயத்தெரு பெரியக்குளம் மேல்கரை, வார்டு-30 தனியூர் குடியிருப்பு பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால், ஆரோக்கிய நகர் பகுதியில் உள்ள தூக்கநாங்குளம், மாயூரநாதர் நகரில் உள்ள வடிகால் வாய்க்கால், ஹாஜியாநகர் காவேரி ஆற்றங்கரை வடிகால் அமைப்புகள், வார்டு-3 அம்பேத்கர் நகரில் உள்ள வடிகால் வாய்க்கால், திருமஞ்சன வீதி எம்.ஜி.ஆர் காலனியில் உள்ள வடிகால் வாய்க்கால், ஆனதாண்டவபுரம் பகுதியில் உள்ள சேந்தங்குடி வாய்க்கால் ஆகியவைகளை பார்வையிட்டு தூய்மைப்படுத்தும் பணிகளை தூரித படுத்தி மழைநீர் விரைந்து செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நகராட்சி செயற்பொறியாளருக்கு உத்தரவிட்டார். 


இந்தாண்டு பருவமழை தண்ணீர் எங்கே நிக்குதுன்னு பாக்குறேன் - ஆட்சியர் அதிரடி..!

சீர்காழி தாலுக்கா 

இதேபோல் முன்னதாக சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால் வாய்க்கால்கள் தூய்மைப்படுத்தும் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி களஆய்வு மேற்கொண்டார். மேலும் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட ஸ்ரீநகர் வடிகால் வாய்கால், ஊழியக்காரன் தோப்பு பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்களில் மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்கு ஏதுவாக பொக்லைன் இயந்திரம் மூலம் கழிவுகளை அகற்றி வாய்க்கால் தூய்மைப்படுத்துவதையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து ஊரக, நகர பகுதிகளில் மழைநீர் வடிவதற்குரிய வாய்க்கால்களை உடனடியாக ஆய்வு செய்து, வடிகால் வாய்க்கால்களில் மழைநீர் செல்வதற்கு இடையூராக உள்ள கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்திட வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


இந்தாண்டு பருவமழை தண்ணீர் எங்கே நிக்குதுன்னு பாக்குறேன் - ஆட்சியர் அதிரடி..!

இதன் மூலம் இந்தாண்டு வடகிழக்கு பருவமழையின் தாக்கம் குறையும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வில் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, நீர்வளத்துறை செயற்பொறியாளர் மாரிமுத்து, மயிலாடுதுறை நகராட்சி செயற்பொறியாளர் மகாதேவன், மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராணி, சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar
Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
TN Orange Alert: சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
Apple Distributors Warning: இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
MK Stalin Slams EPS: “சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
“சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
Embed widget