மேலும் அறிய

பாசன வாய்க்கால்கள் நடுவில் நடப்பட்டுள்ள மின்கம்பம் - விவசாயிகள் அதிர்ச்சி

குத்தாலம் அருகே சோழன்பேட்டை தென்பாதி பாசன வாய்க்காலின் நடுவே நடப்பட்டுள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்க அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சோழன்பேட்டை ஊராட்சி கல்லணை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காவிரி ஆற்றுப் பாசன தென்பாதி வாய்க்காலின் நடுவே ஆற்று நீர் போவதற்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தென்பாதி வாய்க்கால்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சோழன்பேட்டை ஊராட்சி கல்லணை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது காவிரி ஆற்றுப் பாசன வாய்க்காலான தென்பாதி வாய்க்கால். இந்த பிரதான காவிரி ஆற்றில் இருந்து பிரியும் தென்பாதி வாய்க்கால் சோழன்பேட்டை, ஆனந்த குடி, அருள்மொழி தேவன், உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு முக்கிய ஆற்றுப் பாசன வாய்க்காலாக திகழ்ந்தது வருகிறது.


பாசன வாய்க்கால்கள் நடுவில் நடப்பட்டுள்ள மின்கம்பம் - விவசாயிகள் அதிர்ச்சி

பயன்பெறும் விவசாயிகள் 

இந்த தென்பாதி வாய்க்கால் மூலம் அப்பகுதியில் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் மற்றும் ஏராளமான குளங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த வாய்க்கால் மூலம் வரக்கூடிய நீரை ஆங்காங்கே குளங்களில் சேகரித்து வைத்துக் கொண்டு தேவைப்படும் பொழுது விவசாயிகள் தங்களுடைய விவசாய பணிகளுக்கு நீரை பயன்படுத்தி வருவதோடு, மீன் வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


பாசன வாய்க்கால்கள் நடுவில் நடப்பட்டுள்ள மின்கம்பம் - விவசாயிகள் அதிர்ச்சி

சாலை அகலப்படுத்தும் பணி

இந்நிலையில் மயிலாடுதுறை- கல்லணை நெடுஞ்சாலையை ஒட்டி வரக்கூடிய பல ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த வாய்க்காலை நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை அகலப்படுத்துவதற்காக அதனுடைய அகலத்தை தற்போது குறைத்துள்ளனர். வாய்க்கால் நன்கு அகலமாக இருந்த பொழுது மின்சாரத் துறையினர் தங்களுடைய மின்கம்பங்களை வாய்க்காலின் நடுவே ஊன்றி சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின்விநியோகம் அளித்தனர். தற்பொழுது வாய்க்காலின் அகலம் நெடுஞ்சாலை துறையினரால் குறைக்கப்பட்டுள்ளதாலும், நடுவே நடப்பட்டுள்ள மின்கம்பத்தால் அதில் செடி கொடிகள் சிக்கி கொண்டு காவிரி ஆற்றில் இருந்து வரக்கூடிய நீர் சரியாக செல்ல முடியாமல் தடைப்பட்டு விளைநிலங்களும், குளங்களும் வாய்க்கால் பாசனம் பெறுவதில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 


பாசன வாய்க்கால்கள் நடுவில் நடப்பட்டுள்ள மின்கம்பம் - விவசாயிகள் அதிர்ச்சி

வாய்க்காலில் மின்கம்பம் 

இதுகுறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், இப்பொழுதும் மின் மோட்டார் வசதி இல்லாத விவசாயிகள் மற்றும் சிறுகுறு விவசாயிகளாகிய நாங்கள் காவிரி ஆற்றுப் பாசனத்தை நம்பி மட்டுமே விவசாயம் செய்து வருகிறோம். அப்படிப்பட்ட எங்களுக்கு பிரதான பாசன வாய்க்காலாக இருப்பது இந்த தென்பாதி வாய்க்கால், பழமையான இந்த வாய்க்கால் காவிரி ஆற்றில் இருந்து பிரிந்து மயிலாடுதுறை - கல்லணை நெடுஞ்சாலையை ஒட்டி வருகிறது. நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை அகலப்படுத்துவதற்காக வாய்க்காலின் அகலத்தை விவசாயிகளிடம், பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்காமல் தன்னிச்சையாக சிமெண்ட் ரிவிட்மெண்டுகள் அமைத்து அகலத்தை குறைத்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இந்த வாய்க்கால் அகலமாக இருந்த பொழுது இதன் நடுவே மின்சாரத்துறையினர் தங்களுடைய மின் கம்பங்களை நட்டு, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய மின் இணைப்புகளுக்கு மின்விநியோகம் செய்து வருகின்றனர். 


பாசன வாய்க்கால்கள் நடுவில் நடப்பட்டுள்ள மின்கம்பம் - விவசாயிகள் அதிர்ச்சி

விவசாயிகள் கோரிக்கை 

வாய்க்காலின் அகலம் குறைந்ததாலும், நடுவே மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளதாலும் தென்பாதி வாய்க்காலில் வரக்கூடிய ஆற்று நீரின் அளவு வெகுவாக குறைந்து விட்டது. இதனால் குளங்களில் நீர் நிரப்புவதிலும் விவசாய பணிகளுக்கு இந்த நீரை பயன்படுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விவசாயம் தான் நமது நாட்டின் பிரதான தொழில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பு என்பதை கருத்தில் கொண்டு வாய்க்காலின் நடுவே ஆற்று நீர் செல்வதற்கு தடையாக நடப்பட்டுள்ள மின் கம்பத்தை மாற்றி அமைப்பதற்கும் வாய்க்காலை அகலப்படுத்துவதற்கும், அதற்கான அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
ABP Premium

வீடியோ

Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
Embed widget