மேலும் அறிய

பாசன வாய்க்கால்கள் நடுவில் நடப்பட்டுள்ள மின்கம்பம் - விவசாயிகள் அதிர்ச்சி

குத்தாலம் அருகே சோழன்பேட்டை தென்பாதி பாசன வாய்க்காலின் நடுவே நடப்பட்டுள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்க அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சோழன்பேட்டை ஊராட்சி கல்லணை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காவிரி ஆற்றுப் பாசன தென்பாதி வாய்க்காலின் நடுவே ஆற்று நீர் போவதற்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தென்பாதி வாய்க்கால்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சோழன்பேட்டை ஊராட்சி கல்லணை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது காவிரி ஆற்றுப் பாசன வாய்க்காலான தென்பாதி வாய்க்கால். இந்த பிரதான காவிரி ஆற்றில் இருந்து பிரியும் தென்பாதி வாய்க்கால் சோழன்பேட்டை, ஆனந்த குடி, அருள்மொழி தேவன், உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு முக்கிய ஆற்றுப் பாசன வாய்க்காலாக திகழ்ந்தது வருகிறது.


பாசன வாய்க்கால்கள் நடுவில் நடப்பட்டுள்ள மின்கம்பம் - விவசாயிகள் அதிர்ச்சி

பயன்பெறும் விவசாயிகள் 

இந்த தென்பாதி வாய்க்கால் மூலம் அப்பகுதியில் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் மற்றும் ஏராளமான குளங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த வாய்க்கால் மூலம் வரக்கூடிய நீரை ஆங்காங்கே குளங்களில் சேகரித்து வைத்துக் கொண்டு தேவைப்படும் பொழுது விவசாயிகள் தங்களுடைய விவசாய பணிகளுக்கு நீரை பயன்படுத்தி வருவதோடு, மீன் வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


பாசன வாய்க்கால்கள் நடுவில் நடப்பட்டுள்ள மின்கம்பம் - விவசாயிகள் அதிர்ச்சி

சாலை அகலப்படுத்தும் பணி

இந்நிலையில் மயிலாடுதுறை- கல்லணை நெடுஞ்சாலையை ஒட்டி வரக்கூடிய பல ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த வாய்க்காலை நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை அகலப்படுத்துவதற்காக அதனுடைய அகலத்தை தற்போது குறைத்துள்ளனர். வாய்க்கால் நன்கு அகலமாக இருந்த பொழுது மின்சாரத் துறையினர் தங்களுடைய மின்கம்பங்களை வாய்க்காலின் நடுவே ஊன்றி சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின்விநியோகம் அளித்தனர். தற்பொழுது வாய்க்காலின் அகலம் நெடுஞ்சாலை துறையினரால் குறைக்கப்பட்டுள்ளதாலும், நடுவே நடப்பட்டுள்ள மின்கம்பத்தால் அதில் செடி கொடிகள் சிக்கி கொண்டு காவிரி ஆற்றில் இருந்து வரக்கூடிய நீர் சரியாக செல்ல முடியாமல் தடைப்பட்டு விளைநிலங்களும், குளங்களும் வாய்க்கால் பாசனம் பெறுவதில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 


பாசன வாய்க்கால்கள் நடுவில் நடப்பட்டுள்ள மின்கம்பம் - விவசாயிகள் அதிர்ச்சி

வாய்க்காலில் மின்கம்பம் 

இதுகுறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், இப்பொழுதும் மின் மோட்டார் வசதி இல்லாத விவசாயிகள் மற்றும் சிறுகுறு விவசாயிகளாகிய நாங்கள் காவிரி ஆற்றுப் பாசனத்தை நம்பி மட்டுமே விவசாயம் செய்து வருகிறோம். அப்படிப்பட்ட எங்களுக்கு பிரதான பாசன வாய்க்காலாக இருப்பது இந்த தென்பாதி வாய்க்கால், பழமையான இந்த வாய்க்கால் காவிரி ஆற்றில் இருந்து பிரிந்து மயிலாடுதுறை - கல்லணை நெடுஞ்சாலையை ஒட்டி வருகிறது. நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை அகலப்படுத்துவதற்காக வாய்க்காலின் அகலத்தை விவசாயிகளிடம், பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்காமல் தன்னிச்சையாக சிமெண்ட் ரிவிட்மெண்டுகள் அமைத்து அகலத்தை குறைத்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இந்த வாய்க்கால் அகலமாக இருந்த பொழுது இதன் நடுவே மின்சாரத்துறையினர் தங்களுடைய மின் கம்பங்களை நட்டு, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய மின் இணைப்புகளுக்கு மின்விநியோகம் செய்து வருகின்றனர். 


பாசன வாய்க்கால்கள் நடுவில் நடப்பட்டுள்ள மின்கம்பம் - விவசாயிகள் அதிர்ச்சி

விவசாயிகள் கோரிக்கை 

வாய்க்காலின் அகலம் குறைந்ததாலும், நடுவே மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளதாலும் தென்பாதி வாய்க்காலில் வரக்கூடிய ஆற்று நீரின் அளவு வெகுவாக குறைந்து விட்டது. இதனால் குளங்களில் நீர் நிரப்புவதிலும் விவசாய பணிகளுக்கு இந்த நீரை பயன்படுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விவசாயம் தான் நமது நாட்டின் பிரதான தொழில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பு என்பதை கருத்தில் கொண்டு வாய்க்காலின் நடுவே ஆற்று நீர் செல்வதற்கு தடையாக நடப்பட்டுள்ள மின் கம்பத்தை மாற்றி அமைப்பதற்கும் வாய்க்காலை அகலப்படுத்துவதற்கும், அதற்கான அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Bihar ‘INDIA‘ CM Candidate: பீகார் சட்டமன்ற தேர்தல்; இண்டியா கூட்டணி முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு
பீகார் சட்டமன்ற தேர்தல்; இண்டியா கூட்டணி முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
IND Vs Aus 2nd ODI: சொதப்பிய கோலி, கலக்கிய ரோகித், ஸ்ரேயாஸ், அக்சர் - ஆஸி.,க்கு 265 ரன்கள் இலக்கு
IND Vs Aus 2nd ODI: சொதப்பிய கோலி, கலக்கிய ரோகித், ஸ்ரேயாஸ், அக்சர் - ஆஸி.,க்கு 265 ரன்கள் இலக்கு
Pakistani Taliban: ”ஆம்பளையா இருந்தா வாடா” பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு தாலிபன்கள் சவால் - ரூ.10 கோடி பரிசு
Pakistani Taliban: ”ஆம்பளையா இருந்தா வாடா” பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு தாலிபன்கள் சவால் - ரூ.10 கோடி பரிசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Child dies in rainwater | தேங்கி நின்ற மழைநீர்! மூழ்கி உயிரிழந்த குழந்தை! கையில் DRESS. கதறி அழுத தாய்
தாமதமாகும் DGP நியமனம்! மத்திய அரசு கொடுத்த LIST! கடுப்பான தமிழக அரசு
சித்தராமையாவுக்கு ENDCARD! முதல்வராகும் DK சிவக்குமார்? சித்தராமையா மகன் பகீர்
ஜப்பானின் முதல் பெண் பிரதமர் வரலாறு படைத்த சனே டகாய்ச்சி காத்திருக்கும் சவால்கள்..! | Japan New PM Sanae Takaichi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bihar ‘INDIA‘ CM Candidate: பீகார் சட்டமன்ற தேர்தல்; இண்டியா கூட்டணி முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு
பீகார் சட்டமன்ற தேர்தல்; இண்டியா கூட்டணி முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
IND Vs Aus 2nd ODI: சொதப்பிய கோலி, கலக்கிய ரோகித், ஸ்ரேயாஸ், அக்சர் - ஆஸி.,க்கு 265 ரன்கள் இலக்கு
IND Vs Aus 2nd ODI: சொதப்பிய கோலி, கலக்கிய ரோகித், ஸ்ரேயாஸ், அக்சர் - ஆஸி.,க்கு 265 ரன்கள் இலக்கு
Pakistani Taliban: ”ஆம்பளையா இருந்தா வாடா” பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு தாலிபன்கள் சவால் - ரூ.10 கோடி பரிசு
Pakistani Taliban: ”ஆம்பளையா இருந்தா வாடா” பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு தாலிபன்கள் சவால் - ரூ.10 கோடி பரிசு
Rohit Sharma: கவிழ்த்த கிங்.. முதல் ஆளாக மாஸ் காட்டிய ஹிட்மேன் - தெ.ஆப்., ரோகித் டிக்கெட் கன்ஃபார்ம்
Rohit Sharma: கவிழ்த்த கிங்.. முதல் ஆளாக மாஸ் காட்டிய ஹிட்மேன் - தெ.ஆப்., ரோகித் டிக்கெட் கன்ஃபார்ம்
Russia Nuclear Drill: ரஷ்யா-உக்ரைன் போர்; எகிறும் பதற்றம்; புதின் மேற்பார்வையில் நடந்த அணு ஆயுதப் படைகளின் ஒத்திகை
ரஷ்யா-உக்ரைன் போர்; எகிறும் பதற்றம்; புதின் மேற்பார்வையில் நடந்த அணு ஆயுதப் படைகளின் ஒத்திகை
Virat Kohli: எல்லாம் முடிந்ததா..! நாலே பால் தான், நடையை கட்டிய விராட் கோலி - மீண்டும் டக் அவுட்.. ரசிகர்களுக்கு நன்றி
Virat Kohli: எல்லாம் முடிந்ததா..! நாலே பால் தான், நடையை கட்டிய விராட் கோலி - மீண்டும் டக் அவுட்.. ரசிகர்களுக்கு நன்றி
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. செங்கல்பட்டு-அரக்கோணம் இடையே புதிய ரயில் பாதை..முக்கிய நன்மை என்ன?
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. செங்கல்பட்டு-அரக்கோணம் இடையே புதிய ரயில் பாதை..முக்கிய நன்மை என்ன?
Embed widget