மேலும் அறிய

அமைச்சரின் தாயார் ஊரில் அவலம் ; வாய்க்காலில் இறங்கி இறந்தவரின் உடலை எடுத்து செல்லும் மக்கள்

சீர்காழி அருகே மயானத்திற்கு செல்ல முறையான சாலை மற்றும் பாலம் வசதி இல்லாததால் வயல் மற்றும் வாய்க்கால்களில் இறந்தவரின் உடலை ஆபத்தான முறையில் எடுத்துச் செல்லும் அவல நிலை நிலவிவருகிறது.

துர்கா ஸ்டாலின் சொந்த ஊரான மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காட்டில் மயானத்திற்கு செல்ல முறையான சாலை மற்றும் பாலம் வசதி இல்லாததால் வயல் மற்றும் வாய்க்கால்களில் இறந்தவரின் உடலை தங்கள் உயிரை பணயம் வைத்து ஆபத்தான முறையில் எடுத்துச் செல்லும் அவல நிலை நிலவி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தொடரும் சுடுகாடு சாலை பிரச்சினைகள்

பொதுவாக சாலை பிரச்சனை தமிழக முழுவதும் பல பகுதிகளில் அதுவும் கிராமப்புறங்களில் தீர்க்க முடியாத பிரச்சனையாக நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக மயானத்திற்கு செல்லும் பாதை இல்லை எனக் கூறி இறந்தவர்களின் உடலுடன் போராட்டம் செய்யும் சம்பவங்களும் அவ்வபோது தமிழகத்தில் நடந்தேறி வருகிறது. ஆனால் அதற்கான முழுமையான தீர்வு என்பதை இன்றளவும் அரசால் சாத்தியப்படுத்த முடியவில்லை. நன்குவழிச் சாலை எட்டு வழி சாலை என சாலை விரிவாக்க பணிகளுக்காக பல லட்சம் ஏக்கரில் விலை நிலங்கள் குடியிருப்புகள் என கையகப்படுத்தி சாலை அமைக்கும் அரசுக்கு, சாமானிய மக்களுக்கான மயானங்களுக்கு சாலை என்பது இன்றளவும் சாத்தியம் அற்றதாகவே இருந்து வருகிறது.


அமைச்சரின் தாயார் ஊரில் அவலம் ; வாய்க்காலில் இறங்கி இறந்தவரின் உடலை எடுத்து செல்லும் மக்கள்

திருவெண்காடில் சுடுகாடு சாலை 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காடு ஊராட்சிக்கு உட்பட்ட அய்யனார் கோயில் தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பர் நேற்று முன்தினம் நடைபெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவரது இறுதி சடங்கு நடைபெறுகிறது. உயிரிழந்த முத்துகிருஷ்ணனின் உடலை நல்லடக்கம் செய்ய அவரது உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் நல்லடக்கம் செய்ய மயானத்திற்கு செல்லும் சாலை போதிய வசதி இல்லாததால் வயல் மற்றும் வாய்க்கால்களின் வழியே அவரின் உடலை எடுத்து செல்லும் அவல நிலை ஏற்பட்டது.


அமைச்சரின் தாயார் ஊரில் அவலம் ; வாய்க்காலில் இறங்கி இறந்தவரின் உடலை எடுத்து செல்லும் மக்கள்

பொதுமக்களின் குற்றச்சாட்டு 

மணிக்கரணை கூழவாய்க்காலில் பாலம் அமைத்து மயான செல்லும் சாலை அமைத்து தரக்கோரி பலமுறை அப்பகுதி மக்கள் மனு அளித்தும், இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டை பதிவு செய்யும் கிராமவாசிகள், இறந்த முத்துகிருஷ்ணனின் உடலை வாயல் வழியே வாய்க்காலில் இறங்கி பாதுகாப்பு அற்ற முறையில் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர். அப்பொழுது அவரது உறவினர்கள் வாய்க்காலில் இறங்கி ஏறும் போது வழுக்கி விழுந்து நிலை ஏற்பட்டது.

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி: ஒரு வழியாக உண்மையை போட்டு உடைத்த முதலமைச்சர் ஸ்டாலின்


அமைச்சரின் தாயார் ஊரில் அவலம் ; வாய்க்காலில் இறங்கி இறந்தவரின் உடலை எடுத்து செல்லும் மக்கள்

இதேபோல் இப்பகுதியில் இறப்பவர்களின்  உடல்களை நல்லடக்கம் செய்ய பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் அடக்கம் செய்வது வருவதாகவும், வாய்க்கால்களில் குறைந்த அளவு தண்ணீர் செல்லும் போது இந்த நிலையில் என்றால், மழைக்காலங்களில் இந்த நிலை மிகவும் மோசம இருக்கும் என்றும் எனவே இனிவரும் காலங்களிலாவது அரசு மணிக்கரணை கூழவாய்க்காலில் பாலம் அமைத்து மயானத்திற்கு செல்ல முறையான சாலை அமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அமைச்சரின் தாயார் ஊரில் அவலம் ; வாய்க்காலில் இறங்கி இறந்தவரின் உடலை எடுத்து செல்லும் மக்கள்

துர்கா ஸ்டாலினின் சொந்த ஊர்

மேலும் இந்த ஊர் தமிழக முதலமைச்சரின் துணைவியார் துர்கா ஸ்டாலினின் சொந்த ஊராகும், அது மட்டும் இன்றி அவரும், முதல்வர் , விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர் அவ்வபோது இங்கு வந்து செல்லும் நிலையில் இந்த ஊருக்கே இந்த நிலைமையா? என பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Salem Leopard: 10 சிறுத்தை குட்டிகளை தமிழக எல்லையில் விட்டுச் சென்ற கர்நாடகா வனத்துறையினர்? சேலத்தில் பரபரப்பு
Salem Leopard: 10 சிறுத்தை குட்டிகளை தமிழக எல்லையில் விட்டுச் சென்ற கர்நாடகா வனத்துறையினர்? சேலத்தில் பரபரப்பு
Breaking News LIVE, Sep 25: காலாண்டு விடுமுறை நீட்டிப்பா? அமைச்சர் சொன்ன அசத்தல் தகவல்
Breaking News LIVE, Sep 25: காலாண்டு விடுமுறை நீட்டிப்பா? அமைச்சர் சொன்ன அசத்தல் தகவல்
இன்ப அதிர்ச்சி கொடுத்த கல்வித்துறை அமைச்சர்... உற்சாகமான பள்ளி மாணவ, மாணவிகள்
இன்ப அதிர்ச்சி கொடுத்த கல்வித்துறை அமைச்சர்... உற்சாகமான பள்ளி மாணவ, மாணவிகள்
Accident : காலையிலேயே விபத்து: உளுந்தூர்பேட்டை அருகே 6 பேர் உயிரிழப்பு... கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்...
Accident : காலையிலேயே விபத்து: உளுந்தூர்பேட்டை அருகே 6 பேர் உயிரிழப்பு... கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Aarthi Issue | வீட்டுக்குள் விடாத ஆர்த்தி?ஜெயம் ரவி பரபரப்பு புகார்!”காரை மீட்டு கொடுங்க”Aadhav Arjuna on A Rasa : பொசுக்குன்னு கேட்ட ஆதவ்! கூட்டணியில் அடுத்த ஷாக் ஆ.ராசாவின் அடுத்த மூவ்?Durai Dayanidhi Discharge : '’துரையை PHOTO எடுக்காத’’கொந்தளித்த அழகிரி! செய்தியாளர்கள் மீது தாக்குதல்Ravikumar vs Aadhav arjuna : ”இப்படி பேசலாமா ஆதவ்” விசிகவில் வெடித்த கலகம்! ரவிக்குமார் போர்க்கொடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Salem Leopard: 10 சிறுத்தை குட்டிகளை தமிழக எல்லையில் விட்டுச் சென்ற கர்நாடகா வனத்துறையினர்? சேலத்தில் பரபரப்பு
Salem Leopard: 10 சிறுத்தை குட்டிகளை தமிழக எல்லையில் விட்டுச் சென்ற கர்நாடகா வனத்துறையினர்? சேலத்தில் பரபரப்பு
Breaking News LIVE, Sep 25: காலாண்டு விடுமுறை நீட்டிப்பா? அமைச்சர் சொன்ன அசத்தல் தகவல்
Breaking News LIVE, Sep 25: காலாண்டு விடுமுறை நீட்டிப்பா? அமைச்சர் சொன்ன அசத்தல் தகவல்
இன்ப அதிர்ச்சி கொடுத்த கல்வித்துறை அமைச்சர்... உற்சாகமான பள்ளி மாணவ, மாணவிகள்
இன்ப அதிர்ச்சி கொடுத்த கல்வித்துறை அமைச்சர்... உற்சாகமான பள்ளி மாணவ, மாணவிகள்
Accident : காலையிலேயே விபத்து: உளுந்தூர்பேட்டை அருகே 6 பேர் உயிரிழப்பு... கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்...
Accident : காலையிலேயே விபத்து: உளுந்தூர்பேட்டை அருகே 6 பேர் உயிரிழப்பு... கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்...
RBI Rules: வங்கி ஊழியர்கள் உதவவில்லையா? வேண்டுமென்றே அலைகழிக்கின்றனரா? அப்ப இதை செய்யுங்க..!
RBI Rules: வங்கி ஊழியர்கள் உதவவில்லையா? வேண்டுமென்றே அலைகழிக்கின்றனரா? அப்ப இதை செய்யுங்க..!
MK Stalin Letter : ”சகோதரர் திருமாவளவன்” கடிதம் வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
MK Stalin Letter : ”சகோதரர் திருமாவளவன்” கடிதம் வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
விமானத்தில் திடீரென வந்த புகை.. எரிபொருள் நிரப்புவதில் குளறுபடி ? சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..
விமானத்தில் திடீரென வந்த புகை.. எரிபொருள் நிரப்புவதில் குளறுபடி ? சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..
Sri Lanka Parliament: அதுக்குள்ளவா..! இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்த புதிய அதிபர் - கையோடு தேர்தல் தேதி அறிவிப்பு
Sri Lanka Parliament: அதுக்குள்ளவா..! இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்த புதிய அதிபர் - கையோடு தேர்தல் தேதி அறிவிப்பு
Embed widget