மேலும் அறிய

ஆட்சி மாறினாலும் காட்சி மாறலையா? மயிலாடுதுறை DRO-வை மிரட்டிய திமுக நிர்வாகி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்?

மயிலாடுதுறையில் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதை விசாரணை செய்ய வந்த டிஆர்ஓ விற்கு கொலை  மிரட்டல் விவகாரத்தில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் காவல்துறையினர் சாதகமான செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஜிவிஎம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி. இவரது கணவர் தியாகராஜன், வருவாய்த்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அலுவலர் ஆவார். இந்தத் தம்பதியினர் கடந்த 2011 ஆம் ஆண்டு பட்டமங்கலம் ஊராட்சி திருவள்ளுவர் தெரு பகுதியில், ஜெயலட்சுமி என்பவரிடமிருந்து ஆயிரம் சதுர அடி நிலத்தை முறைப்படி கிரயம் செய்து வாங்கியுள்ளனர். அந்த இடத்தைக் கடந்த சில மாதங்களாக திமுகவின் மாவட்ட துணைச் செயலாளராகப் பதவி வகித்து வரும் செல்வமணி என்பவர் ஆக்கிரமிக்க முயற்சி செய்து வந்துள்ளார்.

நிலத்தின் உரிமையாளரான ரேவதி, இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனின்றி போகவே, இறுதியில் நீதிமன்றத்தை நாடிச் சட்டப் போராட்டத்திற்குப் பிறகே தனக்குச் சொந்தமான நிலத்தை மீட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கடந்த 14 ஆம் தேதி பட்டமங்கலம் பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தை ஆய்வு செய்வதற்காக மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி நேரில் சென்றுள்ளார்.

மாவட்ட வருவாய் அலுவலரின் காரை மறித்து ரகளை

நேர்மையாகப் பணியாற்றி வரும் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி தனது வாகனத்தில் வந்து நிலத்தைப் பார்வையிட்டபோது, அங்கு அதிரடியாக நுழைந்த திமுக மாவட்ட துணைச் செயலாளர் செல்வமணி, மாவட்ட வருவாய் அலுவலரின் காரை மறித்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். எவ்வித அச்சமுமின்றி ஓர் உயர்மட்ட அரசு அதிகாரியைக் காரை விட்டு இறங்க விடாமல் தடுத்து, மிக மோசமான வார்த்தைகளால் திட்டி, ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்துள்ளார். ஒரு பெண் அதிகாரி என்றும் பாராமல், மாவட்ட ஆட்சியருக்கு அடுத்த நிலையில் உள்ள உயர்பதவியில் இருக்கும் வருவாய் அலுவலரையே பணி செய்ய விடாமல் தடுத்து, தாக்குதல் நடத்த முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காவல்துறையின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை

இந்த அத்துமீறல் சம்பவம் தொடர்பாக, பட்டமங்கலம் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் உடனடியாக முறைப்படி புகார் அளித்தார். ஆனால்,  அதிகார பலத்திற்கு அடிபணிந்த காவல்துறையினர், அரசு அதிகாரியை மிரட்டிய திமுக பிரமுகர் மீது எந்தவித சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்காமல், அந்தப் புகாரை அப்படியே நிலுவையில் போட்டு மூடி மறைத்து விட்டனர்.

மாநிலத்தில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டுப் புதிய அரசுகள் பொறுப்பேற்றபோதிலும், சில அதிகாரிகளின் போக்கில் எவ்வித மாற்றமும் ஏற்படாமல் பழைய நிலையே தொடர்வதாகவும், உயர்மட்ட அரசு அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத சூழலை நிலுவையில் உள்ள வழக்குகள் காட்டுவதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

வைரலான வீடியோவும் பொய் புகாரும்

இதனிடையே, நீதிமன்றத்தின் மூலம் மீட்கப்பட்ட அந்த நிலத்தில் ரேவதி தம்பதியினர் கட்டடப் பணிகளைத் தொடங்கியுள்ளனர். தகவலறிந்து அங்கு வந்த திமுக பிரமுகர் செல்வமணி, ரேவதிக்குச் சொந்தமான இடத்தில் அத்துமீறி நுழைந்து, நடந்து கொண்டிருந்த கட்டடப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு கூறி ஆபாச வார்த்தைகளால் திட்டி கடும் மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. ரேவதி தம்பதியினரை மிரட்டும் இந்த அதிர்ச்சி தரும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகித் தீயாகப் பரவி, பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தனது நில அபகரிப்பு முயற்சி அம்பலமானதை உணர்ந்த செல்வமணி, தந்திரமாக முந்திக்கொண்டு, ரேவதியும் அவரது கணவர் தியாகராஜனும் தன்னைத் தாக்கியதாகக் கூறி காவல்துறையில் பொய்யான புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

ஆட்சியர் அலுவலகத்தில் நியாயம் கேட்டுப் போராட்டம்

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரேவதி தம்பதியினர், செல்வமணி தங்களை அத்துமீறி மிரட்டிய வீடியோ ஆதாரங்களுடன் காவல் நிலையத்திற்குச் சென்று நியாயம் கேட்டுள்ளனர். இருப்பினும், வழக்கம் போல திமுக மாவட்ட துணைச் செயலாளருக்கு ஆதரவாகவே செயல்பட்ட காவல்துறையினர், வீடியோ ஆதாரங்களை ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு, பாதிக்கப்பட்ட ரேவதி மற்றும் அவரது கணவர் தியாகராஜனையே மிரட்டி காவல் நிலையத்தை விட்டு வெளியேற்றியதாக சொல்லப்படுகிறது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே, கட்சி பிரமுகரின் ஆக்கிரமிப்பிற்குத் துணையாக நின்று தங்களை அச்சுறுத்தியதால், ஓய்வுபெற்ற அரசு அலுவலரின் குடும்பத்தினர் என்ன செய்வதென்று தெரியாமல் நிலைகுலைந்து போயினர்.

பொதுமக்களின் கொந்தளிப்பும் குற்றச்சாட்டுகளும்

காவல்துறையின் இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கையால் மனமுடைந்த ரேவதி தம்பதியினர், நில அபகரிப்பு மற்றும் உயிருக்கு அச்சுறுத்தல் குறித்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர்மல்கப் புகார் மனு அளித்தனர். அவர்களின் மனுவைப் பரிசீலித்த மாவட்ட ஆட்சியர், இந்த விவகாரம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் செல்லுமாறு தம்பதியினருக்குப் பரிந்துரை செய்தார். இருப்பினும், ஆளுங்கட்சியின் அதிகார காலம் முடிந்த பின்னரும் கூட, காவல்துறையினர் திமுக பிரமுகர்களுக்குக் கட்டுப்பட்டு, அவர்களுக்குச் சாதகமாக மட்டுமே செயல்படுவதாகப் பாதிக்கப்பட்ட தம்பதியினரும் அப்பகுதி பொதுமக்களும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

எமனை வென்ற திருக்கடையூரில் சிலிர்க்க வைத்த ஆன்மீக வைபவம்! என்ன தெரியுமா..?
எமனை வென்ற திருக்கடையூரில் சிலிர்க்க வைத்த ஆன்மீக வைபவம்! என்ன தெரியுமா..?
பெண்களுக்குச் சூப்பர் வாய்ப்பு! அரசு நலத்திட்டங்களைப் பெற ஆன்லைனில் உடனே பதிவு செய்யுங்கள்!
பெண்களுக்குச் சூப்பர் வாய்ப்பு! அரசு நலத்திட்டங்களைப் பெற ஆன்லைனில் உடனே பதிவு செய்யுங்கள்!
பழைய மின்மோட்டாரை மாற்றி 4-Star மின்மோட்டார் வாங்க அரசு மானியம்! உடனே விண்ணப்பியுங்கள்!
பழைய மின்மோட்டாரை மாற்றி 4-Star மின்மோட்டார் வாங்க அரசு மானியம்! உடனே விண்ணப்பியுங்கள்!
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget