மேலும் அறிய

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் உலக மரபு வார விழா: நவம்பர் 25 வரை கட்டணமில்லா அனுமதி!

உலக மரபு வார விழாவை முன்னிட்டு, டேனிஷ் கோட்டையில், தொல்லியல் அகழ்வைப்பகம் மற்றும் கோட்டையின் அனைத்துப் பகுதிகளையும் நவம்பர் 25 வரை பார்வையாளர்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வங்காள விரிகுடாக் கடற்கரையில் அமையப்பெற்றுள்ள, வரலாற்றுப் புராதனச் சின்னமான தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில், உலக மரபு வார விழாவை முன்னிட்டு, நவம்பர் 19 -ம் தேதி முதல் வரும் நவம்பர் 25 -ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்குச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்கள் கட்டணமின்றி இலவசமாகக் கண்டு ரசிக்க தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது. வரலாற்றுப் பொக்கிஷங்களை நேரடியாகக் காணவும், பண்டைய கால நாகரிகங்கள் குறித்து அறிந்து கொள்ளவும் கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தொல்லியல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

டேனிஷ் கோட்டையின் வரலாற்றுப் பின்னணி

தரங்கம்பாடி கடற்கரையில் கம்பீரமாக நிற்கும் இந்த டேனிஷ் கோட்டை, ஃபோர்ட் டான்ஸ்போர்க் (Fort Dansborg) என்று அழைக்கப்படுகிறது. இது 17 -ஆம் நூற்றாண்டில் (கி.பி. 1620) டேனிஷ் நாட்டினரால் கட்டப்பட்டதாகும். இந்தியாவின் முதல் டேனிஷ் குடியேற்றத்தின் முக்கிய மையமாக விளங்கிய இந்தக் கோட்டை, சுமார் 225 ஆண்டுகள் அவர்களின் நிர்வாகத் தலைமை இடமாகச் செயல்பட்டது.

கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கும் இந்தக் கோட்டையின் பிரம்மாண்டமான சுவர்களும், அதன் தனித்துவமான ஐரோப்பியக் கட்டுமானமும், இந்திய-ஐரோப்பிய வரலாற்றின் ஒரு முக்கியப் பக்கத்தை இன்றும் தாங்கிக் கொண்டிருக்கின்றன. தற்போது இந்தக் கோட்டை இந்தியத் தொல்லியல் துறையின் அகழ்வைப்பகமாக (Archaeological Museum) செயல்பட்டு வருகிறது.

இங்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து, கோட்டையின் அமைப்பையும், அகழ்வைப்பகத்தில் உள்ள புராதனப் பொருட்களையும் பார்வையிட்டு வருகின்றனர்.

உலக மரபு வார விழா 

ஒவ்வோர் ஆண்டும் உலகெங்கிலும் நவம்பர் 19-ம் தேதி முதல் 25 -ஆம் தேதி வரை உலக மரபு வார விழா கொண்டாடப்படுவது வழக்கம். நாட்டின் கலாசாரம் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதே இந்த விழாவின் முக்கிய நோக்கமாகும். தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் புராதனச் சின்னங்கள் மற்றும் கோட்டைகளின் அருமைகளைப் பற்றி இளைய தலைமுறையினரும், பொதுமக்களும் அறிந்து கொள்ள இத்தகைய நிகழ்வுகள் களம் அமைத்துக் கொடுக்கின்றன.

இந்த வார விழாவை முன்னிட்டு, டேனிஷ் கோட்டையில் உள்ள தொல்லியல் அகழ்வைப்பகம் மற்றும் கோட்டையின் அனைத்துப் பகுதிகளுக்கும் இந்த ஏழு நாட்களும் (நவம்பர் 19 முதல் 25 வரை) பார்வையாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் டிக்கெட் செலவின்றி, நேரடியாக வரலாற்று அறிவைப் பெற முடியும்.

அகழ்வைப்பகத்தில் காண வேண்டியவை

டேனிஷ் கோட்டையில் உள்ள அகழ்வைப்பகம், இப்பகுதியின் பழங்கால வரலாற்றுச் சுவடுகளைப் பிரதிபலிக்கிறது. 

இங்குப் பாதுகாக்கப்பட்டு வரும் வரலாற்றுச் சின்னங்கள்

டேனிஷ் காலத்துப் பொருட்கள்: டேனிஷ் அதிகாரிகள் பயன்படுத்திய பண்டைய மரச்சாமான்கள், மட்பாண்டங்கள், அவர்களின் ஆயுதங்கள் மற்றும் நிர்வாக ஆவணங்கள்.

பண்டைய நாகரிகச் சின்னங்கள்: அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட புராதனச் சிலைகள், நாணயங்கள், அரிய மண்பாண்டங்கள் மற்றும் சிற்பங்கள்.

*கல்வெட்டியல் சான்றுகள்: அக்காலத்திய கல்வெட்டுகள் மற்றும் எழுத்துப் பொறிப்புகள் குறித்த தகவல்கள்.

*போர் ஆயுதங்கள்: கோட்டையைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்பட்ட பழங்கால பீரங்கிகள் மற்றும் பிற போர் உபகரணங்கள்.

இந்த அகழ்வைப்பகத்தைப் பார்வையிடுவதன் மூலம், தமிழ்நாட்டின் கடலோர வர்த்தகம், டேனிஷ்-தமிழர் உறவுகள், அக்காலத்திய வாழ்க்கை முறை, நாகரிகம் மற்றும் கட்டடக் கலை நுட்பங்கள் குறித்து அனைவரும் விரிவாக அறிந்துகொள்ள முடியும்.

கல்விச் சுற்றுலாவுக்கு அரிய வாய்ப்பு

இந்த இலவச அனுமதி, வரலாற்றுத் துறையைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் சான்றுகளை நேரடியாகப் பார்ப்பதன் மூலம், அவர்கள் தங்கள் பாட அறிவை மேம்படுத்திக் கொள்ள முடியும். பொதுவாக கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், இந்த ஒரு வாரக் கால அவகாசம், அனைத்துத் தரப்பு மக்களும், குறிப்பாக நடுத்தரக் குடும்ப மாணவர்களும் வரலாற்றுச் சின்னங்களின் பெருமையை உணர்ந்து கொள்ளப் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

உலக மரபு வார விழாவின் முதல் நாளான நேற்று (நவம்பர் 19) தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையிலும், அகழ்வைப்பகத்திலும் திரளான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் குடும்பத்துடன் ஆர்வமுடன் கண்டு ரசித்துச் சென்றனர்.

வரலாற்றுப் பாரம்பரியங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இந்தச் சிறப்பான வார விழாவின் போது, மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, நமது பண்டைய நாகரிகத்தின் எச்சங்களையும், பாதுகாக்கப்பட்டு வரும் புராதனச் சின்னங்களையும் கண்டு களிக்குமாறு தொல்லியல் துறையினர் அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலவசமாக அனுமதி வழங்கப்பட்டுள்ள நவம்பர் 25 -ஆம் தேதிக்குள், தரங்கம்பாடியின் இந்தச் சிறப்பு மிக்கச் சின்னத்தை அனைவரும் பார்வையிட்டு, அதன் வரலாற்றுப் பெருமைகளை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே வரலாற்று ஆய்வாளர்களின் விருப்பமாக உள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
TATA Sierra Dealership: டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
Embed widget