மேலும் அறிய

சீகன் பால்க் மணிமண்டபம்: தரங்கம்பாடியில் கொந்தளிப்பு! போராட்டத்தில் குதித்த மக்கள், காரணம் என்ன?

சீகன் பால்க் மணிமண்டபம்: இடத்தை மாற்றக் கோரி தரங்கம்பாடியில் கடையடைப்பு மற்றும் மீனவர்கள் வேலைநிறுத்தம் - போலீசார் குவிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில், தமிழறிஞர் சீகன் பால்க்விற்கு அமையவுள்ள மணிமண்டபத்தை பொறையார் பகுதிக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்தும், அவர் வாழ்ந்த தரங்கம்பாடியிலேயே அதனை அமைக்க வலியுறுத்தியும் இன்று மாபெரும் போராட்டம் துவங்கியுள்ளது. வணிகர்கள் கடைகளை அடைத்தும், மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதோடு, அனைத்து தரப்பு மக்களும் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

வரலாற்றுப் பின்னணி: தமிழும் சீகன் பால்க்கும்

ஜெர்மனி நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வருகை தந்த சீகன் பால்க் (Bartholomäus Ziegenbalg), முதன்முதலில் தரங்கம்பாடியில்தான் கால் பதித்தார். தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றினால், ஐரோப்பிய மொழியில் இருந்த விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்த்து அச்சிட்டார். இதற்காகத் தரங்கம்பாடியிலேயே முதன்முதலில் அச்சுக்கூடத்தை நிறுவி, தமிழ் எழுத்துக்களை உருவாக்கி, நவீன அச்சுக்கலைக்கு வித்திட்டவர் அவர்.

தமிழ் இறையியல் கல்வி, சைவ இலக்கிய ஆய்வு எனத் தமிழுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த அவர், தரங்கம்பாடியிலேயே மறைந்து அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டார். அவரின் தமிழ்த் தொண்டைப் போற்றும் விதமாகத் தரங்கம்பாடி கடற்கரையில் ஏற்கனவே திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

சர்ச்சையின் பின்னணி

சீகன் பால்கின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ் வளர்த்த பெருமையை உலகிற்கு எடுத்துரைக்கும் விதமாக, அரசு சார்பில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கச் சட்டமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் துவங்கப்பட உள்ளன.

இந்த நிலையில், சீகன் பால்க் மணிமண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா பொறையார் பகுதியில் நடைபெற உள்ளதாக அரசு அறிவித்தது. இதில் 

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் சீகன் பால்குவிற்கு திருவுருவச் சிலையுடன் அரங்கம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்ட உள்ளார்கள்.

இது தரங்கம்பாடி பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "சீகன் பால்க் வாழ்ந்து, மறைந்து, தமிழ்த் தொண்டாற்றிய இடம் தரங்கம்பாடிதான்; எனவே மணிமண்டபம் இங்குதான் அமைய வேண்டும்" என்பது பொதுமக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

போராட்டக் களம்: கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதம்

அரசு தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று காலை முதலே தரங்கம்பாடியில் போராட்டங்கள் தீவிரமடைந்தன.

 * வணிகர்கள் ஆதரவு: தரங்கம்பாடி கடைவீதியில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. மருந்துக்கடைகள் தவிர்த்து இதர வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

*மீனவர்கள் வேலைநிறுத்தம்: தரங்கம்பாடி மீனவ தலைமை கிராமத்தின் முடிவின்படி, இன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டன.

* உண்ணாவிரதப் போராட்டம்: தரங்கம்பாடி கடைவீதியில் ஊர் பொதுமக்கள், மீனவர்கள் மற்றும் வணிகர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் குவிப்பு மற்றும் பாதுகாப்பு

இந்தத் திடீர் போராட்டத்தின் காரணமாகத் தரங்கம்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மக்களின் கோரிக்கை

"பொறையார் பகுதியில் அமையவுள்ள மணிமண்டபத்தை உடனடியாகத் தரங்கம்பாடி பகுதிக்கு மாற்ற வேண்டும். வரலாற்றுச் சிறப்புமிக்கச் சீகன் பால்க்வின் புகழைச் சரியான இடத்தில் நிலைநாட்ட வேண்டும்" என்பதே போராட்டக்காரர்களின் ஒருமித்த குரலாக உள்ளது. அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தங்களின் போராட்டங்கள் தொடரும் எனமீனவ கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Ather Budget Scooter EL01: ஓலா-க்கு போட்டியாக மலிவு விலை இ-ஸ்கூட்டரை களமிறக்கும் ஏதர்; எப்போது அறிமுகம்.? அம்சங்கள் என்ன.?
ஓலா-க்கு போட்டியாக மலிவு விலை இ-ஸ்கூட்டரை களமிறக்கும் ஏதர்; எப்போது அறிமுகம்.? அம்சங்கள் என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Ather Budget Scooter EL01: ஓலா-க்கு போட்டியாக மலிவு விலை இ-ஸ்கூட்டரை களமிறக்கும் ஏதர்; எப்போது அறிமுகம்.? அம்சங்கள் என்ன.?
ஓலா-க்கு போட்டியாக மலிவு விலை இ-ஸ்கூட்டரை களமிறக்கும் ஏதர்; எப்போது அறிமுகம்.? அம்சங்கள் என்ன.?
Tamilnadu Roundup: பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
America Vs Syria: ஆபரேஷன் ஹாக்கே; சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை; ISIS இலக்குகள் மீது தாக்குதல்; காரணம் என்ன.?
ஆபரேஷன் ஹாக்கே; சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை; ISIS இலக்குகள் மீது தாக்குதல்; காரணம் என்ன.?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
Embed widget