மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிப்ரவரி 1 -ம் தேதி மதுக்கடைகள் மூடல்; அதிர்ச்சியில் மது பிரியர்கள்..

வடலூர் இராமலிங்கனார் நினைவு நாளை முன்னிட்டு, பிப்ரவரி 1-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மயிலாடுதுறை: வடலூர் இராமலிங்கனார் நினைவு நாளை முன்னிட்டு, பிப்ரவரி 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்., அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை: வள்ளலார் எனும் மகாத்மா "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்ற உன்னதக் கருணையை உலகுக்கு உரக்கச் சொன்னவர், சமரச சுத்த சன்மார்க்க நெறியைத் தந்த திருவருட்பிரகாச வள்ளலார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இணையற்ற ஆன்மீகப் புரட்சியாளராகத் திகழ்ந்த இராமலிங்க அடிகளார், மனித நேயத்திற்கும் பசிப்பிணி ஒழிப்பிற்கும் புதிய இலக்கணம் வகுத்தவர்.

ஆன்மீகம் என்பது வெறும் வழிபாட்டுச் சடங்கு மட்டுமல்ல, அது சக உயிர்களிடம் அன்பு காட்டுவதே என்று போதித்தவர் அவர். வடலூரில் அவர் ஏற்றி வைத்த "அணையா அடுப்பு" இன்றும் பல்லாயிரக்கணக்கான மக்களின் பசியைத் தீர்த்து வருகிறது. ஜாதி, மத வேறுபாடுகளைக் கடந்து 'ஆன்ம நேய ஒருமைப்பாட்டை' வலியுறுத்திய வள்ளலார், இறைவன் ஒளியின் வடிவானவன் என்பதை 'அருட்பெருஞ்ஜோதி' தரிசனத்தின் மூலம் உலகிற்கு உணர்த்தினார்.

அத்தகைய மகத்தான ஞானியின் நினைவு நாளைப் போற்றும் வகையில், தமிழக அரசு ஆண்டுதோறும் தைப்பூசத் திருநாளை ஒட்டி வரும் இத்தினத்தை மதுவற்ற 'உலர் தினமாக' (Dry Day) கடைபிடித்து வருகிறது. அவரது போதனைகளை மதிக்கும் விதமாகவும், பொது ஒழுக்கத்தைப் பேணும் வகையிலும் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பிப்ரவரி 1-ம் தேதி அன்று மதுக்கடைகள் மூடப்படுவது குறிப்பிடத்தக்கது.

முழுமையான விற்பனைத் தடை

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வருகின்ற 01.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வடலூர் இராமலிங்கனார் நினைவு நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மாவட்டத்தில் அமைதி மற்றும் ஒழுங்கைப் பேணவும், நினைவு நாளின் புனிதத்தைப் பாதுகாக்கவும் மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் கீழ் பின்வரும் நிறுவனங்கள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டிருக்க வேண்டும்.

* அரசு மதுபான சில்லறை விற்பனைக்கடைகள் (FL1).

* தனியார் உணவகங்கள் மற்றும் விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் (FL2, FL3, FL3A, FL3AA).

* பிற உரிமம் பெற்ற அனைத்து மது விற்பனை மையங்கள் மற்றும் மதுக்கூடங்கள் (FL11).

ஆட்சியரின் எச்சரிக்கை

குறிப்பிட்ட அந்த நாளில் மதுபானங்களை விற்பனை செய்யவோ அல்லது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லவோ (மது விற்பனை தொடர்பான செயல்பாடுகள்) முற்றிலும் அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த தடையை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் எச்சரித்துள்ளார். 

குறிப்பாக:

* விதிமீறலில் ஈடுபடும் டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் மீது துறை ரீதியான மற்றும் சட்டப்படியான நடவடிக்கை பாயும்.

* விதிமுறைகளை மீறும் FL2/FL3 உரிமதாரர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதுடன், அவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்.

கண்காணிப்புப் பணிகள் தீவிரம்

இந்த "உலர் தினம்" (Dry Day) அறிவிப்பைத் தொடர்ந்து, மாவட்ட எல்லைப்பகுதிகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் காவல்துறையினர் மற்றும் டாஸ்மாக் கலால் துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவதைத் தடுக்க சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பொதுமக்கள் மற்றும் மதுக்கடை உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் இந்த உத்தரவிற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வள்ளலார் என்று போற்றப்படும் இராமலிங்க அடிகளாரின் நினைவு நாளில் மது அருந்துவதைத் தவிர்த்து, அவரது கொள்கையான 'ஜீவகாருண்யத்தை' போற்றும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை.! என்ன தெரியுமா..?
மயிலாடுதுறையில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை.! என்ன தெரியுமா..?
காவலர்களின் மனஅழுத்தம் போக்க புதிய முயற்சி: மயிலாடுதுறையில் உடற்பயிற்சி மையம் மற்றும் குழந்தைகள் காப்பகம்..
காவலர்களின் மனஅழுத்தம் போக்க புதிய முயற்சி: மயிலாடுதுறையில் உடற்பயிற்சி மையம் மற்றும் குழந்தைகள் காப்பகம்..
திமுகவினரின் தேர்தல் வேகம்: வேட்பாளர் அறிவிக்கும் முன்னே களமிறங்கிய மயிலாடுதுறை காளி காந்தி குழுவினர்!
திமுகவினரின் தேர்தல் வேகம்: வேட்பாளர் அறிவிக்கும் முன்னே களமிறங்கிய மயிலாடுதுறை காளி காந்தி குழுவினர்!
சீர்காழியில் போர் பதற்றம் தணிய வழிபாடு: மயிலாடுதுறையில் 30 யாக குண்டங்களில் சிறப்பு வேள்வி!
சீர்காழியில் போர் பதற்றம் தணிய வழிபாடு: மயிலாடுதுறையில் 30 யாக குண்டங்களில் சிறப்பு வேள்வி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
Governor Salary: ஒரே நபர்.. மூன்று பதவிகள்! ஆளுநர்களின் சம்பள ரகசியம் இதுதான்
Governor Salary: ஒரே நபர்.. மூன்று பதவிகள்! ஆளுநர்களின் சம்பள ரகசியம் இதுதான்
TVK Vijay: ‘எனக்கு வருத்தம் எல்லாம் கிடையாது” - மனைவி சங்கீதா தொடுத்த வழக்கு... முதல்முறையாக வாய் திறந்த விஜய்
‘எனக்கு வருத்தம் எல்லாம் கிடையாது” - மனைவி சங்கீதா தொடுத்த வழக்கு... முதல்முறையாக வாய் திறந்த விஜய்
Tata Offers: 3.30 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. டாடா கார்களுக்கு மார்ச் மாத தள்ளுபடி - எந்த காருக்குப்பா?
Tata Offers: 3.30 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. டாடா கார்களுக்கு மார்ச் மாத தள்ளுபடி - எந்த காருக்குப்பா?
TVK Vijay: அண்ணன் சீர் திட்டத்தை அறிவித்த விஜய்.. ஆனந்த கண்ணீர் வடித்த பெண்கள் - வீடியோவை பாருங்க!
TVK Vijay: அண்ணன் சீர் திட்டத்தை அறிவித்த விஜய்.. ஆனந்த கண்ணீர் வடித்த பெண்கள் - வீடியோவை பாருங்க!
விஜய் அதிரடி அறிவிப்பு! குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500, இலவச சிலிண்டர்கள் & மேலும் பல!
விஜய் அதிரடி அறிவிப்பு! குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500, இலவச சிலிண்டர்கள் & மேலும் பல!
TVK Vijay: விஜய்க்கு போட்டியாக களமிறங்கப்போகும் விசிக? தளபதிக்கு எதிராக இறங்கப்போவது இவரா?
TVK Vijay: விஜய்க்கு போட்டியாக களமிறங்கப்போகும் விசிக? தளபதிக்கு எதிராக இறங்கப்போவது இவரா?
Election 2026: பதற்றமான ஏரியாக்கள் எது? லிஸ்ட் எடுக்கும் போலீஸ்! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி 'பிளான்'!
Election 2026: பதற்றமான ஏரியாக்கள் எது? லிஸ்ட் எடுக்கும் போலீஸ்! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி 'பிளான்'!
Embed widget