மேலும் அறிய

மருத்துவர சூரனால் தாக்குதலுக்கு ஆளான நந்தி பகவான்...சிலிர்க்க வைக்கும் வரலாறு...

மருத்துவர சூரனால் தாக்குதலுக்கு ஆளான திருவெண்காடு நந்தி பகவானின் மேனியில் இன்றும் அந்த காயத்தின் தழும்புகள் காணப்படுகிறது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த உலகப் புகழ்பெற்ற திருவெண்காடு புதன் ஸ்தலத்தில், சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பக்திப் பெருக்கோடு சாமி தரிசனம் செய்தனர்.

காசிக்கு இணையான ஆதி சிதம்பரம்

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இது வெறும் கோயில் மட்டுமல்ல, ஆன்மீக வரலாற்றில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. சமய குரவர்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் 11-வது சிவத்தலமாகும் இது. காசிக்கு இணையான ஆறு சிவத்தலங்களில் முதன்மையானதாகப் போற்றப்படும் இத்தலம், 'ஆதி சிதம்பரம்' என்று அழைக்கப்படுகிறது. பட்டினத்தடிகளார் சிவதீட்சை பெற்றதும், மெய்கண்டார் அவதரித்ததும் இத்தலத்தில்தான் என்பது இதன் வரலாற்றுச் சிறப்பு.

மும்மூர்த்திகள் மற்றும் முத்தீர்த்தங்களின் மகிமை

சுவேதாரண்யேசுவரர் திருக்கோயிலில் தீர்த்தம், தலம், மரம் (விருட்சம்) என அனைத்தும் மூன்றாக அமைந்துள்ளது தனிச்சிறப்பு. சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று குளங்களில் புனித நீராடி சுவாமி மற்றும் அம்பாளை வழிபட்டால் ஞானம் பெருகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், எம பயம் நீங்கும் என்பது பக்தர்களின் ஆழமான நம்பிக்கை.

மேலும், இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அகோரமூர்த்தி மற்றும் ஆதி நடராஜர் ஆகியோருக்குத் தனித்தனி சன்னதிகள் உள்ளன. நவகிரகங்களில் கல்வி மற்றும் ஞானத்திற்கு அதிபதியான புதன் பகவானுக்குரிய பரிகாரத் தலமாக விளங்குவதால், வெளியூர்களிலிருந்து ஏராளமானோர் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர்.

அசுரனை எதிர்த்த நந்தி: புராண வரலாறு

இக்கோயிலில் உள்ள நந்தி பகவான் சிலையின் மீது காணப்படும் காயங்கள் ஒரு புராண வரலாற்றைக் கூறுகின்றன. முற்காலத்தில் மருத்துவா சூரன் என்ற அசுரன் கடுந்தவம் புரிந்து சிவபெருமானிடமிருந்து வலிமைமிக்க சூலாயுதத்தைப் பெற்றான். அந்த ஆயுதத்தைக் கொண்டு தேவர்களையும் முனிவர்களையும் அவன் துன்புறுத்தத் தொடங்கினான்.

சிவபெருமானின் ஆணைப்படி நந்தி பகவான் அசுரனிடம் சென்று தர்மத்தை எடுத்துக்கூறினார். ஆனால், ஆங்காரத்தில் இருந்த மருத்துவா சூரன், தான் பெற்ற சூலாயுதத்தால் நந்தி பகவானைத் தாக்கினான். அந்தத் தாக்குதலின் வடுக்கள் இன்றும் நந்தி சிலையின் மீது தத்ரூபமாகக் காணப்படுகின்றன. இது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியாகும்.

சித்திரை பிரதோஷ சிறப்பு அபிஷேகம்

சித்திரை மாதப் பிரதோஷமான நேற்று, அந்தத் தியாகம் புரிந்த நந்தி பகவானுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. மாலை பிரதோஷ காலத்தில் நந்தி பகவானுக்கு மாப்பொடி, மஞ்சள், திரவியப்பொடி, பால், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம் மற்றும் பல்வேறு பழச்சாறுகளைக் கொண்டு நறுமண வாசனை திரவியங்களுடன் மகா அபிஷேகம் நடைபெற்றது.

அபிஷேகத்திற்குப் பிறகு நந்தி பகவான் மலர்களாலும், பட்டு வஸ்திரங்களாலும் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. "நமசிவாய" எனும் கோஷம் விண்ணதிர பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் வழிப்பட்டனர்.

வீதி உலா மற்றும் பக்தர்களின் வரவேற்பு

பூஜையின் ஒரு பகுதியாக சுவாமி மற்றும் அம்பாள் பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளி, கோயில் பிரகாரத்தில் வீதி உலா வந்தனர். இதில் திருவெண்காடு மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களான நாங்கூர், தருமகுளம், பெருந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து வழிபட்டனர். சிவாச்சாரியார் கீர்த்திவாசன் தலைமையில் வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகளைச் சிறப்பாகச் செய்து வைத்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

கிரக தோஷங்கள் நீங்கும் பரிகாரத் தலம்! 1008 வைணவர்களுக்குத் ததி ஆராதனை செய்த பூமியில் நடைபெற்ற வீர நரசிம்ம பெருமாள் திருத்தேரோட்டம்.
கிரக தோஷங்கள் நீங்கும் பரிகாரத் தலம்! 1008 வைணவர்களுக்குத் ததி ஆராதனை செய்த பூமியில் நடைபெற்ற வீர நரசிம்ம பெருமாள் திருத்தேரோட்டம்.
விவசாயிகளின் குரல் ஆட்சியரின் செவிகளுக்கு! நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் எப்போது தெரியுமா..?
விவசாயிகளின் குரல் ஆட்சியரின் செவிகளுக்கு! நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் எப்போது தெரியுமா..?
மயிலாடுதுறை ஓய்வூதியதாரர்கள் உஷார்: செப்டம்பர் 11-க்குள் இந்த மனுவை உடனே அனுப்புங்க!
மயிலாடுதுறை ஓய்வூதியதாரர்கள் உஷார்: செப்டம்பர் 11-க்குள் இந்த மனுவை உடனே அனுப்புங்க!
மானியங்கள் மற்றும் உரங்கள் தடையின்றி கிடைக்க இந்த ஒரு விஷயம் கட்டாயம்! - மாவட்ட ஆட்சியர் தகவல்
மானியங்கள் மற்றும் உரங்கள் தடையின்றி கிடைக்க இந்த ஒரு விஷயம் கட்டாயம்! - மாவட்ட ஆட்சியர் தகவல்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராகுல் காந்தி நேற்றைய கைதுக்கு இன்று கண்டனம்.! எதிர்ப்பு தெரிவிக்க விஜய் காலம் தாழ்த்தியது ஏன்.? பரபரப்பு பின்னனி
ராகுல் காந்தி நேற்றைய கைதுக்கு இன்று கண்டனம்.! எதிர்ப்பு தெரிவிக்க விஜய் காலம் தாழ்த்தியது ஏன்.? பரபரப்பு பின்னனி
Cockroach Party : 'கரப்பான் பூச்சி கட்சி உருவானது எப்படி?’ தமிழ்நாட்டில் பெருகும் இளைஞர்கள் ஆதரவு..!
'கரப்பான் பூச்சி கட்சி உருவானது எப்படி?’ பின்னணியும் நோக்கமும்..!
SC On CJP: மாணவர்கள் மீது தாக்குதல்..! ”நேரத்தை வீணடிக்காதீர்கள், எங்களுக்கு விருப்பமில்லை” CJI கருத்தால் அதிர்ச்சி
மாணவர்கள் மீது தாக்குதல்..! ”நேரத்தை வீணடிக்காதீர்கள், எங்களுக்கு விருப்பமில்லை” CJI கருத்தால் அதிர்ச்சி
அசுரத்தனமாக அதிகரிக்கும் அரிசி விலை; என்ன காரணம்? அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க கோரிக்கை
அசுரத்தனமாக அதிகரிக்கும் அரிசி விலை; என்ன காரணம்? அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க கோரிக்கை
BJP DMK: ”நிதி, கல்வி, ரயில்வே துறைகள் OK-வா - TVK-க்கு குடைச்சல் கொடுக்கவும் தயார்” திமுகவிற்கு பாஜக அழைப்பு?
”நிதி, கல்வி, ரயில்வே துறைகள் OK-வா - TVK-க்கு குடைச்சல் கொடுக்கவும் தயார்” திமுகவிற்கு பாஜக அழைப்பு?
Cheapset 6 Seater: நாட்டின் மலிவான 6 சீட்டர் - கடும் உழைப்பாளி, எளிய டிசைன், 850KM மைலேஜ் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான 6 சீட்டர் - கடும் உழைப்பாளி, எளிய டிசைன், 850KM மைலேஜ் - EMI விவரங்கள்
டைனிங் டேபிள் வேண்டாமே; தரையில் சம்மணமிட்டு சாப்பிடுவதால் இவ்ளோ நன்மைகளா? அறிவியல் விளக்கம்
டைனிங் டேபிள் வேண்டாமே; தரையில் சம்மணமிட்டு சாப்பிடுவதால் இவ்ளோ நன்மைகளா? அறிவியல் விளக்கம்
MK Stalin: ”பாஜக, ஒன்றிய அரசு, ராகுல் காந்தி” இல்லாத ஸ்டாலின் அறிக்கை - நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என முழக்கம்
”பாஜக, ஒன்றிய அரசு, ராகுல் காந்தி” இல்லாத ஸ்டாலின் அறிக்கை - நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என முழக்கம்
Embed widget