மேலும் அறிய

சீர்காழி அருகே இப்படி ஒரு விபத்தா...? - பரிதாபமாக பறிபோன இரண்டு உயிர்கள் - சோகத்தில் மூழ்கிய கிராமம்

சீர்காழி அருகே இருசக்கர வாகனம் சுவற்றில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே புங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து நடந்தது எப்படி?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த புங்கனூர் மேலத் தெருவைச் சேர்ந்தவர் 30 வயதான ஆனந்த். இவர் ஒரு கூலித்தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் 28 வயதான மோகன்ராஜ். இவர் ஒரு பேக்கரி மாஸ்டராகப் பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவரும் வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள ஒரு கடைக்குச் சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் தங்கள் கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.


சீர்காழி அருகே இப்படி ஒரு விபத்தா...? - பரிதாபமாக பறிபோன இரண்டு உயிர்கள் - சோகத்தில் மூழ்கிய கிராமம்

சுவற்றில் மோதிய இருசக்கர வாகனம் 

அப்போது வைத்தீஸ்வரன் கோவில் அருகே உள்ள ரயில்வே கேட் வளைவில் திரும்பியபோது, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்தது. அதிவேகமாகச் சென்ற வாகனம், அருகில் இருந்த வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கின் சுற்றுச்சுவரில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆனந்த் மற்றும் மோகன்ராஜ் இருவரும் தூக்கி வீசப்பட்டு, பலத்த காயங்களுடன் சாலையில் விழுந்தனர்.

சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு 

விபத்து நடந்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கு ஓடிவந்தனர். காயமடைந்த இருவரையும் மீட்டு, உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் ஆனந்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.


சீர்காழி அருகே இப்படி ஒரு விபத்தா...? - பரிதாபமாக பறிபோன இரண்டு உயிர்கள் - சோகத்தில் மூழ்கிய கிராமம்

மோகன்ராஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், தலை மற்றும் உடல் முழுவதும் ஏற்பட்ட பலத்த காயங்களால் அவரது உடல்நிலை மோசமானது. தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர முயற்சிக்குப் பிறகும், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் மோகன்ராஜும் பரிதாபமாக உயிரிழந்தார்.

சோகத்தில் மூழ்கிய கிராமம்

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உயிரிழந்த ஆனந்த் மற்றும் மோகன்ராஜின் உடல்களைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


சீர்காழி அருகே இப்படி ஒரு விபத்தா...? - பரிதாபமாக பறிபோன இரண்டு உயிர்கள் - சோகத்தில் மூழ்கிய கிராமம்

ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த செய்தி புங்கனூர் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இருவரும் இளம் வயதில் உயிரிழந்தது, குடும்பத்தினரையும் உறவினர்களையும் தாங்க முடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

காவல்துறையினர் விசாரணை 

இந்த விபத்து குறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இருசக்கர வாகனத்தின் வேகம், ஓட்டுநரின் கவனக்குறைவு அல்லது வேறு ஏதேனும் காரணமாக விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

சாலை விபத்துகளும், விழிப்புணர்வின் தேவையும்

சமீப காலமாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் சாலை விபத்துகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, இருசக்கர வாகன விபத்துகளின் எண்ணிக்கை கவலை அளிப்பதாக உள்ளது. இளைஞர்கள் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதும், தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்வதும் இதுபோன்ற விபத்துகளுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.


சீர்காழி அருகே இப்படி ஒரு விபத்தா...? - பரிதாபமாக பறிபோன இரண்டு உயிர்கள் - சோகத்தில் மூழ்கிய கிராமம்

இந்த விபத்து, சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது. வாகன ஓட்டிகள் வேகக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதும், இரவு நேரப் பயணங்களின்போது அதிக கவனம் செலுத்துவதும் அவசரத் தேவை. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க, அரசு மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இறந்த ஆனந்த் மற்றும் மோகன்ராஜின் மறைவுக்கு அப்பகுதி மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர்களின் மரணம், சாலை விபத்துகளின் கோர முகத்தை மீண்டும் ஒருமுறைவெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திங்கட்கிழமை (மார்ச் 30) மயிலாடுதுறையில் சாலை மறியல் போராட்டம் - காரணம் என்ன? முழு விவரம் உள்ளே!
திங்கட்கிழமை (மார்ச் 30) மயிலாடுதுறையில் சாலை மறியல் போராட்டம் - காரணம் என்ன? முழு விவரம் உள்ளே!
மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் தொகுதிகளுக்கான 1,139 EVM இயந்திரங்கள் எங்கே உள்ளது தெரியுமா..? 
மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் தொகுதிகளுக்கான 1,139 EVM இயந்திரங்கள் எங்கே உள்ளது தெரியுமா..? 
மயிலாடுதுறை அருகே பறக்கும் படை சோதனையில் வசமாக சிக்கிய கிஃப்ட் பாக்ஸ்கள்- யாருடையது தெரியுமா..?
மயிலாடுதுறை அருகே பறக்கும் படை சோதனையில் வசமாக சிக்கிய கிஃப்ட் பாக்ஸ்கள்- யாருடையது தெரியுமா..?
விழிப்புணர்வு நிகழ்ச்சிகளால் அதிரும் மயிலாடுதுறை : மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கைகள்..!
விழிப்புணர்வு நிகழ்ச்சிகளால் அதிரும் மயிலாடுதுறை : மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கைகள்..!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Manila Congress Candidates: தமாகா வேட்பாளர்களை அறிவித்த ஜி.கே. வாசன்.! திமுகவிற்கு டஃப் கொடுக்கப்போகும் அந்த 5 பேர் யார்.?
தமாகா வேட்பாளர்களை அறிவித்த ஜி.கே. வாசன்.! திமுகவிற்கு டஃப் கொடுக்கப்போகும் அந்த 5 பேர் யார்.?
Petrol Diesel Price: வரிய குறைச்சும், பலன் வரலையே? தேர்தல் - விலையேற்றத்திற்கு சிக்னல் கொடுத்த மத்திய அரசு?
Petrol Diesel Price: வரிய குறைச்சும், பலன் வரலையே? தேர்தல் - விலையேற்றத்திற்கு சிக்னல் கொடுத்த மத்திய அரசு?
ADMK EPS: கூட்டணி கட்சிகளுக்கு பாடம் புகட்டும் எடப்பாடி? கொங்கின் கிங், வஞ்சகமா? எதிர்காலத்திற்கான ஸ்கெட்ச்
ADMK EPS: கூட்டணி கட்சிகளுக்கு பாடம் புகட்டும் எடப்பாடி? கொங்கின் கிங், வஞ்சகமா? எதிர்காலத்திற்கான ஸ்கெட்ச்
மீண்டும் மீண்டுமா? அண்ணா பல்கலை.யில் 2 ஆண்டாக பாலியல் தொல்லை- புகாரளித்த மாணவி!
மீண்டும் மீண்டுமா? அண்ணா பல்கலை.யில் 2 ஆண்டாக பாலியல் தொல்லை- புகாரளித்த மாணவி!
பொன்ராஜ், எஸ்வி சேகர்.. பெண்களை இழிவுசெய்வோரை கைது செய்யாதது ஏன்? திமுக ஆதரவா? அன்புமணி கேள்வி
பொன்ராஜ், எஸ்வி சேகர்.. பெண்களை இழிவுசெய்வோரை கைது செய்யாதது ஏன்? திமுக ஆதரவா? அன்புமணி கேள்வி
China US Iran War: அமெரிக்கா - ஈரான் போரின் உள்ளே நுழைந்த சீனா; ஆனா இந்த தடவ ‘வேற மாதிரி‘; என்ன செய்யப்போறாங்க.?
அமெரிக்கா - ஈரான் போரின் உள்ளே நுழைந்த சீனா; ஆனா இந்த தடவ ‘வேற மாதிரி‘; என்ன செய்யப்போறாங்க.?
Top 10 News Headlines: அண்ணா பல்கலை. பேராசிரியர் மீது பாலியல் புகார், பெட்ரோல் டீசல்-வரி குறைப்பு, ஈரான் போரில் சீனா - 11 மணி செய்திகள்
அண்ணா பல்கலை. பேராசிரியர் மீது பாலியல் புகார், பெட்ரோல் டீசல்-வரி குறைப்பு, ஈரான் போரில் சீனா - 11 மணி செய்திகள்
Smartphones Under 20K: ரியல்மி to மோட்டோரோலா வரை.! ரூ.20,000-க்குள்ள ஒரு செமத்தியான போன் வாங்கனுமா.? இந்தாங்க லிஸ்ட்
ரியல்மி to மோட்டோரோலா வரை.! ரூ.20,000-க்குள்ள ஒரு செமத்தியான போன் வாங்கனுமா.? இந்தாங்க லிஸ்ட்
Embed widget