மேலும் அறிய

மார்ச் 31 -ம் தேதி கடைசி நாள்... எதற்கு தெரியுமா..? முழு விபரம் உள்ளே இருக்கு...!

மயிலாடுதுறை மாவட்ட குடும்ப அட்டைதாரா்கள் மாா்ச் 31 -ம் தேதிக்குள் தங்களது கைரேகைகளை ரேஷன் கடையில் உள்ள இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரா்கள் மாா்ச் 31 -ம் தேதிக்குள் தங்களது குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கைரேகையினை ரேஷன் கடையில் உள்ள இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கட்டாய கைரேகை பதிவு 

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டையில் உள்ள அனைவரும் தங்கள் கைரேகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34,793 நியாய விலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குடும்ப அட்டைகள் மூலம் 7 கோடியே 51 ஆயிரத்து 954 பயனாளிகள் பயன் பெற்று வருகின்றனர். மேலும், 6 கோடியே 96 லட்சத்து 47 ஆயிரத்து 407 நபர்கள், தங்கள் ஆதார் எண்ணை தங்களது குடும்ப அட்டையோடு இணைத்துள்ளனர். 

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்

மொத்தம் உள்ள குடும்ப அட்டைகளில், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வரும் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ், 18.61 லட்சம் குடும்ப அட்டைகளும் முன்னுரிமை பெற்ற 95.67 லட்சம் அட்டைகளும் உள்ளன. இதுமட்டுமல்லாது, ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் உணவுப் பொருள் வழங்கல் திட்டம் கணினி மயமாக்கப்பட்டு, ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளதாலும், கைரேகைப் பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாலும், யார் வேண்டுமானாலும் எந்த நியாய விலைக் கடையிலும் பொருட்கள் வாங்கலாம் என்ற நிலை தற்பொழுது உள்ளது.

குறைவாக பதிவான கைரேகையை பதிவு 

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் கைரேகையைப் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், குறிப்பிட்ட சதவீதத்தினர் மட்டுமே இந்த கைரேகையைப் பதிவை மேற்கொண்டனர், மற்றவர்களும் கட்டாயம் கைரேகையைப் பதிவு செய்ய வேண்டும் என தற்போது அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ரேஷன் கடை ஊழியர்கள் அறிவுறுத்தல் 

இந்த நிலையில், குடும்ப அட்டையில் உள்ள அனைவரும் கட்டாயம் தங்கள் விரல் ரேகையைப் பதிவு செய்ய வேண்டும் எனவும், இல்லாவிட்டால் பொருள்கள் அளவு குறைக்கப்படும் அல்லது பெயர் நீக்கப்படும் என நியாய விலைக் கடை ஊழியர்கள் தெரிவித்து வருவதால் பொதுமக்கள் அச்சமும், பதற்றமும் அடைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக, இது குறித்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும். ஆனால், பெரும்பாலானோர் பல்வேறு காரணங்களால் தங்களுடைய கைரேகையைப் பதிவு செய்யவில்லை. ஆகவே, இது சம்பந்தமாக தற்பொழுது மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு நியாய விலைக் கடை ஊழியர்கள் அறிவுறுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் மார்ச் 31 கடைசி தேதி 

இந்நிலையில் இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த செய்திக்குறிப்பு மயிலாடுதுறை மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் NFSA (PHH/AAY) பயனாளர்கள் 31.03.2025 -க்கு முன்னர் குடும்ப அட்டையிலுள்ள அனைத்து உறுப்பினர்களின் (மின்னனு அடையாள பதிவு) கைரேகை பதிவை E-KYC மூலம் மேற்கொள்ள என. தெரிவிக்கப்படுகிறது.

 

மேலும் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள நியாய விலை அங்காடிகளில் 14.03.2025 15.03.2025, 21.03.2025, 22.03.2025 ஆகிய நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களிலும், முகாம் இல்லாத இதர நாட்களில் விற்பனையாளர்கள் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று E-KYC (மின்னனு அடையாள பதிவு) கைரேகை பதிவு செய்ய உதவுவார்கள். (PHH/AAY) குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை & ஆதார் அட்டை கொண்டு நியாய விலை அங்காடிகளுக்கு சென்று (மின்னனு அடையாள பதிவு) கைரேகை பதிவை E-KYC பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீ.காந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi Speech: தொடர்ந்து 12வது முறையாக.. சுதந்திர தின உரை, பிரதமர் மோடி பேச்சில் ஆப்ரேஷன் சிந்தூர், ட்ரம்ப்?
PM Modi Speech: தொடர்ந்து 12வது முறையாக.. சுதந்திர தின உரை, பிரதமர் மோடி பேச்சில் ஆப்ரேஷன் சிந்தூர், ட்ரம்ப்?
Coolie Day 1 Collection: 100 கோடி ஜுஜுபி.. லியோ மட்டும் கஷ்டம் -  ரஜினியின் கூலி திரைப்பட முதல் நாள் வசூல் எவ்வளவு?
Coolie Day 1 Collection: 100 கோடி ஜுஜுபி.. லியோ மட்டும் கஷ்டம் - ரஜினியின் கூலி திரைப்பட முதல் நாள் வசூல் எவ்வளவு?
TN Govt Warning: போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP vs OPS | மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi Speech: தொடர்ந்து 12வது முறையாக.. சுதந்திர தின உரை, பிரதமர் மோடி பேச்சில் ஆப்ரேஷன் சிந்தூர், ட்ரம்ப்?
PM Modi Speech: தொடர்ந்து 12வது முறையாக.. சுதந்திர தின உரை, பிரதமர் மோடி பேச்சில் ஆப்ரேஷன் சிந்தூர், ட்ரம்ப்?
Coolie Day 1 Collection: 100 கோடி ஜுஜுபி.. லியோ மட்டும் கஷ்டம் -  ரஜினியின் கூலி திரைப்பட முதல் நாள் வசூல் எவ்வளவு?
Coolie Day 1 Collection: 100 கோடி ஜுஜுபி.. லியோ மட்டும் கஷ்டம் - ரஜினியின் கூலி திரைப்பட முதல் நாள் வசூல் எவ்வளவு?
TN Govt Warning: போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
US Tariff Warning: “ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
“ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
TN TET 2025: ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
தமிழகத்தில் தற்கொலைகள் உச்சம்! பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு! அதிர்ச்சி தரும் ஆளுநர் உரை
தமிழகத்தில் தற்கொலைகள் உச்சம்! பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு! அதிர்ச்சி தரும் ஆளுநர் உரை
J&K Cloudburst: ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம்; 38 பேர் பலி - மீட்புப் பணியில் இணைந்த ராணுவம்
ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம்; 38 பேர் பலி - மீட்புப் பணியில் இணைந்த ராணுவம்
Embed widget