மேலும் அறிய

தண்டவாளத்தில் தலையை கொடுக்க முடிவெடுத்த ரயில் பயணிகள்! எங்கே? ஏன் தெரியுமா?

மயிலாடுதுறை மாவட்ட ரயில் பயணிகள் நல சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்லாவிட்டால், முன்னறிவிப்பின்றி தண்டவாளத்தில் தலை வைத்து போராட்டம் நடத்தப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ரயில் பயணிகள் நல சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரயில் பயணிகள் ஆலோசனை கூட்டம் 

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயிலில் மயிலாடுதுறை மாவட்ட ரயில் பயணிகள் நல சங்கம் சார்பில் ரயில் பயணிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ரயில் பயணிகள் நல சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெக. சண்முகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில், வைத்தீஸ்வரன்கோயில் ரயில் பயணிகள் சங்கத்தினர் முன்நின்று முறையாக ரயில்வே கோட்ட மேலாளரை சந்தித்து வைத்தீஸ்வரன்கோயில், சீர்காழி உள்ள பிரச்சினைகளை குறித்து விளக்கி அதன் மூலம் தீர்வுகாணசெய்ய முயல்வது என ஆலோசித்தனர். 


தண்டவாளத்தில் தலையை கொடுக்க முடிவெடுத்த ரயில் பயணிகள்! எங்கே? ஏன் தெரியுமா?

மேலும் பல விவாதங்கள் 

மேலும் நவகிரக ஸ்தலங்களில் செவ்வாய் ஸ்தலமாக வைத்தீஸ்வரன்கோயில் விளங்குவதால், பல்வேறு மாவட்ட பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். அதே போல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாடி ஜோதிடம் பார்த்திடவும் மக்கள் வருகின்றனர். ஆனால், வைத்தீஸ்வரன்கோயிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் தென்னக ரயில்வே செவிசாய்க்கவில்லை.

போராட்டம் நடத்திட முடிவு 

அதேபோல், சீர்காழியில் அந்தியோதயா விரைவு ரயில் நின்று செல்லவும், உழவன் ரயில் சென்னை மார்க்கத்தில் போகும்போது மட்டும் நின்று செல்கிறது. வரும்போது நிற்பதில்லை. இது குறித்தும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. எனவே, வைத்தீஸ்வரன்கோயிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை தென்னக ரயில்வே கோட்ட மேலாளரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது, தீர்வு உடனடியாக கிடைக்காவிட்டால் முன் அறிவிப்பு இன்றி கடைகள் அடைப்பு போராட்டம் நடத்தி கார், வேன், ஆட்டோ நிறுத்தம் செய்து பொதுமக்கள், பக்தர்கள், ரயில் பயணிகள் இணைந்து தண்டவாளத்தில் தலை வைத்து போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தண்டவாளத்தில் தலையை கொடுக்க முடிவெடுத்த ரயில் பயணிகள்! எங்கே? ஏன் தெரியுமா?

ரயில் பயணிகள் நல சங்க தலைவர் ஜெக. சண்முகம்

கூட்டத்தில், ரயில் பயணிகள் நல சங்க தலைவர் ஜெக. சண்முகம் பேசுகையில், "வைத்தீஸ்வரன்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், இங்கு அனைத்து ரயில்களும் நின்று செல்லாததால், பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுகுறித்து பலமுறை ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், நாங்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்" என்றார்.

ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள்

மேலும், கூட்டத்தில் பங்கேற்ற பயணிகள் மற்றும் பொதுமக்கள் பேசுகையில், "வைத்தீஸ்வரன்கோயிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும். சீர்காழியில் அந்தியோதயா விரைவு ரயில் நின்று செல்ல வேண்டும். உழவன் ரயில் சீர்காழியில் இரண்டு திசையிலும் நின்று செல்ல வேண்டும். இந்த கோரிக்கைகளை ரயில்வே நிர்வாகம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், நாங்கள் தொடர் போராட்டங்களை நடத்துவோம்" என்றனர். இக்கூட்டத்தில், ரயில் பயணிகள் நல சங்க நிர்வாகிகள், பயணிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தண்டவாளத்தில் தலையை கொடுக்க முடிவெடுத்த ரயில் பயணிகள்! எங்கே? ஏன் தெரியுமா?

வைத்தீஸ்வரன்கோயில் ரயில் நிலையத்தின் முக்கியத்துவம்

  • நவகிரக ஸ்தலங்களில் செவ்வாய் ஸ்தலமாக வைத்தீஸ்வரன்கோயில் விளங்குகிறது.
  • இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாடி ஜோதிடம் பார்த்திட மக்கள் வருகின்றனர்.
  • தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

ரயில் பயணிகள் நல சங்கத்தின் கோரிக்கைகள்

  • வைத்தீஸ்வரன்கோயிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும்.
  • சீர்காழியில் அந்தியோதயா விரைவு ரயில் நின்று செல்ல வேண்டும்.
  • உழவன் ரயில் சீர்காழியில் இரண்டு திசையிலும் நின்று செல்ல வேண்டும்.


தண்டவாளத்தில் தலையை கொடுக்க முடிவெடுத்த ரயில் பயணிகள்! எங்கே? ஏன் தெரியுமா?

போராட்டத்தின் எச்சரிக்கை

  • கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், முன் அறிவிப்பு இன்றி கடைகள் அடைப்பு போராட்டம் நடத்தப்படும்.
  • கார், வேன், ஆட்டோ நிறுத்தம் செய்து பொதுமக்கள், பக்தர்கள், ரயில் பயணிகள் இணைந்து தண்டவாளத்தில் தலை வைத்து போராட்டம் நடத்தப்படும்.

ரயில் பயணிகள் நல சங்கத்தின் இந்த எச்சரிக்கை, ரயில்வே நிர்வாகத்திற்கு ஒரு அழுத்தத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், வைத்தீஸ்வரன்கோயில் மற்றும் சீர்காழி பகுதி மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
Dindigul Leoni:
Dindigul Leoni: "அண்ணாமலையால் இதை செய்ய முடியுமா? 2026-ல் ஜீரோ தான்... " சவால்விட்ட லியோனி
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷாNamakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
Dindigul Leoni:
Dindigul Leoni: "அண்ணாமலையால் இதை செய்ய முடியுமா? 2026-ல் ஜீரோ தான்... " சவால்விட்ட லியோனி
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
Embed widget