மேலும் அறிய

மயிலாடுதுறை: ஆத்தாடி எவ்வளவு மனு...! மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்...

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 408 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 408 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது உரிய காலத்திற்குள் நடவடிக்கை எடுத்து, அதன் விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

தலைமை மற்றும் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவரின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்தும், குக்கிராமங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களது அடிப்படைத் தேவைகள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்யக் கோரி வருகை தந்தனர். இக்கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ச.உமாகேஷ்வரன் உள்ளிட்ட முக்கியத் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

குவிந்த மனுக்கள்: ஒரு பார்வை

இன்றைய கூட்டத்தில் பெறப்பட்ட 408 மனுக்களும் வகைப்படுத்தப்பட்டு, அந்தந்த துறை அதிகாரிகளின் மேலாய்வுக்கு அனுப்பப்பட்டன. 

மனுக்களின் விபரம் பின்வருமாறு:

கோரிக்கையின் வகை  

* கலைஞர் மகளிர் உரிமைத் தொகை - 52 

* இலவச வீட்டுமனைப் பட்டா & பட்டா மாறுதல் - 38 

* மாற்றுத்திறனாளிகள் நலன் (அடையாள அட்டை, உபகரணங்கள்) - 35 

* தொழிற்கடன் கோருதல் - 33 

* புகார்கள் மற்றும் இதர மனுக்கள் - 32 

* நில அபகரிப்பு மற்றும் நிலப் பிரச்சனைகள் - 28 

* இலவச கான்கிரீட் வீடு கோருதல் - 27 

* தொழிலாளர் நலன் தொடர்பான மனுக்கள் - 24 

* குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் - 23 

* ஆக்கிரமிப்பு அகற்றுதல் & சட்டம் ஒழுங்கு - 42 

* முதியோர், விதவை உதவித்தொகை - 10 

* வேலைவாய்ப்பு கோருதல் - 16 

* குடும்ப அட்டை & 100 நாள் வேலைத் திட்டம் - 32 

மகளிர் உரிமைத் தொகைக்கு முன்னுரிமை

பெறப்பட்ட மனுக்களிலேயே அதிகப்படியாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக 52 மனுக்கள் பெறப்பட்டன. தகுதியிருந்தும் தங்களுக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை என்றும், மேல்முறையீடு தொடர்பாகவும் பெண்கள் அதிக அளவில் மனுக்களை அளித்தனர். இது குறித்து முறையாக கள ஆய்வு செய்து, தகுதியானவர்களுக்கு உடனடியாக உரிமைத் தொகை கிடைக்க வழிவகை செய்யுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் நலன்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 35 மனுக்கள் பெறப்பட்டன. அவர்களுக்குத் தேவையான அடையாள அட்டைகள், வங்கிக் கடன்கள் மற்றும் நவீன உபகரணங்களை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை கோரி வந்த மனுக்கள் மீதும் உடனடி பரிசீலனை மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுரை

பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பூங்கொடி பேசியதாவது:

 "பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் மாவட்ட நிர்வாகத்தை அணுகுகிறார்கள். குறிப்பாக இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல் மற்றும் நிலப் பிரச்சனைகள் தொடர்பான மனுக்கள் மீது வருவாய்த் துறையினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எந்தவொரு மனுவையும் நிலுவையில் வைக்காமல், சட்டத்திற்கு உட்பட்டு விரைந்து தீர்வு காண வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு எழுத்துப்பூர்வமாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ முறையாகத் தெரிவிக்க வேண்டும்." என்றார்.

இக்கூட்டத்தில் பெறப்பட்ட 408 மனுக்களையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்த மாவட்ட வருவாய் அலுவலர், அந்தந்த துறையினர் ஒரு வார காலத்திற்குள் மனுக்களின் மீது எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள், மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேரடியாகத் தங்கள் குறைகளைக் கூறி மனுக்களை வழங்கியதால், மாவட்ட ஆட்சியரகம் இன்று மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாகக் காணப்பட்டது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

கலை இளமணி முதல் கலை முதுமணி வரை.. மயிலாடுதுறையில் 15 பேருக்குக் கிடைக்கும் அரிய வாய்ப்பு!
கலை இளமணி முதல் கலை முதுமணி வரை.. மயிலாடுதுறையில் 15 பேருக்குக் கிடைக்கும் அரிய வாய்ப்பு!
பிரம்மா பூஜித்த பழமை வாய்ந்த ஆலயம்.. சீர்காழி அருகே கோலாகலமாக நடந்த பிர்மபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்!
பிரம்மா பூஜித்த பழமை வாய்ந்த ஆலயம்.. சீர்காழி அருகே கோலாகலமாக நடந்த பிர்மபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்!
5 நிமிட வீடியோவை இந்த மெயிலுக்கு அனுப்புங்க.. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!
5 நிமிட வீடியோவை இந்த மெயிலுக்கு அனுப்புங்க.. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!
தாத்தா வயதில் இப்படியொரு கொடூர புத்தியா? 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் - தட்டிக்கேட்ட வர்களுக்கு கத்திக்குத்து..
தாத்தா வயதில் இப்படியொரு கொடூர புத்தியா? 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் - தட்டிக்கேட்ட வர்களுக்கு கத்திக்குத்து..

வீடியோ

Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK:
ADMK: "வெயிட் பண்ணுங்க.. முதலமைச்சர் ரீல்ஸ் எடுக்கனும்.." விஜய்யை விளாசிய அதிமுக!
Sreethar Vembu: அஞ்சமாட்டேன்! திமுக கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுங்கள் - ஸ்ரீதர் வேம்பு ஆவேசம்
Sreethar Vembu: அஞ்சமாட்டேன்! திமுக கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுங்கள் - ஸ்ரீதர் வேம்பு ஆவேசம்
இன்றும் நாளையும் வெளுத்து வாங்கப்போகும் மழை: எங்கெல்லாம் கொட்டப்போகுது? - வானிலை வெளியிட்ட லிஸ்ட்
இன்றும் நாளையும் வெளுத்து வாங்கப்போகும் மழை: எங்கெல்லாம் கொட்டப்போகுது? - வானிலை வெளியிட்ட லிஸ்ட்
Mid Day Meals: இனி சைவ சத்துணவுதான்; மதிய உணவுத் திட்டத்தில் முட்டை நீக்கம்- எழும் எதிர்ப்புகள்!
Mid Day Meals: இனி சைவ சத்துணவுதான்; மதிய உணவுத் திட்டத்தில் முட்டை நீக்கம்- எழும் எதிர்ப்புகள்!
Avore Electric: அட்டகாசமான அவோர் எலக்ட்ரிக் பைக்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச், அசத்தல் வடிவமைப்பு, அம்சங்கள்
Avore Electric: அட்டகாசமான அவோர் எலக்ட்ரிக் பைக்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச், அசத்தல் வடிவமைப்பு, அம்சங்கள்
DMK ELECTION PLAN: இனி கூட்டணி இல்லை.! தேர்தலில் தனித்து போட்டி.? திமுகவினரை குஷியாக்க ஸ்டாலின் போட்ட செம பிளான்
இனி கூட்டணி இல்லை.! தேர்தலில் தனித்து போட்டி.? திமுகவினரை குஷியாக்க ஸ்டாலின் போட்ட செம பிளான்
Group 1 Vacancy: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பணியிடங்கள் கடும் குறைப்பு: தேர்வர்கள் கொந்தளிப்பு, அதிகரிக்க கோரிக்கை!
Group 1 Vacancy: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பணியிடங்கள் கடும் குறைப்பு: தேர்வர்கள் கொந்தளிப்பு, அதிகரிக்க கோரிக்கை!
TN EB Bill: 200 யூனிட் இலவசம் மட்டுமில்ல..நடப்பாண்டில் மின்சார கட்டண உயர்வும் இல்லை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
200 யூனிட் இலவசம் மட்டுமில்ல..நடப்பாண்டில் மின்சார கட்டண உயர்வும் இல்லை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Embed widget