மேலும் அறிய

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் - எங்கே..? என்ன கோரிக்கை தெரியுமா?

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் - எங்கே..? என்ன கோரிக்கை தெரியுமா?

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள எரவாஞ்சேரி கிராம மக்கள், சுமார் 27 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ள வீரசோழன் ஆற்றுப் பாலத்தைச் சீரமைப்பதுடன், கிராமத்தின் அடிப்படை உள்கட்டமைப்பை மேம்படுத்தக் கோரி இன்று கவன ஈர்ப்பு அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அபாயத்தில் 27 ஆண்டுகாலப் பாலம்

எரவாஞ்சேரி கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பிரதானப் பாதையில் வீரசோழன் ஆற்றின் குறுக்கே 1997-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாலம், தற்போது அதன் ஆயுட்காலம் முடிந்து மிகவும் சிதலமடைந்த நிலையில் உள்ளது. பாலத்தின் பல பகுதிகளில் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து, இரும்புக் கம்பிகள் வெளியே தெரியும் அபாயகரமான நிலையில் காணப்படுகிறது. இந்தப் பாலம் வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் வாகனங்கள் பயணிக்கும் நிலையில், அது எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் இருப்பதால், கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்தப் பாலத்தை முற்றிலும் இடித்துவிட்டு, புதிதாகக் கட்டித் தர வேண்டும் என்பதே கிராம மக்களின் பிரதான கோரிக்கையாகும்.

குண்டும் குழியுமான சாலைகளால் அவதி

பாலம் சீரமைப்பு கோரிக்கையுடன் சேர்த்து, எரவாஞ்சேரி கிராமத்தில் இருந்து திருவிளையாட்டம், தில்லையாடி ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் இணைப்புச் சாலை மிகவும் சிதைந்து, பெரிய குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள், விவசாயிகள் மற்றும் அன்றாடப் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக, அவசர மருத்துவத் தேவைக்காக இந்தச் சாலையில் பயணிப்பது என்பது மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது. எனவே, இந்த முக்கியச் சாலையை உடனடியாகச் சீரமைத்துத் தர வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தினர்.

பழுதடைந்த நியாய விலைக் கடை கட்டிடம்

மேலும், எரவாஞ்சேரி கிராமத்தில் உள்ள நுகர்பொருள் அங்காடி (நியாய விலைக் கடை) கட்டிடம் மிகவும் பழமையாகி, பழுதடைந்துள்ளதால், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. புதிய கட்டிடம் கட்டித் தரப்படாவிட்டால், மழைக்காலங்களில் பொருட்கள் சேதமடைவதுடன், பொதுமக்கள் காத்திருப்பதற்கும் பாதுகாப்பான சூழல் இருக்காது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். எனவே, புதிய நுகர்பொருள் அங்காடி கட்டிடத்தைக் கட்டித் தர வேண்டும் என்பதும் அவர்களின் முக்கியக் கோரிக்கையாகும்.

நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற உண்ணாவிரதம்

மேற்கண்ட மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, எரவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கிராமத்தின் பொது இடத்தில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் பதாகைகளை ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியும் தங்கள் நியாயமான கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.

அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை: தற்காலிக வாபஸ்

போராட்டம் குறித்துத் தகவல் அறிந்த தரங்கம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி மற்றும் மஞ்சுளா ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் அளிக்கப்படாததால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

நிலைமை சீராகாத நிலையில், போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மயிலாடுதுறை கூடுதல் ஆட்சியர், போராட்டக்காரர்களுடன் தொலைபேசியில் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசினார். மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த கூடுதல் ஆட்சியர், பாலத்தின் நிலை, சாலையின் சேதம் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்து, உரிய மற்றும் துரிதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

மாவட்ட நிர்வாகத்தின் உயர் அதிகாரியின் உறுதியை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள், தற்காலிகமாகத் தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தனர். எனினும், குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், மீண்டும் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் எரவாஞ்சேரி கிராம மக்களின் இந்த உணர்ச்சிப்பூர்வமான போராட்டம், அப்பகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Top 10 News Headlines: சென்னையில் விடாது பொழியும் மழை, நிவாரணம் அறிவித்த அரசு, ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: சென்னையில் விடாது பொழியும் மழை, நிவாரணம் அறிவித்த அரசு, ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
Embed widget