மேலும் அறிய

அமைச்சரின் புகைப்படத்துடன் விவசாயிகள் எதிர்ப்பு : மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு - என்ன நடந்தது..?

அமைச்சர் அறிவித்த நிவாரணம், பத்து மாதங்கள் கடந்த பின்னரும் வழங்கப்படாததைக் கண்டித்து, அமைச்சரின் புகைப்படத்துடன் கூடிய அட்டைகளை ஏந்தி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

மயிலாடுதுறை: ஜனவரி மாதம் கனமழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக்கு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்த நிவாரணத் தொகை, பத்து மாதங்கள் கடந்த பின்னரும் வழங்கப்படாததைக் கண்டித்து, அமைச்சரின் புகைப்படத்துடன் கூடிய அட்டைகளை ஏந்தி விவசாயிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் போராட்டம் நடத்தினர். இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (நவ. 27) விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வேளாண் துறை, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விவசாயிகள் தரப்பிலிருந்து கடுமையான கேள்விகளும், குற்றச்சாட்டுகளும் எழுப்பப்பட்டன. கடந்த மாதம் தொடங்கி, மயிலாடுதுறை மாவட்டத்தில் இருமுறை கனமழை பெய்ததன் காரணமாகச் சம்பா பயிர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பாதிப்புகள் குறித்து வேளாண் துறை அதிகாரிகள் உரிய முறையில் கணக்கெடுப்பு நடத்தவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

பாதிப்படைந்த நாற்றுகளுடன் அதிகாரிகள் முன் முறையீடு

பாதிப்படைந்த பயிர்கள் குறித்து அதிகாரிகளுடன் விவசாயிகள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விவசாய நிலங்களில் மழைநீரில் மூழ்கி அழுகிய சம்பா நாற்றுகளைக் கைகளில் ஏந்தியபடி கூட்டத்திற்கு வந்திருந்த விவசாயிகள், தங்கள் குறைகளை அதிகாரிகளிடம் உருக்கத்துடன் தெரிவித்தனர். மழையால் நாற்றுகள் அழுகிப்போனதால், மீண்டும் நாற்று நடுவதற்கான செலவு மற்றும் காலதாமதம் குறித்த தங்களது வேதனைகளை அவர்கள் எடுத்துரைத்தனர்.

ஜனவரி நிவாரணம்: 10 மாத கால தாமதம்

இந்த வாக்குவாதங்களுக்கு மத்தியில், கடந்த ஜனவரி மாதம் சம்பா அறுவடையின்போது பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நிவாரணம் குறித்த கேள்விகளை எழுப்பினர். கடந்த ஜனவரி மாதம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அப்போது அறிவித்திருந்தார். இந்த நிவாரணத்திற்காக, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டும் ரூ.63 கோடி தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், அமைச்சர் அறிவித்து, அரசு நிதி ஒதுக்கீடு செய்து சுமார் 10 மாதங்கள் கடந்த நிலையிலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை ஒரு பைசா கூட வழங்கப்படவில்லை என்று விவசாயிகள் கூட்டத்தில் ஆவேசமாகத் தெரிவித்தனர்.

அமைச்சரின் புகைப்படத்துடன் போராட்டம்: உச்சக்கட்ட பரபரப்பு

பத்து மாதங்களாகியும் நிவாரணம் வழங்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பிய விவசாயிகள், ஒரு விநோதமான முறையில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அவர்கள், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஜனவரியில் நிவாரணம் குறித்துத் தொலைக்காட்சிகளில் பேட்டி அளித்தபோது வெளியான செய்தியின் அச்சுப் பிரதி மற்றும் அமைச்சரின் புகைப்படத்துடன் கூடிய அட்டைகளைக் கையில் ஏந்தியிருந்தனர்.

"10 மாதங்கள் கடந்த நிலையில் அமைச்சரின் உத்தரவு என்ன ஆயிற்று? 63 கோடி ரூபாய் நிதி எங்கே போனது?" என்று கோஷமிட்டவாறு, அந்த அட்டைகளைக் கையில் உயர்த்திக் காண்பித்தனர். அமைச்சரின் அறிவிப்பையும், புகைப்படத்தையும் சுட்டிக்காட்டி விவசாயிகள் கேள்வி எழுப்பியதால், விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பெரும் பரபரப்பும் கூச்சலும் ஏற்பட்டது. அதிகாரிகள் அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றும், விவசாயிகள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர்.

நிவாரணத் தொகை வழங்காததற்கு உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்றும், உடனடியாகப் பணத்தைப் பட்டுவாடா செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

புதிய புயல் எச்சரிக்கை மற்றும் கோரிக்கை

தற்போது வங்கக்கடலில் இலங்கை அருகே புதிய புயல் ஒன்று உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது.

ஏற்கனவே இருமுறை மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், வரவிருக்கும் புயல் காரணமாக மேலும் விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க, தகுந்த முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும், பயிர் பாதுகாப்புத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழைய நிவாரணம் குறித்த குழப்பத்திற்கும், புதிய பாதிப்புகளுக்கான அச்சத்திற்கும் மத்தியில், அதிகாரிகளும் விவசாயிகளும் ஒருமித்த தீர்வை எட்ட முடியாமல் கூட்டம் நிறைவடைந்தது. நிவாரணம் குறித்து அரசு உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதே அனைத்து விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
Embed widget