மேலும் அறிய

மயிலாடுதுறை வாக்காளர்களே! படிவங்களை சமர்ப்பிக்க கடைசி வாய்ப்பு! தவறவிடாதீர்கள்! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கணக்கெடுப்புப் படிவங்களை திரும்பப் பெறுவதற்கான சிறப்பு முகாம் நவம்பர் 22 மற்றும் 23-ம் தேதி ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள கணக்கெடுப்புப் படிவங்களை திரும்பப் பெறுவதற்கான சிறப்பு முகாம் நாளை (நவம்பர் 22, 2025) சனிக்கிழமை மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 23, 2025) ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு தினங்களிலும் நடைபெற உள்ளது. இச்சிறப்புப் பணியின் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தாங்கள் அளித்த தகவல்களைச் சரிபார்த்து, தங்கள் வாக்குப் பதிவை உறுதி செய்துகொள்ள மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்துள்ளது.

இரண்டு நாட்கள் தொடர் முகாம்

இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் தொடர்பான கணக்கெடுப்புப் படிவங்களை வாக்காளர்களிடமிருந்து திரும்பப் பெறும் பணிகளில், அந்தந்தப் பகுதிகளின் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) முகாமிட்டு தீவிரமாக ஈடுபட உள்ளனர்.

  • நாட்கள்: நவம்பர் 22, 2025 (சனிக்கிழமை) மற்றும் நவம்பர் 23, 2025 (ஞாயிற்றுக்கிழமை).
  • நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.

இந்த இரண்டு தினங்களிலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்கள் பொறுப்பில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, ஏற்கனவே வழங்கப்பட்ட கணக்கெடுப்புப் படிவங்களைச் சேகரிக்க உள்ளனர். இது வாக்காளர்கள் படிவங்களைத் திரும்ப ஒப்படைப்பதற்கு ஒரு அரிய வாய்ப்பை அளிக்கிறது.

பூர்த்தி செய்து ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

மாவட்ட ஆட்சியர் வாக்காளர்களுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோளில், "வாக்காளர்கள் அனைவரும் தங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள கணக்கெடுப்புப் படிவங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து தயாராக வைத்திருக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், படிவங்களைப் பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகங்கள் அல்லது குழப்பங்கள் இருக்குமானால், தங்கள் வீடுகளுக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் நேரிடையாகக் கேட்டுத் தெரிந்துகொண்டு, உடன் அவற்றைப் பூர்த்தி செய்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை அவர்களிடம் உடனடியாகத் திரும்ப வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

வாக்காளர்களின் விவரங்கள் துல்லியமாகப் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்வதே இச்சிறப்புத் திருத்தப் பணியின் முக்கிய நோக்கம் என்றும், இதன் மூலம் வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்குரிமையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், கேட்டுக்கொண்டுள்ளார்கள். மேலும் விரைந்து படிவங்களை ஒப்படைப்பதன் அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிப்பு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பாக பொதுமக்களுக்கு எழும் சந்தேகங்கள், புகார்கள் அல்லது உதவிகள் குறித்து அறிந்துகொள்ள, மாவட்ட மற்றும் சட்டமன்றத் தொகுதி வாரியான தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த எண்களைத் தொடர்புகொண்டு தங்களது சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்:

  • மாவட்ட அளவில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மயிலாடுதுறை - 1950
  • 160. சீர்காழி (தனி) 

வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர், சீர்காழி - 04364 – 270222 

161. மயிலாடுதுறை 

வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர், மயிலாடுதுறை - 04364 – 222033 

162. பூம்புகார் 

 உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், தரங்கம்பாடி - 04364 - 289439 

இந்த சிறப்பு முகாம் இரண்டு நாட்களுக்கு மட்டும் நடைபெறுவதால், மயிலாடுதுறை மாவட்ட வாக்காளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, பொறுப்புள்ள குடிமக்களாகத் தங்கள் கடமையை நிறைவேற்றி, தேர்தல் ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்கும் வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் பணிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
TATA Sierra Dealership: டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
Embed widget