மேலும் அறிய

அடப்பாவமே.. மதியம் 12 மணிக்கு வந்தவங்களுக்கு அதிர்ச்சி! மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தமாக டாஸ்மாக் கடைகளுக்கும் பூட்டு..!

மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.10 கூடுதல் கட்டண விவகாரத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் முன்னறிவிப்பின்றி பூட்டப்பட்டதால் மதுப்பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 43 டாஸ்மாக் மதுபானக் கடைகளும் முன்னறிவிப்பின்றி இன்று திடீரென மூடப்பட்டதால், மதுப்பிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கும் விவகாரத்தில் ஊழியர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள், பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் காலி பாட்டில்களை கையாளுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்க வலியுறுத்தி, ஊழியர்கள் அனைவரும் தஞ்சாவூரில் உள்ள மண்டல மேலாளர் அலுவலகத்திற்கு மனு அளிக்கச் சென்றுள்ளதால் இந்த அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.

ரூ.10 கூடுதல் கட்டண விவகாரமும் தற்காலிக முடக்கமும்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களின் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக நீண்ட நாட்களாகப் புகார்கள் எழுந்து வந்தன. இந்த விவகாரம் அண்மைக்காலமாகப் பெரும் பொது விவாதப் பொருளாக மாறியதை அடுத்து, டாஸ்மாக் நிர்வாகம் கடுமையான உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி, "மதுபானங்களுக்கு கூடுதல் விலை பெற்றால் பணியாளர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு உத்தரவை மீறி சட்டத்திற்குப் புறம்பாக கூடுதலாக 10 ரூபாய் வசூல் செய்ததாக, கடந்த சில நாட்களில் மட்டும் 4 டாஸ்மாக் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிர்வாகத்தின் இந்த கிடுக்கிப்பிடி நடவடிக்கை, டாஸ்மாக் ஊழியர்களிடையே பெரும் கொந்தளிப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. தங்களுக்குப் பின்னால் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களைப் புரிந்து கொள்ளாமல், நிர்வாகம் தங்களைப் பலியாடாக்குவதாக ஊழியர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

ஊழியர்களின் 6 அம்சக் கோரிக்கைகள்

தங்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், கடைகளை நடத்துவதில் உள்ள கடுமையான நடைமுறைச் சிரமங்களுக்குத் தீர்வு காணவும் வலியுறுத்தி, மயிலாடுதுறை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் ஒட்டுமொத்தமாகப் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்கள் முன்வைக்கும் முக்கிய 6 அம்சக் கோரிக்கைகள்;

*கூடுதல் பணியாளர்கள் நியமனம்: தினசரி ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையாகும் டாஸ்மாக் கடைகளுக்கு, உடனடியாக தலா 4 பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும். தற்போதைய பணியாளர் பற்றாக்குறையால் பணிச்சுமை தாங்க முடியாத அளவில் உள்ளது.

* முறையான கடை வாடகை: டாஸ்மாக் நிர்வாகம் வழங்கும் மாதாந்திர வாடகை போதுமானதாக இல்லை. இதனால் கடை ஊழியர்கள் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து கட்டிட உரிமையாளர்களுக்கு தினசரி வாடகையாக 5,000 ரூபாய் வரை கொடுக்க வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே, தற்போதைய சந்தை நிலவரத்திற்கு ஏற்ப போதுமான வாடகையை நிர்வாகமே முழுமையாக நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.

*காலி பாட்டில் சேகரிப்புப் பணியாளர்கள்: காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறுவதற்கு எனத் தனியாகப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். அவர்களுக்குரிய ஊதியத்தையும் நிர்வாகமே நேரடியாக வழங்க வேண்டும்.

*சுமைதூக்கும் கூலி உயர்வு: மதுபானப் பெட்டிகளை லாரிகளில் இருந்து இறக்குவதற்குக் கூலியாக (இறக்கு கூலி) பெட்டி ஒன்றுக்கு ரூபாய் 8 வீதம் வழங்கப்பட வேண்டும்.

*சேதமாகும் பாட்டில்களுக்கு இழப்பீடு: போக்குவரத்தின் போதோ அல்லது கையாளுதலின் போதோ உடையும் மது பாட்டில்களுக்குரிய நஷ்டத் தொகையை ஊழியர்கள் தலையில் கட்டாமல், நிர்வாகமே முழுமையாக ஏற்க வேண்டும்.

*காவல்துறை பாதுகாப்பு: கடைகளிலும், பணப் பரிவர்த்தனையின் போதும் ஊழியர்களுக்கு உரிய முறையில் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் உள்ள டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்தில் நேரில் அளிப்பதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களும் இன்று திரண்டு சென்றனர்.

கடை வாசலில் தவிக்கும் ‘குடிமகன்கள்’

ஊழியர்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூருக்குப் புறப்பட்டுச் சென்றதால், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 43 டாஸ்மாக் மதுபானக் கடைகளும் இன்று காலை முதல் பூட்டப்பட்டுக் கிடந்தன. கடைகள் அடைக்கப்படும் என்பது குறித்து எவ்வித முன்னறிவிப்பும் இல்லாததால், வழக்கம்போல் மதியம் 12 மணிக்கு மது வாங்க வந்த மதுப்பிரியர்கள் கடைகள் பூட்டப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். "மதியம் கடை திறக்கும் என்று காத்துக் கொண்டிருந்தோம். ஆனால் ஒரு கடையைக் கூட திறக்கவில்லை. யாரிடம் கேட்பது என்றும் தெரியவில்லை" என்று ஏமாற்றத்துடன் தெரிவித்தார் அங்கிருந்த மதுப்பிரியர் ஒருவர்.

தீவிரம் காட்டிய பல மதுப்பிரியர்கள், "எப்படியும் கடை திறந்துவிடுவார்கள்" என்ற நம்பிக்கையில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் டாஸ்மாக் கடைகளின் வாசலிலேயே மணி கணக்காகக் தவம் கிடக்கத் தொடங்கினர். சிலர் பக்கத்து மாவட்ட எல்லைகளை நோக்கி மதுபானம் வாங்குவதற்காகப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

மனமகிழ் மன்றத்தில் ‘நோ என்ட்ரி’ (No Entry) போர்டு

மயிலாடுதுறை நகரில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால், மதுப்பிரியர்களின் பார்வை அங்குள்ள ஒரே ஒரு தனியார் மனமகிழ் மன்றத்தின் (Recreation Club) மீது திரும்பியது. அங்கும் கூட்டம் அலைமோதத் தொடங்கிய சூழலில், அந்த நிர்வாகம் உடனடியாக ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.

அதன்படி, மன்றத்தின் முகப்பில் "மயிலாடுதுறை மனமகிழ் மன்றத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்படும்" என்ற அறிவிப்புப் பலகை (Notice Board) வைக்கப்பட்டது. இதனால் பொதுவான மதுப்பிரியர்கள் அங்கேயும் மதுபானம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன், பெருமூச்சுடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

அடுத்து என்ன? - பரபரக்கும் சூழல்

தஞ்சாவூரில் உள்ள மேலாளர் அலுவலகத்தில் ஊழியர்களின் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்து, கடைகள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் ஒட்டுமொத்த மதுப்பிரியர்களும் காத்துக்கிடக்கின்றனர். இந்தத் திடீர் முடக்கம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

உலமாக்கள் நல வாரியத்தில் திருமண, கல்வி நிதியுதவி மற்றும் ஓய்வூதியம்: ஆன்லைன் விண்ணப்ப முறை முழு விவரம்!
உலமாக்கள் நல வாரியத்தில் திருமண, கல்வி நிதியுதவி மற்றும் ஓய்வூதியம்: ஆன்லைன் விண்ணப்ப முறை முழு விவரம்!
கிறித்துவ தேவாலய ஊழியர்களுக்கு 8 நற்செய்திகள்: மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு - முழு விவரம் உள்ளே!
கிறித்துவ தேவாலய ஊழியர்களுக்கு 8 நற்செய்திகள்: மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு - முழு விவரம் உள்ளே!
ஜூன் 26 அதிகாலை 6.30 மணிக்கு நாகையில் என்ன நடக்கப் போகிறது? மாவட்ட ஆட்சியரின் மாஸ் பிளான்!
ஜூன் 26 அதிகாலை 6.30 மணிக்கு நாகையில் என்ன நடக்கப் போகிறது? மாவட்ட ஆட்சியரின் மாஸ் பிளான்!
ஆட்சியர் அலுவலகமா? தவெக கட்சி அலுவலகமா? மயிலாடுதுறையில் விஜய் பிறந்தநாளில் வெடித்த பரபரப்பு!
ஆட்சியர் அலுவலகமா? தவெக கட்சி அலுவலகமா? மயிலாடுதுறையில் விஜய் பிறந்தநாளில் வெடித்த பரபரப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சொன்னதை செய்த விஜய்.! பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்- சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட CM
சொன்னதை செய்த விஜய்.! பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்- சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட CM
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு; ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்- ஊதியம், தகுதி!
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு; ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்- ஊதியம், தகுதி!
CM Vijay Speech: ஸ்டாலினுக்கு குட்டிக் கதை சொன்ன CM விஜய்.. அவையில் வயிறு குலுங்கி சிரித்த ADMK, காங்., MLA-க்கள்
ஸ்டாலினுக்கு குட்டிக் கதை சொன்ன CM விஜய்.. அவையில் வயிறு குலுங்கி சிரித்த அதிமுக, காங்., MLA-க்கள்
CM Vijay Speech: ’’தொட மாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்கள..’’ அடுக்கு மொழி, ஆவேசத்தால் அரங்கை தெறிக்கவிட்ட முதல்வர் விஜய்
CM Vijay Speech: ’’தொட மாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்கள..’’ அடுக்கு மொழி, ஆவேசத்தால் அரங்கை தெறிக்கவிட்ட முதல்வர் விஜய்
CM Vijay Speech: எங்க ஆட்சிக்கே ஸ்கெட்ச்சா..! சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய விஜய்
எங்க ஆட்சிக்கே ஸ்கெட்ச்சா..! சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய விஜய்
Qatar fire accident : கத்தாரில் உயிரிழந்த தமிழர்கள்.! வேதனையில் தவித்த முதலமைச்சர் விஜய்... அமைச்சருக்கு அதிரடி உத்தரவு
கத்தாரில் உயிரிழந்த தமிழர்கள்.! வேதனையில் தவித்த முதலமைச்சர் விஜய்... அமைச்சருக்கு அதிரடி உத்தரவு
Maruti Suzuki: மாருதியின் ஃபேன் ஃபேவரட் மாடல்களின் விலை உயர்வு - எந்த காருக்கு எவ்வளவு? EV, ஹேட்ச்பேக்
மாருதியின் ஃபேன் ஃபேவரட் மாடல்களின் விலை உயர்வு - எந்த காருக்கு எவ்வளவு? EV, ஹேட்ச்பேக்
Embed widget