மேலும் அறிய

ஜீவனாம்சம் கேட்ட மனைவி.. மகனுடன் சேர்ந்து வெட்டிக்கொன்ற கணவன் - நீதிபதி கொடுத்த அதிரடி தீர்ப்பு

மயிலாடுதுறையில் ஜீவனாம்சம் கேட்ட மனைவியை தந்தை, மகன் சேர்ந்து கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மயிலாடுதுறையில் இரண்டாவது மனைவியின் மகனுடன் சேர்ந்து முதல் மனைவியை வெட்டி கொலை செய்த வழக்கில் இரண்டாவது மனைவியின் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்த கணவர் 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவல் சரகத்திற்கு உட்பட்ட கொத்த தெருவை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் 66 வயதான தீனதயாளன். இவரது மனைவி 65 வயதான மீனாட்சி. இவர்களுக்கு ராஜரத்தினம் என்ற மகன் ஒருவர் உள்ளார். இந்நிலையில் மேற்படி தீனதயாளன் என்பவருக்கு, மாரியம்மாள் என்ற மற்றொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அவர்களுக்கு செந்தில்குமார் என்ற மகன் பிறந்துள்ளார்.

ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு 

இதனால் ஆத்திரமடைந்த மீனாட்சி தனது கணவரின் நடத்தை காரணமாக தீனதயாளனை விட்டு பிரிந்து சென்று தனது மகன் ராஜரத்தினத்துடன் நல்லாடை பகுதியில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும் மீனாட்சி தனது வாழ்வாதாரத்திற்காக தனது கணவர் தீனதயாளனிடம் ஜீவனாம்சம் வழங்கிட கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் மீனாட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டு மீனாட்சிக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிடப்பட்டது. 

கொலை செய்த தந்தை, மகன்

அதனைத் தொடர்ந்து கடந்த 25.02.2017-ம் தேதி மீனாட்சி கணவர் தீனதயாளன் வீட்டிற்கு ஜீவனாம்சம் கேட்க சென்றுள்ளார். அப்போது அவரது கணவர் தீனதயாளன் மற்றும் தீனதயாளனின் இரண்டாவது மனைவியின் மகன் செந்தில்குமார் ஆகிய இருவரும் சேர்ந்து மீனாட்சியை அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர். இதனை அறிந்த மீனாட்சியின் மகன் நாகரத்தினம் இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கொலை குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்கின் குற்றவாளிகளான தீனதயாளன் மற்றும் செந்தில்குமார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். 

முதல் குற்றவாளி உயிரிழப்பு 

இவ்வழக்கின் அப்போதைய விசாரணை அதிகாரியான மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளர் அழகேசன் குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். மேற்படி வழக்கின் விசாரணையானது மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இவ்வழக்கின் முதல் எதிரியான மீனாட்சியின் கணவர் தீனதயாளன் கடந்த 2022-ம் ஆண்டு வயது முப்பின் காரணமாக உயிரிழந்தார்.

ஆயுள் தண்டனை விதிப்பு 

இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பானது தற்போது வெளியாகி குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவ்வழக்கினை விசாரித்த அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகுமாரி இவ்வழக்கின் மற்றொரு குற்றவாளியான செந்தில்குமாரை குற்றவாளி என தீர்மானித்து, மேற்படி குற்றவாளிக்கு ஆயுள் சிறைதண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதமும் விதித்தார். அபராத தொகையினை கட்டத்தவறும்பட்சத்தில் மேலும் ஒர் ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். 

 

எஸ்.பி.பாராட்டு

இதனை தொடர்ந்து வழக்கின் குற்றவாளி செந்தில்குமாரை கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ராம.சேயோன் ஆஜராகி சிறப்பாக வாதாடினர். வழக்கினை தண்டனையில் முடிக்க சிறப்பாக பணியாற்றிய அரசு வழக்கறிஞர் ராம.சேயோன், மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் நீதிமன்ற அலுவலாற்றிய காவலர் மாரிமுத்து ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.ஸ்டாலின் வெகுவாக பாராட்டியுள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Virat Kohli: ஒத்த சதம்.. சச்சினின் மொத்த ரெக்கார்டையும் காலி செய்த கோலி - ரெக்கார்டை பாருங்க
Virat Kohli: ஒத்த சதம்.. சச்சினின் மொத்த ரெக்கார்டையும் காலி செய்த கோலி - ரெக்கார்டை பாருங்க
டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்
டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்
SIR Last Date: வாக்காளர் திருத்தப் பட்டியல் - விண்ணப்பங்களை சமர்பிக்க கூடுதல் கால அவகாசம் - தேர்தல் ஆணையம்
SIR Last Date: வாக்காளர் திருத்தப் பட்டியல் - விண்ணப்பங்களை சமர்பிக்க கூடுதல் கால அவகாசம் - தேர்தல் ஆணையம்
காதலன் இறந்த சோகம்! காதலி எடுத்த விபரீத முடிவு.. திருப்பத்தூரில் பரபரப்பு
காதலன் இறந்த சோகம்! காதலி எடுத்த விபரீத முடிவு.. திருப்பத்தூரில் பரபரப்பு
Embed widget