மேலும் அறிய

ஜீவனாம்சம் கேட்ட மனைவி.. மகனுடன் சேர்ந்து வெட்டிக்கொன்ற கணவன் - நீதிபதி கொடுத்த அதிரடி தீர்ப்பு

மயிலாடுதுறையில் ஜீவனாம்சம் கேட்ட மனைவியை தந்தை, மகன் சேர்ந்து கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மயிலாடுதுறையில் இரண்டாவது மனைவியின் மகனுடன் சேர்ந்து முதல் மனைவியை வெட்டி கொலை செய்த வழக்கில் இரண்டாவது மனைவியின் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்த கணவர் 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவல் சரகத்திற்கு உட்பட்ட கொத்த தெருவை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் 66 வயதான தீனதயாளன். இவரது மனைவி 65 வயதான மீனாட்சி. இவர்களுக்கு ராஜரத்தினம் என்ற மகன் ஒருவர் உள்ளார். இந்நிலையில் மேற்படி தீனதயாளன் என்பவருக்கு, மாரியம்மாள் என்ற மற்றொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அவர்களுக்கு செந்தில்குமார் என்ற மகன் பிறந்துள்ளார்.

ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு 

இதனால் ஆத்திரமடைந்த மீனாட்சி தனது கணவரின் நடத்தை காரணமாக தீனதயாளனை விட்டு பிரிந்து சென்று தனது மகன் ராஜரத்தினத்துடன் நல்லாடை பகுதியில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும் மீனாட்சி தனது வாழ்வாதாரத்திற்காக தனது கணவர் தீனதயாளனிடம் ஜீவனாம்சம் வழங்கிட கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் மீனாட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டு மீனாட்சிக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிடப்பட்டது. 

கொலை செய்த தந்தை, மகன்

அதனைத் தொடர்ந்து கடந்த 25.02.2017-ம் தேதி மீனாட்சி கணவர் தீனதயாளன் வீட்டிற்கு ஜீவனாம்சம் கேட்க சென்றுள்ளார். அப்போது அவரது கணவர் தீனதயாளன் மற்றும் தீனதயாளனின் இரண்டாவது மனைவியின் மகன் செந்தில்குமார் ஆகிய இருவரும் சேர்ந்து மீனாட்சியை அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர். இதனை அறிந்த மீனாட்சியின் மகன் நாகரத்தினம் இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கொலை குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்கின் குற்றவாளிகளான தீனதயாளன் மற்றும் செந்தில்குமார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். 

முதல் குற்றவாளி உயிரிழப்பு 

இவ்வழக்கின் அப்போதைய விசாரணை அதிகாரியான மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளர் அழகேசன் குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். மேற்படி வழக்கின் விசாரணையானது மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இவ்வழக்கின் முதல் எதிரியான மீனாட்சியின் கணவர் தீனதயாளன் கடந்த 2022-ம் ஆண்டு வயது முப்பின் காரணமாக உயிரிழந்தார்.

ஆயுள் தண்டனை விதிப்பு 

இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பானது தற்போது வெளியாகி குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவ்வழக்கினை விசாரித்த அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகுமாரி இவ்வழக்கின் மற்றொரு குற்றவாளியான செந்தில்குமாரை குற்றவாளி என தீர்மானித்து, மேற்படி குற்றவாளிக்கு ஆயுள் சிறைதண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதமும் விதித்தார். அபராத தொகையினை கட்டத்தவறும்பட்சத்தில் மேலும் ஒர் ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். 

 

எஸ்.பி.பாராட்டு

இதனை தொடர்ந்து வழக்கின் குற்றவாளி செந்தில்குமாரை கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ராம.சேயோன் ஆஜராகி சிறப்பாக வாதாடினர். வழக்கினை தண்டனையில் முடிக்க சிறப்பாக பணியாற்றிய அரசு வழக்கறிஞர் ராம.சேயோன், மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் நீதிமன்ற அலுவலாற்றிய காவலர் மாரிமுத்து ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.ஸ்டாலின் வெகுவாக பாராட்டியுள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவுக்கு ஜாக்பாட்! அதிக விலைக்கு ஏலம் போன கேமரூன் கீரின்..ஐபிஎல் மினி ஏலம்..
IPL Auction 2026 LIVE: பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவுக்கு ஜாக்பாட்! அதிக விலைக்கு ஏலம் போன கேமரூன் கீரின்..ஐபிஎல் மினி ஏலம்..
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவுக்கு ஜாக்பாட்! அதிக விலைக்கு ஏலம் போன கேமரூன் கீரின்..ஐபிஎல் மினி ஏலம்..
IPL Auction 2026 LIVE: பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவுக்கு ஜாக்பாட்! அதிக விலைக்கு ஏலம் போன கேமரூன் கீரின்..ஐபிஎல் மினி ஏலம்..
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
Embed widget