மேலும் அறிய

சின்ன பந்தல்... செல்ல விநாயகர்... பிரம்மாண்ட சிலைகளை ஓரங்கட்டிய குட்டிஸ் விநாயகர்..

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை ஓரங்கட்ட வைக்கும் விதமாக குட்டிஸ்கள் தங்கள் கையால் செய்த விநாயகர் சிலை வழிபாடு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மயிலாடுதுறை: நாடெங்கும் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் சூழலில், வண்ணமயமான பிரம்மாண்ட சிலைகளுக்கு மத்தியில் மயிலாடுதுறை அருகே சிறுவர்கள் தங்கள் பிஞ்சு கரங்களால் களிமண்ணை பிசைந்து செய்த விநாயகர் சிலைகள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. பிரம்மாண்டமான வடிவங்களை விடவும், சிறார்கள் களிமண்ணில் வடித்த விநாயகருக்கு தனி மவுசும் ஆன்மீக ஈர்ப்பும் இருப்பது விநாயகர் சதுர்த்தி விழாவின் சிறப்பம்சமாக மாறியுள்ளது.

மாவட்டமெங்கும் 600 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விழாக்குழுவினராலும் பொதுமக்களாலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மயிலாடுதுறை நகரில் உள்ள முக்கிய ஆலயங்கள் மற்றும் சந்திப்புகளில் சிங்கமுக விநாயகர், ஐந்து தலை நாக விநாயகர், கற்பக விநாயகர், கஜமுக விநாயகர் எனப் பல்வேறு அழகிய வடிவங்களில் சுமார் 10 அடி உயரத்திற்கும் மேலான பிரம்மாண்ட சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. காவல்துறையின் உரிய அனுமதியுடன் மாவட்டம் முழுவதும் சுமார் 600 விநாயகர் சிலைகள் வரை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு படையல்களுடன் பொதுமக்கள் பக்திச் பரவசத்துடன் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

விவசாயம் செழிக்க மழை வேண்டி சிறார்களின் களிமண் விநாயகர்

பெரியவர்கள் அமைத்துள்ள பிரம்மாண்ட பந்தல்களுக்கு இடையே, மயிலாடுதுறை அருகே உள்ள பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் காட்டிய ஆன்மீக ஆர்வமும் சமூக அக்கறையும் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் தாங்களாகவே களிமண்ணை எடுத்து வந்து தங்கள் பிஞ்சு விரல்களால் விநாயகர் சிலையை அழகாக வடித்தெடுத்துள்ளனர். பின்னர் தாங்களே சிறிய பந்தல் அமைத்து, அந்த களிமண் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து, மலர்களாலும் படையல்களாலும் அலங்கரித்து உற்சாகத்துடன் வழிபாடு நடத்தினர். 

மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செழிக்க முடியும், விவசாயம் செழித்தால் மட்டுமே அனைவருக்கும் உணவு கிடைக்கும் என்பதை உணர்ந்த அந்தச் சிறுவர்கள், தங்களுக்குச் சாப்பாடு அளிக்கும் விவசாயம் செழிக்க மழை பெய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் இந்த வழிபாட்டை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர். சிறுவர்களின் இந்த நெகிழ்ச்சியான வழிபாட்டை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் பதிவிட, அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களின் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

கடற்கரையில் கரைக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்

விநாயகர் சதுர்த்தி வழிபாடுகள் நிறைவுற்றதும், பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. அந்த வகையில் சங்கரன்பந்தல் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அனைத்து விநாயகர் சிலைகளும் தரங்கம்பாடி கடற்கரைக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்படவுள்ளன.

அதேபோல் மயிலாடுதுறை கோட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகள் அனைத்தும் வரும் 15-ஆம் தேதி ஊர்வலமாகப் புறப்பட்டு நீர்நிலைகள் மற்றும் பூம்புகார் கடலில் கரைக்கப்பட இருக்கின்றன. சீர்காழியில் உப்பனாற்றிலும் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட உள்ளது. விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் விசர்ஜன நிகழ்வுகள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதிசெய்யும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகா பிரியா தலைமையில் 600-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

வானை பிளந்த பக்தி கோஷம்... புனித நீர் தெளிப்பு: திருக்களாச்சேரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் பெருவிழாவில் பக்தர்கள் பரவசம்..!
வானை பிளந்த பக்தி கோஷம்... புனித நீர் தெளிப்பு: திருக்களாச்சேரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் பெருவிழாவில் பக்தர்கள் பரவசம்..!
குமுறல் முடிந்தது... குளிர்ச்சி தொடங்கியது! மயிலாடுதுறை எல்லையைத் தொட்டது மேட்டூர் நீர்!
குமுறல் முடிந்தது... குளிர்ச்சி தொடங்கியது! மயிலாடுதுறை எல்லையைத் தொட்டது மேட்டூர் நீர்!
முதல்வர் தனிப்பிரிவுக்கு சென்ற புகார்... ரூ.50 ஆயிரம் லஞ்ச விவகாரத்தில் போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்!
முதல்வர் தனிப்பிரிவுக்கு சென்ற புகார்... ரூ.50 ஆயிரம் லஞ்ச விவகாரத்தில் போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்!
வங்கக்கடல் வழியே இலங்கைக்கே கடத்த மெகா திட்டம்.. காரைக்காலில் சிக்கிய போதைப்பொருள் மன்னன் பாக்யராஜ்!
வங்கக்கடல் வழியே இலங்கைக்கே கடத்த மெகா திட்டம்.. காரைக்காலில் சிக்கிய போதைப்பொருள் மன்னன் பாக்யராஜ்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Special Trains : சென்னைக்கு திரும்ப சூப்பர் சான்ஸ்.! மானாமதுரை, நாகர்கோவிலில் இருந்து சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னைக்கு திரும்ப சூப்பர் சான்ஸ்.! மானாமதுரை, நாகர்கோவிலில் இருந்து சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
Durai Vaiko: மக்கள் ஓட்டு பிச்சையா? .. அதுகூட ஸ்டாலினுக்கு கிடைக்கலையே.. திமுகவை விளாசிய துரை வைகோ!
Durai Vaiko: மக்கள் ஓட்டு பிச்சையா? .. அதுகூட ஸ்டாலினுக்கு கிடைக்கலையே.. திமுகவை விளாசிய துரை வைகோ!
Chennai Radial Road: வெள்ளத்திற்கு நோ..! ரூ.450 கோடி, 2KM பாலம், பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் மெகா திட்டம்
வெள்ளத்திற்கு நோ..! ரூ.450 கோடி, 2KM பாலம், பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் மெகா திட்டம்
Vanni Arasu: என் ஊருக்கே 80 வருஷமா பஸ் இல்ல.. வன்னி அரசு பிறந்த கிராமத்துக்கு முதல் முறையாக பஸ் சேவை!
Vanni Arasu: என் ஊருக்கே 80 வருஷமா பஸ் இல்ல.. வன்னி அரசு பிறந்த கிராமத்துக்கு முதல் முறையாக பஸ் சேவை!
Asia Cup: மீண்டும் பாகிஸ்தானிற்கு நோஸ் கட் - ஆசிய கோப்பையை பெற மறுத்த இந்திய அணி, BCCI ஆர்டர்
மீண்டும் பாகிஸ்தானிற்கு நோஸ் கட் - ஆசிய கோப்பையை பெற மறுத்த இந்திய அணி, BCCI ஆர்டர்
Gold and silver rate today : விநாயகர் சதுர்த்தியில் குஷி.! தங்கம் விலை அதிரடியாக குறைந்தது- இன்றைய விலை இதோ..
விநாயகர் சதுர்த்தியில் குஷி.! தங்கம் விலை அதிரடியாக குறைந்தது- இன்றைய விலை இதோ..
TN Weather News: கனமழைக்கு அதிக வாய்ப்பு - 13 மாவட்டங்களுக்கு இன்று அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
கனமழைக்கு அதிக வாய்ப்பு - 13 மாவட்டங்களுக்கு இன்று அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Mahindras Diesel SUV: மஹிந்த்ராவின் டயங்கரமான 4 டீசல் எஸ்யுவிக்கள் - எந்தெந்த மாடல் எப்போது? விலை, அம்சங்கள்
மஹிந்த்ராவின் டயங்கரமான 4 டீசல் எஸ்யுவிக்கள் - எந்தெந்த மாடல் எப்போது? விலை, அம்சங்கள்
Embed widget