மேலும் அறிய

Tungsten Protest: டங்க்ஸ்டன் எதிர்ப்பு... ஸ்தம்பித்த மதுரை... மக்களால் திக்குமுக்காடிய தமுக்கம்

Tungsten Protest in Madurai: ஆதரவாக தன்னெழுச்சி போராட்டமாக மாறிய டங்க்ஸ்டன் எதிர்ப்பு போராட்டம் . சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் சாரை சாரையாக அணிவகுத்த டிராக்டர்கள் மற்றும் வாகனங்கள்.

போராட்டத்தை அறிந்து மத்திய அரசு உடனடியாக இத்திட்டத்தை ரத்து செய்வதற்கான, நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.
 

தபால் நிலையம் முன்பாக போராட்டம்

 
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி , நரசிங்கம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு ஏலம் விடுத்துள்ளது. இந்நிலையில் மத்திய, மாநில அரசு டங்க்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய கோரியும், மேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முல்லை பெரியாறு ஒரு போகபாசன விவசாய பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என கோரி மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை மேலூர் முல்லைப் பெரியாறு, ஒரு போக பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் டங்க்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய கோரி இன்று மதுரை மேலூர் பகுதியில் இருந்து மதுரை மாநகர் தமுக்கம் தலைமை தபால் நிலையம் முன்பாக போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.
 
 
இதனையடுத்து இன்று காலை 10 மணி அளவில் மதுரை மேலூர் பகுதியில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக வணிகர்கள் கடைகளை அடைத்து கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மேலூர் தெற்குதெரு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் இளைஞர்கள் பெண்கள் மாணவர்கள் நடந்தபடி பேரணியாக வந்து நரசிங்கம்பட்டி பகுதியில் கூடியிருந்த விவசாயிகளோடு சேர்ந்து மதுரை மேலூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடை பயணத்தை மேற்கொண்டனர். டங்க்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய கோரி நடைபெற்ற இந்த நடை பயண பேரணியில்  விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என திருச்சி தேசிய நெடுஞ்சாலை முழுவதிலும் பத்தாயிரத்திற்கு மேற்பட்டோர் பேரணியாக வருகை தந்த போது மத்திய அரசுக்கு எதிராகவும் மாநில அரசு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு BAN TUNGSTEN என்ற பதாகைகளை ஏந்தியவாறு 20 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்தனர்.
 
போராட்டம் பல வடிவங்களில் நடத்துவோம் என பெண்கள் விவசாயிகள் தெரிவித்தனர்
 
இதனையடுத்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமுக்கம் பகுதியில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நேரடியாக காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்பாகவும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்ற நிலையில் மூன்று முறை காவல்துறை தரப்பில் மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்பாக போராட்டத்தை விடுத்து கலைந்து சென்றனர். மேலும் போராட்டக் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் பேசிய போது டங்க்ஸ்டன் திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்யும் வரை நாம் தொடர்ந்து போராட்டத்தை நடத்தவுள்ளோம் எனவும் இந்தப் போராட்டத்தை அறிந்து மத்திய அரசு உடனடியாக இத்திட்டத்தை ரத்து செய்வதற்கான, நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர். டங்ஸ்யன் திட்டத்தை நிறைவேற்றினால்  மேலூர் மக்கள் உணவுக்கு கூட வழியில்லாமல் வேறு பகுதிகளுக்கு செல்லும் நிலை ஏற்படும் எனவே இந்த திட்டத்தை உடனடியாக ரத்து செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தங்களது போராட்டம் பல வடிவங்களில் நடத்துவோம் என பெண்கள் விவசாயிகள் தெரிவித்தனர்
 
 

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Embed widget