டிடிவி தினகரன் பரபரப்பு பேச்சு: NDA கூட்டணியில் ஓபிஎஸ்-க்கு அழைப்பு! விஜய்-க்கு பதிலடி!!
உங்கள் திரைப்படங்களில் கள்ள டிக்கெட் விற்பனையில் நடைபெறும் ஊழல்களை தடுத்து நிறுத்துங்கள் என விஜய் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் விமர்சனம் செய்தார் டிடிவி தினகரன்.
நான் தேர்தலில் போட்டியிடவில்லை, என்னுடன் இருப்பவர்களை அமைச்சர்களாக ஆக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. "ஸ்லீப்பர் செல் எல்லாம் தற்போது லைவ் செல்லாக மாறிவிட்டார்கள் - டிடிவி தினகரன்
தேனியில் அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளரை சந்தித்து பேசினார். ஊழல் ஆட்சியில் இருந்து மீட்டெடுத்து தமிழகத்தில் அம்மாவின் ஆட்சியை கொண்டு வர பிரதமர் மோடி எங்களுக்கு உறுதி அளித்துள்ளார். கங்காரு குட்டி போல சுற்றிக்கொண்டு உள்ள ஒருவரை (உதயநிதி ஸ்டாலின்) முதலமைச்சர் பட்டம் சூட்ட காத்திருக்கிறது திமுக.
ஊழல் என்றாலே திமுக தான் நியாபகம் வரும் அறிவியல் பூர்வமாக ஊழல் செய்பவர்கள் எங்களை பார்த்து குற்றச்சாட்டு கூறுகிறார்கள். தமிழகத்தில் திமுக ஆட்சியில் 3 வயது பெண் முதல் மூதாட்டி வரை தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை, போதை பொருள் கடத்துவதற்கு பெரிய மாநிலமாக தமிழகம் தான் உள்ளது.
ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகம், தாலிக்கு தங்கம் திட்டம், கணினி திட்டம், மிதிவண்டி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் திமுக அரசு கிடப்பில் போடப்பட்டுள்ளது. பங்காளி சண்டை இல்லாத குடும்பங்கள் இல்லை, எங்கள் வீட்டு குடும்ப விஷயங்களை நான் மனம் விட்டு பேசினேன் தற்போது அம்மாவின் ஆட்சி அமைய ஒன்றிணைந்துள்ளோம். நாங்கள் பிரிந்து தேர்தலை சந்தித்தால் 2019 எம்.பி தேர்தல், 2024 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்றது. நாங்கள் ஒன்றாக போட்டியிட்டு இருந்தால் மேலும் 20- 25 தொகுதியில் வெற்றிப் பெற்று இருப்போம். அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று தான் கூறினேன் தவிர ஒரே கட்சியில் இணைய வேண்டும் என கூறவில்லை. அம்மாவின் பெயரில் கொடி வைத்து தமிழகம் முழுவதும் எடுத்து சென்றுள்ளோம்.
அதனை விடுவதற்கு மனம் இல்லை. கூட்டணியில் இணைவதற்கு ஓ.பன்னீர்செல்வம்தான் நல்ல முடிவு எடுக்க வேண்டும். சரியான முடிவு எடுத்து எங்களுடன் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. என்.டி.ஏ கூட்டணியில் மீண்டும் இணைவதற்கு தேனியில் இருந்து நான் அழைப்பு விடுக்கிறேன் என தெரிவித்தார். அவரது வளர்ச்சியில் எங்களுக்கும் பங்கு உள்ளது. அவர் சென்ற உயரங்களுக்கு நானும் ஒரு காரணமாக இருந்தேன், எனது கோரிக்கை ஏற்று முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். யார் பேச்சையே கேட்டு தர்ம யுத்தம் நடத்தினர். அப்போது மட்டும் அவர் தர்ம யுத்தம் நடத்தாமல் இருந்து இருந்திருந்தால் மீண்டும் 2024 இல் முதலமைச்சராக இருந்து இருப்பார். அம்மாவின் இடத்தில் எங்களுக்கு மோடி தான் இருக்கிறார்.
தமிழ்நாட்டை மோடி அவர்கள் தத்தெடுத்து இந்தியாவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற நாங்கள் துணை நிற்போம்நான் தேர்தலில் போட்டியிடவில்லை எனது உடன் இருப்பவர்களை வாய்ப்பு இருந்தால் அமைச்சர்களாக ஆக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. "ஸ்லீப்பர் செல் எல்லாம் தற்போது லைவ் செல்லாக மாறிவிட்டார்கள் என தெரிவித்தார். எங்கள் தலைவர் எம்ஜிஆர் படத்தை வைத்து விட்டு எங்களின் கட்சியை ஊழல் கட்சி என்கிறார் விஜய். சினிமா வசனம் போல் பேசுகிறார். உங்கள் திரைபடத்தில் கள்ள டிக்கெட் விற்பனையில் நடைபெறும் ஊழல்களை தடுத்து நிறுத்துங்கள், முதலில் வீட்டை விட்டு வெளியே வாருங்கள் நாங்கள் அமைதியாக இருந்தால் நீங்கள் எதுவேண்டுமானாலும் பேசலாமா. நாங்கள் வெகுண்டெழுந்தால் என்ன ஆவது விஜயகாந்த் போல் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று தான் கூறினேன், எம்.ஜி.ஆர் போன்று வருவார் என்று நான் எங்கும் சொல்லவில்லை என தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















