மேலும் அறிய

ராமநாதபுரத்தில் இருசக்கர வாகனத்தில் நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து சென்ற 3 பேர் கைது

’’3 நாட்டு வெடிகுண்டுகளையும் இரு சக்கர வாகனமும் பறிமுதல்’’

வழக்கமாக நடக்கும் வாகன சோதனையின்போது, சிலர் தலைக்கவசம் அணியாமல் வந்து திருதிருவென முழிப்பதுண்டு, முகக்கவசம் அணியாதவர்களும் போலீசாரை கண்டு அச்சமடைந்து அவர்களிடம் சிக்காமலிருக்க வந்த பாதையிலேயே திரும்பிச் செல்வதையும் பார்த்திருக்கிறோம். தாங்கள் ஓட்டிவரும் இருசக்கர வாகனத்திற்கு லைசென்ஸ், இன்ஸ்யூரன்ஸ்  உள்ளிட்ட ஆவணங்களின் ஜெராக்ஸ் காப்பி இல்லாமல் கூட போலீசாரிடம் விழிபிதுங்கி நிற்பதும் வாடிக்கை. ஆனால் காய்கறி வாங்கும் கூடை பையில் சர்வசாதாரணமாக 3 நாட்டு வெடிகுண்டுகளை இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்த 3 இளைஞர்கள் போலீசார் நடத்திய  வாகன சோதனையின்போது நிற்காமல் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராமநாதபுரத்தில் இருசக்கர வாகனத்தில் நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து சென்ற 3 பேர் கைது

ராமநாதபுரத்தில், நேற்று மாலை  வழக்கமாக நடைபெற்ற வாகன சோதனையின்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை போலீசார் மறித்தனர். ஆனால்,  இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச்செல்ல நினைத்து தாறுமாறாக வாகனத்தை ஓட்டி சென்றுள்ளனர். இதனை அடுத்து விறுவிறுப்பாக செயல்பட்ட  போலீசார், நிற்காமல் வேகமாக சென்ற இரு சக்கர வாகனத்தை பின்தொடர்ந்து விரட்டிச்  சென்றனர். அப்போது அவர்கள் 3 பேரும் ராமநாதபுரம் நாகநாதபுரம் புதுத்தெரு பகுதியில் உள்ள வீட்டின் முன் வாகனத்தை நிறுத்தி உள்ளனர்.  அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளனர்.


ராமநாதபுரத்தில் இருசக்கர வாகனத்தில் நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து சென்ற 3 பேர் கைது

இதனால் அவர்களின் வாகனத்தை சோதனையிட்டபோது அதில் 3 நாட்டு வெடிகுண்டுகள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் ஸ்கூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், நாகநாதபுரம் புதுத்தெருவை சேர்ந்த முகம்மது மீராசா மகன்கள் நியாஸ்கான் (40), முகம்மது ரிபாயுன் (38), முகம்மது ஜகாங்கீர் (35) ஆகிய 3 பேரையும் கைது செய்து கேணிக்கரை போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் நியாஸ்கான் பெங்களுருவில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ஜகாங்கீர் சென்னை மண்ணடி பகுதியில் ஜூஸ்கடை நடத்தி வருகிறார். ரிபாயுன் ராமநாதபுரம் சாலைத்தெருவில் உள்ள வணிக வளாகத்தில் கடை நடத்தி வருகிறார். இதுபற்றி தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் நேரில் வந்து 3 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார். மேலும், ராமநாதபுரம் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

ராமநாதபுரத்தில் பட்டப்பகலில் எதார்த்தமான முறையில் வழக்கம்போல் நடத்திய  சோதனையில், நாட்டு வெடிகுண்டுகளை சகோதரர்கள் மூன்று பேர்  கொண்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த வெடிகுண்டுகளை இவர்கள் எதற்காக கொண்டு சென்றனர் இது எங்கு தயாரிக்கப்பட்டது. வேறேதும் இயக்கத்துடன் தொடர்புடையவர்களா  என்பது குறித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ராமநாதபுரத்தில் இருசக்கர வாகனத்தில் நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து சென்ற 3 பேர் கைது
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியில் இன்று மாலை கேணிக்கரை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மறித்து சோதனை செய்ய  முயன்றுள்ளனர். ஆனால், இருசக்கர வாகனத்தில் வந்த  3 நபர்கள் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்று உள்ளனர். இதையடுத்து  போலீசார் வேகமாக சென்ற இரு சக்கர வாகனத்தை பின்தொடர்ந்து சென்று மறித்து விசாரணையில் ஈடுபட்டு அவர்கள்  வந்த இருசக்கர வாகன சோதனை செய்தபோது அதில் மூன்று நாட்டு வெடிகுண்டுகள் இருந்துள்ளது. இதையடுத்து நாட்டு வெடிகுண்டுகளையும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து சின்னக்கடை நடுத்தெருவில் சேர்ந்த ரியாஸ்கான், முகமது ரிபாயின், முகமது ஜஹாங்கீர் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!
மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget