சிறந்த காளைக்கு டாடா ஏசி, சிறந்த மாடுபிடி வீரருக்கு ஆட்டோ பரிசு - தொட்டப்பநாயக்கனூர் ஜல்லிக்கட்டில் அசத்தல் !
உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஜமீன் ஜக்கம்மாள் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமரிசையாக நடைபெற்றது.
மதுரை ஜல்லிக்கட்டு
தமிழர் திருநாளாக தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை உலகெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே கரும்புகள், சொந்த ஊர் திரும்பும் மக்கள், கோயிலில் குவியும் மக்கள் ஆகியோருக்கு நிகராக மக்கள் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு போட்டி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளே.
- ஜல்லிக்கட்டு போட்டிக்காக ரூ.13 லட்சம் நிதி வழங்கிய 8 கிராம மக்கள் - மதுரையில் நெகிழ்ச்சி
மதுரையில் நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் புகழ் பெற்றது ஆகும். இங்கு நடைபெறும் போட்டிகளை காண தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் திரளாக படையெடுத்து செல்வார்கள். இந்நிலையில் இந்தாண்டு கூடுதல் விருந்தாக கீழக்கரை பிரமாண்ட மைதானத்திலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த சூழலில் மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள பழமை வாய்ந்த தொட்டப்பநாயக்கணூர் ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டிக்காக - 8 கிராம மக்கள் ஒன்று திரண்டு சுமார் 13 லட்சத்து 73 ஆயிரம் ரொக்கம் நிதி உதவி வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets